February 22, 2026, 5:15 AM
25.4 C
Chennai

ராகுல் ஜாமினை ரத்து செய்து சிறையில் அடைக்க வேண்டும்: இந்து முன்னணி காட்டம்!

hindumunnani - 2026

இந்தியத் திருநாட்டை இழிவுபடுத்திய ராகுல்காந்தியின் ஜாமீனை ரத்து செய்து சிறையில் அடைக்க வேண்டும் என்று இந்து முன்னணி அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த அமைப்பின் மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது…

அமெரிக்கா கலிபோர்னியா மாகாணத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு சென்ற முன்னாள் காங்கிரஸ் தலைவரும் குஜராத்தின் மோடி சமூகத்தினரை இழிவுப்படுத்தி சிறை தண்டனை பெற்று ஜாமீனில் வெளிவந்துள்ள ராகுல் காந்தி அவர்கள் பாரதிய ஜனதா கட்சியை இழிவு படுத்துவதாக குறை சொல்வதாக நினைத்து பேசினாரா அல்லது இத்தாலி ,தாய்லாந்து மற்றும் மேற்குலக நாட்டின் மீது உள்ள பாசத்தால் இந்திய திருநாட்டை இழிவுபடுத்தி பேசினாரா என்று தெரியவில்லை.

நிகழ்ச்சியில் பேசும்போது இந்தியாவில் சிறுபான்மையினர் மற்றும் ஏழைகள் உதவியற்று சிரமப்படுவதாக நீலிக்கண்ணீர் வடித்துள்ளார். ஷாபானு வழக்கில் ராகுல் காந்தியின் தந்தை இஸ்லாமிய பெண்களுக்கு இழைத்த அநீதி பற்றி ராகுல் காந்திக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை ஏனெனில் ராகுல் காந்தி இன்னமும் சிறுகுழந்தை போல் செயல்படுகிறார்.

மேலும் முஸ்லிம்கள் சீக்கியர்கள் கிறிஸ்தவர்கள் தாக்கப்படுவதாக கூறியுள்ள ராகுல் காந்தி அவர்களே டெல்லியில் சீக்கிய இனமே இருக்க கூடாது என்று கங்கணம் கட்டிக்கொண்டு பல சீக்கிய மக்களை கொடூரமாக காங்கிரஸ் கட்சி கொலை செய்தது உலகத்திற்கே தெரியும்.

மேலும் 1980ல் இந்தியாவில் தலித்துகளுக்கு என்ன நடந்ததோ இன்று முஸ்லிம்களுக்கு நடக்கிறது என்று ஒரு கொடூர மனநிலையோடு இஸ்லாமியர்களுக்கு எதிராக இந்திய மக்கள் ஒவ்வொரும் செயல்படுவது போல் பேசியுள்ளது வன்மத்திலும் வன்மம். மேலும் 1980 இல் காங்கிரஸ் கட்சி அதுவும் தங்களுடைய பாட்டி இந்திராகாந்தி தான் ஆட்சியில் இருந்தார் என்பதை வசதியாக மறந்து விட்டார்.

ராகுல் காந்திக்கும், காங்கிரஸ் கட்சியினருக்கும் தாய் நாட்டையும் தாய் மொழியையும் இழிவாக பேசுவது ஒன்றும் புதிதல்ல. சமீபத்தில் கூட இங்கிலாந்து சென்ற ராகுல் காந்தி நமது இந்திய திருநாட்டை பற்றி இழிவு படுத்தி பேசினார். இதே நிலை தொடர்ந்தால் 2024 தேர்தலிலும் மக்கள் சரியான பாடம் புகட்டுவர். மேலும் ராகுல்காந்தி தொடர்ந்து இந்திய திருநாட்டை இழிவுபடுத்தி பேசி வருவதால் நீதிமன்றம் ஆனது தாமாக முன்வந்து ராகுல் காந்தி அவர்கள் அவதூறு வழக்கில் பெற்றுள்ள ஜாமினை ரத்து செய்து சிறையில் அடைக்க வேண்டும் என இந்து முன்னணி கேட்டுக்கொள்கிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் பிப்.22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சர்வதேச ஏஐ., மாநாட்டில் அலம்பல்! வெட்கக்கேடான காங்கிரஸின் செயல்!

புது தில்லியில் நடைபெறும் சர்வதேச அளவிலான ஏஐ மாநாட்டில் புகுந்து சட்டையைக் கழற்றி அரை நிர்வாண ஆபாச நடனம் ஆடி, உலக அளவில் இந்தியாவின் மானத்தைக் கப்பலேற்றிய

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டிரம்ப் போட்ட வரி செல்லாது! உலகளாவிய வரிகளை ரத்துசெய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்!

9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்துசெய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் வரிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Topics

பஞ்சாங்கம் பிப்.22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சர்வதேச ஏஐ., மாநாட்டில் அலம்பல்! வெட்கக்கேடான காங்கிரஸின் செயல்!

புது தில்லியில் நடைபெறும் சர்வதேச அளவிலான ஏஐ மாநாட்டில் புகுந்து சட்டையைக் கழற்றி அரை நிர்வாண ஆபாச நடனம் ஆடி, உலக அளவில் இந்தியாவின் மானத்தைக் கப்பலேற்றிய

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டிரம்ப் போட்ட வரி செல்லாது! உலகளாவிய வரிகளை ரத்துசெய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்!

9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்துசெய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் வரிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தமிழ்த் தாயைக் காத்த தனயன்

ஆக, உ.வே.சா. என்பதற்குப் பழந்தமிழை உயிர்ப்பித்த வேதியர் சாமிநாதையர் என்றும் பொருள்கொள்ளலாம்.

பஞ்சாங்கம் பிப்.19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மோடி வரும் நாளில்… புதிய ரயில்கள்..?

அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூருக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக, தூத்துக்குடி - திருச்செந்தூர் இடையே புதிய அகல ரயில் பாதை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

Entertainment News

Popular Categories