30 நிமிடத்தில் முடிந்த கோவை-சென்னை வந்தே பாரத் ரெயில் முன்பதிவு..

Published:

30 நிமிடத்தில் முடிந்த கோவை-சென்னை முன்பதிவால் வந்தே பாரத் ரெயிலில் பயணிக்க பயணிகள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்

FB IMG 1680926340685 - 2026
#image_title
  •  சென்னை-கோவை இடையே
  • 9-ந்தேதி முதல் பயணிகள் வந்தே பாரத் ரெயில் சேவை நடைமுறைக்கு வருகிறது.
  • மொத்தம் 8 பெட்டிகளுடன் வந்தே பாரத் ரெயில் இயக்கப்பட உள்ளது.

சென்னை-கோவை வந்தே பாரத் ரெயில் சேவையை பிரதமர் மோடி இன்று மாலை தொடங்கி வைக்க உள்ளார். இதைத்தொடர்ந்து, 9-ந்தேதி முதல் பயணிகள் ரெயில் சேவை நடைமுறைக்கு வருகிறது. இதற்கான முன்பதிவு, நேற்று காலை 8 மணியளவில் தொடங்கியது. இணையதளம் மற்றும் செல்போன் ஆப் மூலமாக பயணிகள் விறுவிறுப்பாக முன்பதிவு செய்தனர். அதன்படி, முன்பதிவு தொடங்கிய 30 முதல் 40 நிமிடங்களிலேயே முன்பதிவு முடிந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதேபோல, சென்னையில் இருந்து 5 மணி 50 நிமிடங்களில் கோவைக்கு செல்ல முடியும். இதில், குளிர்சாதன முதல்நிலை இருக்கை டிக்கெட் கட்டணம் ரூ.2,310 ஆகவும், 2-ம் நிலை இருக்கை கட்டணம் ரூ.1,215 ஆக வசூலிக்கப்பட்டு உள்ளது. உணவின்றி டிக்கெட் கட்டணம் முதல்நிலை இருக்கைக்கு ரூ.2,116 ஆகவும், 2-ம் நிலை இருக்கைக்கு ரூ.1,057 ஆகவும் வசூலிக்கப்பட்டது.

ALSO READ:  மதுரை டிவிஎஸ் நகர் கோதண்ட ராமர் கோவிலில் மகா சம்ப்ரோக்ஷணம்!

இதேபோல, குளிரூட்டப்பட்ட இந்த ரெயிலில் 450 இரண்டாம் நிலை இருக்கைகளும், 56 முதல்நிலை இருக்கைகளும் உள்ளது. மொத்தம் 8 பெட்டிகளுடன் இந்த ரெயில் இயக்கப்பட உள்ளது.

Sakthi Paramasivan.k
Sakthi Paramasivan.k
Media News Reporter, Rajapalayam

Related articles

Recent articles

spot_img