நாடாளுமன்ற கட்டட திறப்பு விழாவில் கட்டுமானத் தொழிலாளர்களுக்கு கெளரவம்..

IMG 20230528 WA0051 - 2026
#image_title

நாடாளுமன்ற கட்டடப் பணியில் ஈடுபட்ட அனைத்து கட்டுமானத் தொழிலாளர்களுக்கும் பொன்னாடைப் போர்த்தி, நினைவுப் பரிசு வழங்கி பிரதமர் நரேந்திர மோடி கெளரவித்தார். 

நாடாளுமன்ற புதிய கட்டட திறப்பு விழாவில், கட்டுமானப் பணியில் ஈடுபட்டவர்களும் கலந்துகொண்டனர். செங்கோல் நிறுவிய பிறகு அனைத்து மத வழிபாடு நடைபெற்றதைத் தொடர்ந்து, கட்டுமானத் தொழிலாளர்களை பிரதமர் மோடி கெளரவித்தார். 

புதிய நாடாளுமன்ற கட்டட திறப்பு விழா சா்வ மத பிராா்த்தனைகளுடன் ஞாயிற்றுக்கிழமை இன்று (மே 28) காலை தொடங்கியது. புதிய நாடாளுமன்றக் கட்டடத்தில் அதிகாரபூா்வமான நிகழ்ச்சி காலை 12 மணிக்கு நடைபெறுகிறது. ஆனால் அதற்கு முன்னதாக பாரம்பரிய சடங்குகள் காலையிலேயே தொடங்கியது.

IMG 20230528 WA0053 - 2026
#image_title

வேத மந்திரங்கள் முழங்க தமிழக ஆதீனங்கள், ஓதுவார்கள் நடத்தும் சிறப்பு வழிபாட்டில் பிரதமர் கலந்துகொண்டு, வழிபாட்டில் ஈடுபட்டார். அவருடன் மக்களவைத் தலைவர் ஓம் பிர்லாவும் கலந்துகொண்டார். 

நடாளுமன்ற கட்டட திறப்பு விழாவையொட்டி சிறப்பு பூஜைக்குப் பிறகு ஆதீனங்களிடமிருந்து செங்கோலை பிரதமர் நரேந்திர மோடி பெற்றுக்கொண்டார். 

ALSO READ:  ராஜபாளையம் வழியே திருவனந்தபுரம் - கோவை சிறப்பு ரயில் அறிவிப்பு

பூஜை நிகழ்ச்சிக்கு பிறகு செங்கோல் முன்பு மண்டியிட்டு பிரதமர் வணங்கினார். பின்னர் செங்கோலை ஏந்தியபடி ஆதீனங்களிடம் தனித்தனியாக ஆசிபெற்றார். 

அதனைத் தொடர்ந்து நாடாளுமன்றத்தில் மக்களவை தலைவர் இருக்கை அருகே செங்கோலை பிரதமர் நரேந்திர மோடி நிறுவினார். செங்கோலை செங்குத்தாக நிலைநிறுத்தி, குத்துவிளக்கு ஏற்றிவைத்தார். 

அப்போது வந்தே மாதரம் பாடல் நாதஸ்வரத்தில் இசைக்கப்பட்டது. அப்போது 
புதிய நாடாளுமன்ற கட்டடத்துக்கான கல்வெட்டை பிரதமர் நரேந்திர மோடி திறந்துவைத்தார். உடன் மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா இருந்தார்.

நாடாளுமன்ற கட்டடப் பணியில் ஈடுபட்ட அனைத்து கட்டுமானத் தொழிலாளர்களுக்கும் பொன்னாடைப் போர்த்தி பிரதமர் நரேந்திர மோடி கெளரவித்தார். 

பின்னா் புதிய நாடாளுமன்ற கட்டடத்தில் மக்களவையில் அதிகாரபூா்வமான துவக்கநாள் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சி சரியாக பிற்பகல் 12 மணிக்கு தேசியக் கீதத்துடன் தொடங்குகிறது.

இந்த நிகழ்ச்சியில் மாநிலங்களவைத் துணைத் தலைவா் ஹரிவன்ஷ் நாராயண சிங் உரையாற்றுகிறாா். குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு, குடியரசு துணைத் தலைவராக ஜகதீப் தன்கா் ஆகியோா் புதிய நாடாளுமன்றத் தொடக்க விழாவிற்கு அளித்த வாழ்த்து செய்திகளும் படிக்கப்படுகிறது.

ALSO READ:  பாஜக.,விலிருந்து விலகி, பழைய இயக்கத்தை புதுப்பித்தார் அண்ணாமலை!

பின்னா் புதிய நாடாளுமன்றத்தில் இரு குறுகிய நேர காணொலியும் திரையிடப்பட இருக்கிறது. காங்கிரஸ் உள்ளிட்ட எதிா்கட்சிகள் குடியரசுத் தலைவரை அழைக்கவில்லை எனக் கூறி இந்த திறப்பு விழாவை புறக்கணிப்பதாக அறிவித்துள்ளது. ஆனால், மாநிலங்களவை எதிா்க்கட்சி தலைவா் அவையில் பங்கேற்றால் அவா் பேசவும் அழைக்கப்படுவாா் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வை குறிக்கும் வகையில் 75- ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டும் சுமாா் 35 கிராம் எடை கொண்ட ரூ.75 நாணயத்தையும் தபால் தலையையும் பிரதமா் வெளியிடுகிறாா். சுமாா் 1 மணி அளவில் புதிய நாடாளுமன்றக் கட்ட திறப்பு விழா குறித்த சிறப்பு உரையை பிரதமா் ஆற்றுகிறாா்.

கடந்த சில நாட்களாகவே பிரதமா் புதிய நாடாளுமன்ற கட்டடம் ஒவ்வொரு இந்தியரையும் பெருமைப்படுத்தும் எனக் கூறி புதிய கட்டட வளாகத்தின் காணொலியையும் பகிா்ந்துள்ளாா்.

பிரதமா் வெளியிடும் 2023-ஆம் ஆண்டின் புதிய ரூ. 75 நாணயத்தில் நாணயத்தின் ஒரு பக்கம் அசோக தூணின் சிங்க உருவமும் நடுவில் ஹிந்தியிலும் ஆங்கிலத்திலும் ’பாரத்’ என எழுதப்பட்டிருக்கும் எனவும் கூறப்படுகிறது.

ALSO READ:  இருதரப்பு மோதலில் எஸ்பி., சமரசம்; அமைதியாக நடைபெற்ற ஸ்வாமி ஊர்வலம்!

தமிழகத்தின் செங்கோல், உத்தரபிரதேசம் மிா்சாபூா் தரைவிரிப்புகள், திரிபுரா மூங்கில் தரை ராஜஸ்தானில் இருந்து கல் வேலைப்பாடுகள், மகாராஷ்டிரம் மாநில புகழ் பெற்ற தேக்கு மரங்கள் என நாட்டின் பல்வேறு கலாசாரங்களை இந்த புதிய கட்டடம் பிரதிபலிக்கிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 23 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

‘தவெக., இன்னுமொரு திமுக., தானா?’ திருப்பரங்குன்ற தீப நிலைப்பாட்டுக்கு இந்து முன்னணி கண்டனம்!

உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை திருப்பரங்குன்றம் மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பாக வழங்கிய உத்தரவை அமல்படுத்துவதில், புதிதாக பதவி ஏற்றுள்ள தவெகவின் நிலைப்பாட்டை கேட்டிருந்தது. அது குறித்து இன்று தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் குழப்பமான கருத்துக்களை தெரிவித்துள்ளது.

ஆர்.எஸ்.எஸ்., பதிவு செய்யப்பட்ட அமைப்பா?

ஆர் எஸ் எஸ் தனது பதிவு சான்றிதழைக் காட்ட வேண்டுமென கார்கே கேட்பது பொருள் அற்றது. ஆர் எஸ் எஸ் 100 ஆண்டுகளுக்கு மேலாக இந்த நாட்டில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அதில் 75 ஆண்டுகள் இந்திய அரசமைப்பு சட்டத்திற்கு உட்பட்டது.

பஞ்சாங்கம் ஜூன் 22 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் ஜூன் 23 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

‘தவெக., இன்னுமொரு திமுக., தானா?’ திருப்பரங்குன்ற தீப நிலைப்பாட்டுக்கு இந்து முன்னணி கண்டனம்!

உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை திருப்பரங்குன்றம் மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பாக வழங்கிய உத்தரவை அமல்படுத்துவதில், புதிதாக பதவி ஏற்றுள்ள தவெகவின் நிலைப்பாட்டை கேட்டிருந்தது. அது குறித்து இன்று தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் குழப்பமான கருத்துக்களை தெரிவித்துள்ளது.

ஆர்.எஸ்.எஸ்., பதிவு செய்யப்பட்ட அமைப்பா?

ஆர் எஸ் எஸ் தனது பதிவு சான்றிதழைக் காட்ட வேண்டுமென கார்கே கேட்பது பொருள் அற்றது. ஆர் எஸ் எஸ் 100 ஆண்டுகளுக்கு மேலாக இந்த நாட்டில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அதில் 75 ஆண்டுகள் இந்திய அரசமைப்பு சட்டத்திற்கு உட்பட்டது.

பஞ்சாங்கம் ஜூன் 22 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூன் 21 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

பஞ்சாங்கம் ஜூன் 20 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஜூன் 19 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Entertainment News

Popular Categories