
“தமிழகத்தில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருகிறது; பொது இடங்களில் காய்ச்சல் முகாம் நடத்தப்பட வேண்டும்” என்று சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கவனயீர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார்.
முகக்கவசம் அணிவதில் அரசின் நிலைப்பாட்டை தெரியப்படுத்த வேண்டும் என்றும், கொரோனா பரவலை தடுக்க தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தினார்.
சட்டப்பேரவையில் இதற்குப் பதிலளித்துப் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன் “தமிழகத்தில் மட்டுமில்லை, பிற மாநிலங்களிலும் கொரோனா தொற்று அதிகரித்துள்ளது என்று விளக்கம் அளித்தார். மேலும், “அனைத்து மருத்துவமனைகளிலும் முகக்கவசம் கட்டாயம் ஆக்கப் பட்டுள்ளது என்றும், “கொரோனா பரவலை தடுக்க அனைவரும் முகக்கவசம் அணிவது நல்லது என்றும் கூறினார்.
கொரோனா பாதிப்பு அத