ஸ்ரீவில்லிபுத்தூரில் 13லட்சம் நகை பணம் கொள்ளை..

images 24 1 - 2026
#image_title

ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் 13 லட்சம் இலட்சம் மதிப்புள்ள தங்க நகைகள் மற்றும் பணம் கொள்ளை போன சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் தன்யா நகர் மற்றும் மல்லி காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் நகை மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்டது. ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சிக்கு உட்பட்ட தன்யா நகர் பகுதியில் 500க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. தன்யா நகர் உள்பகுதியான பாரதி நகர் மற்றும் VRN காலனி ஆகிய பகுதிகளில் நேற்று இரவு புகுந்த கொள்ளையர்கள் பூட்டி இருக்கும் வீடுகளை நோட்டமிட்டு தங்களின் கை வரிசையை காட்டியுள்ளனர்.

பாரதி நகர் பகுதியைச் சேர்ந்த காமாட்சி என்பவர் தனது குடும்பத்தினருடன் வெளியூர் சென்று இன்று காலை ஊர் திரும்பிய நிலையில் அவர் வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

தொடர்ந்து வீட்டிற்குள் சென்று பார்க்கும்போது பூட்டை உடைத்து உள்ளே சென்ற கொள்ளையர்கள் பீரோவில் இருந்த 4 1/2 சவரன் நகையை கொள்ளையடித்து சென்றிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் தனியா நகர் பகுதி முழுவதும் பூட்டி இருக்கும் வீடுகளை சோதனை செய்ததில் தன்யா நகர் மெயின் ரோடு பகுதியில் உள்ள மூன்று வீடுகளின் பூட்டை உடைத்து கொள்ளையர்கள் திருட முயற்சித்திருப்பது தெரிய வந்தது.

மேலும் வி ஆர் என் காலனி பகுதியில் வெளியூர் சென்று இருந்த வங்கி காசாளர் ஒருவரின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அவரை தொடர்பு கொண்ட காவல் துறையினர் அவர்கள் உறவினர்கள் மூலமாக வீட்டை திறந்து உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் வைத்திருந்த நெக்லஸ்,கம்மல் உட்பட 15 சவரன் தங்க நகைகள் களவு போயிருப்பது தெரியவந்தது. தொடர்ந்து அதே பகுதியில் ஆய்வில் ஈடுபட்ட காவல்துறையினர் மேலும் சில வீடுகளின் பூட்டு உடைக்கப்படுவதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

அதிர்ஷ்டவசமாக அந்த வீடுகளில் பொருட்கள் ஏதும் களவு போகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து மோப்பநாய் வழைக்கப்பட்டு தடயவியல் நிபுணர்களின் உதவியோடு சிசிடிவி காட்சிகளை வைத்து இரவு நேரத்தில் முகமூடி அணிந்து வீடுகளுக்குள் புகுந்து கொள்ளையை நிகழ்த்தியுள்ள நபரை பற்றி காவல்துறையினர் தங்களின் விசாரணையை தீவிர படுத்தியுள்ளனர்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – மார்ச் 18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

விருதுநகரில் 15.45கோடி மதிப்பிலான நகைகள் பறிமுதல்..

விருதுநகர் சூலக்கரையில் தேர்தல் பறக்கும் படையினரால் ₹14 .2கோடி மதிப்பிலான தங்க...

ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரிய மாரியம்மன் திருக்கோவில் பூக்குழி திருவிழா..

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ பெரிய மாரியம்மன்...

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

Topics

பஞ்சாங்கம் – மார்ச் 18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

விருதுநகரில் 15.45கோடி மதிப்பிலான நகைகள் பறிமுதல்..

விருதுநகர் சூலக்கரையில் தேர்தல் பறக்கும் படையினரால் ₹14 .2கோடி மதிப்பிலான தங்க...

ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரிய மாரியம்மன் திருக்கோவில் பூக்குழி திருவிழா..

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ பெரிய மாரியம்மன்...

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை!

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை வெளியீடு : விஜயபாரதம் பிரசுரம்

பஞ்சாங்கம் மார்ச் 16 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தேர்தல் தேதி அறிவிச்சாச்சு… இனி இதெல்லாம் செய்யாதீங்க!

தமிழகம், கேரளம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் தேதி மார்ச் 15 இன்று மாலை 4 மணிக்கு அறிவிக்கப்பட்டது. இதை அடுத்து, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. 

Entertainment News

Popular Categories