ஸ்ரீவில்லிபுத்தூரில் மண் மற்றும் மணல் கடத்தல் அபாரம்..

IMG 20230505 WA0075 - 2026
#image_title

ஸ்ரீவில்லிபுத்தூரில் சட்டவிரோதமாக மண் மற்றும் மணல் அள்ளுவதை தடுத்த அதிமுக முன்னாள் அமைச்சர் மீது வாகனத்தை ஏற்றுவது போல் கொலை முயற்சி நடைபெற்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் பெரியகுளம் கண்மாயில் சட்டவிரோதமாக மண் மற்றும் மணல்களை இன்று பத்துக்கும் மேற்பட்ட ஜேசிபி இயந்திரங்களின் உதவியுடன் 50-க்கும் மேற்பட்ட டிராக்டர்களில் மண்ணள்ளிக் கொண்டு நகர் பகுதியில் அதிவேகமாக வருவதாகவும் சாலையில் செல்பவர்கள் அச்சத்துடன் செல்வதாகவும் பொது மக்களிடையே புகார் எழுந்தது.

இதனை அடுத்து பெரியகுளம் கண்மாய்க்கு சென்ற அதிமுக முன்னாள் அமைச்சர் இன்பத்தமிழன் தலைமையில் அதிமுகவை சேர்ந்த மாணவரணி செயலாளர் பெருமாள்பிச்சை மற்றும் அதிமுகவினர் மண் மற்றும் மணல் அள்ளுவதை தடுத்தனர்.

அப்போது மண் அள்ளுபவர்கள் முன்னாள் அமைச்சர் இன்பத்தமிழனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு அதிமுகவினரை தாக்க முற்பட்டு அப்படித்தான் மண் அள்ளுவோம் உங்களால் முடிந்ததை பாருங்கள் என்று மிரட்டல் விடுத்தனர்.

இதனை அடுத்து வட்டாட்சியர்,காவல் துறையினருக்கு தகவல் கொடுத்தும் சம்பவ இடத்திற்கு அரசு அதிகாரிகள் தற்போது வரை வரவில்லை

பின்னர் மண் அள்ளி வந்த வாகனங்களை தடுத்து நிறுத்தி சாலையில் முன்னாள் அமைச்சர் இன்பத்தமிழன் உட்கார்ந்திருந்த போது வாகனத்தை வைத்து ஏற்றுவது போல் கொலை முயற்சி செய்தது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.பின்னர் மண் மற்றும் மணல் அள்ளுவது சிறிது நேரம் நிறுத்தப்பட்டது.

இது குறித்து முன்னாள் அமைச்சர் இன்பத்தமிழன் நீதிமன்றத்தை நாடுவதாக சொல்லிவிட்டு சென்ற பிறகு மீண்டும் மண் மற்றும் மணல் கொள்ளை அடிக்கும் சம்பவம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

Entertainment News

Popular Categories