திஹார் சிறையில் ஸ்ரீசாந்தை கொல்ல முயற்சி நடந்ததாக குடும்பத்தினர் தகவல்

Sreesanthஐபில் ஸ்பாட் பிக்ஸிங் முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டு திஹார் சிறையில் அடைக்கப்பட்டிருந்தபோது ஸ்ரீசாந்தைக் கொல்ல முயற்சி நடந்ததாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். இந்திய கிரிக்கெட் கட்டுப் பாட்டு வாரியம் நடத்தும் ஐபிஎல் 20க்கு 20 கிரிக்கெட் போட்டியில், ஸ்பாட் பிக்ஸிங்கில் ஈடுபட்டதாக கடந்த 2013 ஆம் ஆண்டு ஸ்ரீசாந்த் மும்பை போலீசாரால் கைது செய்யப்பட்டார். அவர் கைது செய்யப்படும் போது ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடி வந்தார். ஸ்ரீசாந்தின் சகோதரி கணவர் மதுபாலகிருஷ்ணன். பிரபல மலையாளத் திரைப்படப் பாடகரான இவர், இன்று மலையாள தொலைக்காட்சி சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் இந்த பகீர் தகவலைத் தெரிவித்துள்ளார். அதில் “திஹார் சிறையில் ஸ்ரீசாந்தைக் கொல்ல முயற்சி நடந்தது. கொலைக் குற்றவாளியான தாதா ஒருவர் ஸ்ரீசாந்தை கூர்மையான கதவு போல்ட் மூலம் தாக்க முயன்றார். அதிர்ஷ்டவசமாக இதில் காயமின்றி ஸ்ரீசாந்த் தப்பினார். இருப்பினும் இந்தச் சம்பவம் தொடர்பாக ஸ்ரீசாந்தோ அவரது குடும்பத்தினரோ சிறை அதிகாரிகளிடம் புகார் எதுவும் அளிக்கவில்லை. சிறையில் இருந்து வெளியே வந்த பிறகு இந்தத் தகவலை ஸ்ரீசாந்த் எங்களிடம் தெரிவித்தார்” என்று கூறினார். இருப்பினும் இந்தத் தகவல் தொடர்பாக ஸ்ரீசாந்த் எதுவும் யாரிடமும் கூறவில்லை.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

சிவசைலநாதர் பரமகல்யாணி எழுந்தருள, மீன்பிடி திருவிழா!

ஸ்ரீ சிவசைலநாதரும் ஸ்ரீ பரமகல்யாணி அம்பாளும் மீன்பிடிக்கக் கிளம்பும் திருவிழா!

பஞ்சாங்கம் மே 2 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பக்தர்கள் திரளில் மதுரை – வைகை நதியில் இறங்கிய கள்ளழகர்!

மதுரையில் வைகை நதியில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

பஞ்சாங்கம் மே 1 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

மதுரையில் கள்ளழகர் தங்கக் குதிரையில் எழுந்தருளல்!

இதை தொடர்ந்து ராமராயர் மண்டகப்படியில் கள்ளழகரை மனம் குளிர்விக்கும் தீர்த்தவாரி நிகழ்வும் நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு மதுரை மாநகரே விழாக்கோலாம் பூண்டுள்ளது.

Topics

சிவசைலநாதர் பரமகல்யாணி எழுந்தருள, மீன்பிடி திருவிழா!

ஸ்ரீ சிவசைலநாதரும் ஸ்ரீ பரமகல்யாணி அம்பாளும் மீன்பிடிக்கக் கிளம்பும் திருவிழா!

பஞ்சாங்கம் மே 2 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பக்தர்கள் திரளில் மதுரை – வைகை நதியில் இறங்கிய கள்ளழகர்!

மதுரையில் வைகை நதியில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

பஞ்சாங்கம் மே 1 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

மதுரையில் கள்ளழகர் தங்கக் குதிரையில் எழுந்தருளல்!

இதை தொடர்ந்து ராமராயர் மண்டகப்படியில் கள்ளழகரை மனம் குளிர்விக்கும் தீர்த்தவாரி நிகழ்வும் நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு மதுரை மாநகரே விழாக்கோலாம் பூண்டுள்ளது.

பஞ்சாங்கம் ஏப்ரல் 30 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

நாளை, விடுமுறை கால சிறப்பு ரயில்கள்! தவற விட்டுடாதீங்க!

பள்ளி மாணவர்கள் கோடைகால விடுமுறை மற்றும் மே தினம் தொடர் விடுமுறை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது

ஆண்டாள் சூடிய மாலை கள்ளழகருக்குச் சாற்ற, புறப்பாடு!

இன்று மதியம் ஸ்ரீ வில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார் சூடிய மாலை கள்ளழகர்க்குச் சாற்ற புறப்பாடு கண்டருளியது.

Entertainment News

Popular Categories