ஜூலை 11 அதிமுக பொதுக்குழுவுக்கு தேர்தல் ஆணையம் அங்கீகாரம்..

images 2023 05 17T122454082 - 2026
#image_title

ஜூலை 11ம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழுவுக்கு தேர்தல் ஆணையம் அங்கீகாரம் அளித்துள்ளது. அதிமுக சட்டவிதிகளை அங்கீகரித்து இணையத்தில் தேர்தல் ஆணையம் வெளியிட்டது.

பொதுச்செயலாளர் தேர்வு மற்றும் பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் செல்லும் என அங்கீகரிக்கப்பட்டுள்ளது. ஜூலை 11ல் அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி அறிவிக்கப்பட்டார். அடுத்த 3 மாத காலத்திற்குள்ளாக அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல், தேர்தலை நடத்துவதற்கு தேர்தல் ஆணையர்களாக பொள்ளாச்சி ஜெயராமன், நத்தம் விஸ்வநாதன் நியமனம் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டிருந்தன.

அதிமுக பொதுக்குழுவில் ஓபிஎஸ், வைத்திலிங்கம் ஆகியோர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டனர். அதோடு பல்வேறு சட்ட விதிகளும் திருத்தும் மேற்கொள்ளப்பட்டிருந்தன.

குறிப்பாக அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலுக்கு போட்டியிட விரும்புவோர் குறைந்தது 10 ஆண்டுகள் தொடர்ந்து கட்சியின் அடிப்படை உறுப்பினராக இருக்க வேண்டும். தலைமை கழக பொறுப்புகளில் தொடர்ந்து 5 ஆண்டுகள் இருக்க வேண்டும். கட்சி கழக அமைப்பு ரீதியாக உள்ள பொறுப்புகளில் 10 மாவட்டச் செயலாளர்கள் பொதுச்செயலாளர் பதவிக்குப் போட்டியிட விரும்புவோரை முன்மொழிய வேண்டும்.

அதேபோல கழக அமைப்பு ரீதியாக உள்ள பொறுப்புகளில் 10 மாவட்டச் செயலாளர்கள் பொதுச்செயலாளர் பதவிக்குப் போட்டியிட விரும்புவோரை வழிமொழிய வேண்டும் என்று பல்வேறு சட்டதிருத்தங்களும் மேற்கொள்ளப்பட்டிருந்தன.

தொடர்ச்சியாக ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் தொடரப்பட்ட வழக்கு, உச்சநீதிமன்றத்தில் பல்வேறு காலகட்டங்களில் விசாரணை நடத்தப்பட்டு 1 ஆண்டுகளாக நிலுவையில் இருந்து வந்த சூழலில், கடந்த சில மாதங்களுக்கு முன்பாக தேர்தல் ஆணையம் அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை அங்கீகரித்து உச்சநீதிமன்றத்தில் தெரிவித்திருந்தது.

இந்நிலையில் ஜூலை 11ம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவுக்கு தேர்தல் ஆணையம் அங்கீகாரம் அளித்துள்ளது. அதிமுக பொதுக்குழுவில் கட்சியின் விதிகளை மாற்றம் செய்ததை ஏற்றுக்கொண்டு தேர்தல் ஆணைய இணையதளத்தில் பதிவேற்றியுள்ளது. திருத்தப்பட்ட அதிமுக சட்ட விதிகளுக்கு அங்கீகாரம் அளித்து இந்திய தேர்தல் ஆணையத்தின் அதிகாரபூர்வ இணையத்தில் பதிவேற்றம் செய்து தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

துரந்தர் 3.0 படம் எடுக்கலாம்! அவ்வளவு விஷயங்கள் கொட்டிக் கிடக்கிறது இதில்!

துல்லிய தகவல்களும் மிக ஆழமான வலைப் பின்னல்களும் கச்சிதமாக செயல்பட்டதால் இவர்களை இந்திய உளவுத்துறையால் கைது செய்ய முடிந்தது.  அவர்களுக்கு பாராட்டுகள். 

1 முதல் 9ம் வகுப்பு வரை… முழு ஆண்டுத் தேர்வு தேதிகள் விவரம்!

சட்டமன்றத் தேர்தல் நடக்க இருப்பதன் காரணமாக பள்ளி மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வுகள் இந்த ஆண்டு முன்கூட்டியே நடத்தப்படுகின்றன.

சரணாகதி அரசல்ல, சாதுர்யமான அரசு!

இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Topics

பஞ்சாங்கம் மார்ச் 21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

துரந்தர் 3.0 படம் எடுக்கலாம்! அவ்வளவு விஷயங்கள் கொட்டிக் கிடக்கிறது இதில்!

துல்லிய தகவல்களும் மிக ஆழமான வலைப் பின்னல்களும் கச்சிதமாக செயல்பட்டதால் இவர்களை இந்திய உளவுத்துறையால் கைது செய்ய முடிந்தது.  அவர்களுக்கு பாராட்டுகள். 

1 முதல் 9ம் வகுப்பு வரை… முழு ஆண்டுத் தேர்வு தேதிகள் விவரம்!

சட்டமன்றத் தேர்தல் நடக்க இருப்பதன் காரணமாக பள்ளி மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வுகள் இந்த ஆண்டு முன்கூட்டியே நடத்தப்படுகின்றன.

சரணாகதி அரசல்ல, சாதுர்யமான அரசு!

இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

பாண்டிச்சேரி முதல்வரின் காரை அதிரடியாக பரிசோதனை செய்த தேர்தல் பறக்கும் படை – பரபரப்பு

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

Entertainment News

Popular Categories