ஸ்ரீவில்லிபுத்தூரில் மண் மற்றும் மணல் கடத்தல் அபாரம்..

IMG 20230505 WA0075 - 2026
#image_title

ஸ்ரீவில்லிபுத்தூரில் சட்டவிரோதமாக மண் மற்றும் மணல் அள்ளுவதை தடுத்த அதிமுக முன்னாள் அமைச்சர் மீது வாகனத்தை ஏற்றுவது போல் கொலை முயற்சி நடைபெற்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் பெரியகுளம் கண்மாயில் சட்டவிரோதமாக மண் மற்றும் மணல்களை இன்று பத்துக்கும் மேற்பட்ட ஜேசிபி இயந்திரங்களின் உதவியுடன் 50-க்கும் மேற்பட்ட டிராக்டர்களில் மண்ணள்ளிக் கொண்டு நகர் பகுதியில் அதிவேகமாக வருவதாகவும் சாலையில் செல்பவர்கள் அச்சத்துடன் செல்வதாகவும் பொது மக்களிடையே புகார் எழுந்தது.

இதனை அடுத்து பெரியகுளம் கண்மாய்க்கு சென்ற அதிமுக முன்னாள் அமைச்சர் இன்பத்தமிழன் தலைமையில் அதிமுகவை சேர்ந்த மாணவரணி செயலாளர் பெருமாள்பிச்சை மற்றும் அதிமுகவினர் மண் மற்றும் மணல் அள்ளுவதை தடுத்தனர்.

அப்போது மண் அள்ளுபவர்கள் முன்னாள் அமைச்சர் இன்பத்தமிழனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு அதிமுகவினரை தாக்க முற்பட்டு அப்படித்தான் மண் அள்ளுவோம் உங்களால் முடிந்ததை பாருங்கள் என்று மிரட்டல் விடுத்தனர்.

இதனை அடுத்து வட்டாட்சியர்,காவல் துறையினருக்கு தகவல் கொடுத்தும் சம்பவ இடத்திற்கு அரசு அதிகாரிகள் தற்போது வரை வரவில்லை

பின்னர் மண் அள்ளி வந்த வாகனங்களை தடுத்து நிறுத்தி சாலையில் முன்னாள் அமைச்சர் இன்பத்தமிழன் உட்கார்ந்திருந்த போது வாகனத்தை வைத்து ஏற்றுவது போல் கொலை முயற்சி செய்தது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.பின்னர் மண் மற்றும் மணல் அள்ளுவது சிறிது நேரம் நிறுத்தப்பட்டது.

இது குறித்து முன்னாள் அமைச்சர் இன்பத்தமிழன் நீதிமன்றத்தை நாடுவதாக சொல்லிவிட்டு சென்ற பிறகு மீண்டும் மண் மற்றும் மணல் கொள்ளை அடிக்கும் சம்பவம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தகுந்த வைத்தியம் தேவை!

ஒரு பெண்மணி கால்நடை மருத்துவரிடம் வந்தார், அவருடன் ஒரு உயர் இன...

திருப்பரங்குன்றம் மலை மீது தொழுகைக்குச் சென்றவர்கள் போலீஸாருடன் வாக்குவாதம்!

திருப்பரங்குன்றம் மலைப்பாதையில் பரபரப்பு; மலைமேல் நெல்லி தோப்பில் ரம்ஜான் தொழுகைக்குச் சென்ற இஸ்லாமியர்கள்பெயர் முகவரி பதிவு செய்ய எதிர்ப்பு போலீசாருடன் வாக்குவாதம்!

பஞ்சாங்கம் மார்ச் 21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

துரந்தர் 3.0 படம் எடுக்கலாம்! அவ்வளவு விஷயங்கள் கொட்டிக் கிடக்கிறது இதில்!

துல்லிய தகவல்களும் மிக ஆழமான வலைப் பின்னல்களும் கச்சிதமாக செயல்பட்டதால் இவர்களை இந்திய உளவுத்துறையால் கைது செய்ய முடிந்தது.  அவர்களுக்கு பாராட்டுகள். 

Topics

பஞ்சாங்கம் மார்ச் 22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தகுந்த வைத்தியம் தேவை!

ஒரு பெண்மணி கால்நடை மருத்துவரிடம் வந்தார், அவருடன் ஒரு உயர் இன...

திருப்பரங்குன்றம் மலை மீது தொழுகைக்குச் சென்றவர்கள் போலீஸாருடன் வாக்குவாதம்!

திருப்பரங்குன்றம் மலைப்பாதையில் பரபரப்பு; மலைமேல் நெல்லி தோப்பில் ரம்ஜான் தொழுகைக்குச் சென்ற இஸ்லாமியர்கள்பெயர் முகவரி பதிவு செய்ய எதிர்ப்பு போலீசாருடன் வாக்குவாதம்!

பஞ்சாங்கம் மார்ச் 21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

துரந்தர் 3.0 படம் எடுக்கலாம்! அவ்வளவு விஷயங்கள் கொட்டிக் கிடக்கிறது இதில்!

துல்லிய தகவல்களும் மிக ஆழமான வலைப் பின்னல்களும் கச்சிதமாக செயல்பட்டதால் இவர்களை இந்திய உளவுத்துறையால் கைது செய்ய முடிந்தது.  அவர்களுக்கு பாராட்டுகள். 

1 முதல் 9ம் வகுப்பு வரை… முழு ஆண்டுத் தேர்வு தேதிகள் விவரம்!

சட்டமன்றத் தேர்தல் நடக்க இருப்பதன் காரணமாக பள்ளி மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வுகள் இந்த ஆண்டு முன்கூட்டியே நடத்தப்படுகின்றன.

சரணாகதி அரசல்ல, சாதுர்யமான அரசு!

இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Entertainment News

Popular Categories