ராகுல் ஜாமினை ரத்து செய்து சிறையில் அடைக்க வேண்டும்: இந்து முன்னணி காட்டம்!

hindumunnani - 2026

இந்தியத் திருநாட்டை இழிவுபடுத்திய ராகுல்காந்தியின் ஜாமீனை ரத்து செய்து சிறையில் அடைக்க வேண்டும் என்று இந்து முன்னணி அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த அமைப்பின் மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது…

அமெரிக்கா கலிபோர்னியா மாகாணத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு சென்ற முன்னாள் காங்கிரஸ் தலைவரும் குஜராத்தின் மோடி சமூகத்தினரை இழிவுப்படுத்தி சிறை தண்டனை பெற்று ஜாமீனில் வெளிவந்துள்ள ராகுல் காந்தி அவர்கள் பாரதிய ஜனதா கட்சியை இழிவு படுத்துவதாக குறை சொல்வதாக நினைத்து பேசினாரா அல்லது இத்தாலி ,தாய்லாந்து மற்றும் மேற்குலக நாட்டின் மீது உள்ள பாசத்தால் இந்திய திருநாட்டை இழிவுபடுத்தி பேசினாரா என்று தெரியவில்லை.

நிகழ்ச்சியில் பேசும்போது இந்தியாவில் சிறுபான்மையினர் மற்றும் ஏழைகள் உதவியற்று சிரமப்படுவதாக நீலிக்கண்ணீர் வடித்துள்ளார். ஷாபானு வழக்கில் ராகுல் காந்தியின் தந்தை இஸ்லாமிய பெண்களுக்கு இழைத்த அநீதி பற்றி ராகுல் காந்திக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை ஏனெனில் ராகுல் காந்தி இன்னமும் சிறுகுழந்தை போல் செயல்படுகிறார்.

ALSO READ:  தமிழருக்கான ரூ.5,650 கோடி திட்டங்கள் தொடங்க… இன்று திருச்சி வருகிறார் பிரதமர் மோடி!

மேலும் முஸ்லிம்கள் சீக்கியர்கள் கிறிஸ்தவர்கள் தாக்கப்படுவதாக கூறியுள்ள ராகுல் காந்தி அவர்களே டெல்லியில் சீக்கிய இனமே இருக்க கூடாது என்று கங்கணம் கட்டிக்கொண்டு பல சீக்கிய மக்களை கொடூரமாக காங்கிரஸ் கட்சி கொலை செய்தது உலகத்திற்கே தெரியும்.

மேலும் 1980ல் இந்தியாவில் தலித்துகளுக்கு என்ன நடந்ததோ இன்று முஸ்லிம்களுக்கு நடக்கிறது என்று ஒரு கொடூர மனநிலையோடு இஸ்லாமியர்களுக்கு எதிராக இந்திய மக்கள் ஒவ்வொரும் செயல்படுவது போல் பேசியுள்ளது வன்மத்திலும் வன்மம். மேலும் 1980 இல் காங்கிரஸ் கட்சி அதுவும் தங்களுடைய பாட்டி இந்திராகாந்தி தான் ஆட்சியில் இருந்தார் என்பதை வசதியாக மறந்து விட்டார்.

ராகுல் காந்திக்கும், காங்கிரஸ் கட்சியினருக்கும் தாய் நாட்டையும் தாய் மொழியையும் இழிவாக பேசுவது ஒன்றும் புதிதல்ல. சமீபத்தில் கூட இங்கிலாந்து சென்ற ராகுல் காந்தி நமது இந்திய திருநாட்டை பற்றி இழிவு படுத்தி பேசினார். இதே நிலை தொடர்ந்தால் 2024 தேர்தலிலும் மக்கள் சரியான பாடம் புகட்டுவர். மேலும் ராகுல்காந்தி தொடர்ந்து இந்திய திருநாட்டை இழிவுபடுத்தி பேசி வருவதால் நீதிமன்றம் ஆனது தாமாக முன்வந்து ராகுல் காந்தி அவர்கள் அவதூறு வழக்கில் பெற்றுள்ள ஜாமினை ரத்து செய்து சிறையில் அடைக்க வேண்டும் என இந்து முன்னணி கேட்டுக்கொள்கிறது.

ALSO READ:  ‘இல்லத்தரசி கூப்பன்’ நன்மையா? நிதிச்சுமையா?

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

பஞ்சாங்கம் ஜூன் 1 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

ராஜபாளையம் வழியே திருவனந்தபுரம் – கோவை சிறப்பு ரயில் அறிவிப்பு

கோடைகால சிறப்பு ரயிலாக திருவனந்தபுரம் வடக்கு - போத்தனூர் மற்றும் போத்தனூர் - திருவனந்தபுரம் சென்ட்ரல் இடையே தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

Topics

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

பஞ்சாங்கம் ஜூன் 1 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

ராஜபாளையம் வழியே திருவனந்தபுரம் – கோவை சிறப்பு ரயில் அறிவிப்பு

கோடைகால சிறப்பு ரயிலாக திருவனந்தபுரம் வடக்கு - போத்தனூர் மற்றும் போத்தனூர் - திருவனந்தபுரம் சென்ட்ரல் இடையே தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

பஞ்சாங்கம் மே 31- ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

டெட் மறு ஆய்வு மனு மீதான தீர்ப்பில் உடனடி சட்ட நிவாரணம் தேவை!

ஆசிரியர் சமூகத்தின் கவலைகளுக்கு மதிப்பளித்து, அரசாங்கம் இந்த விஷயத்தில் இரக்கத்துடனும் உறுதியுடனும் செயல்படும் என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம்.

Entertainment News

Popular Categories