December 5, 2025, 8:25 PM
26.7 C
Chennai

நாளை முதல் போடி-மதுரை கிழக்கே போகும் ரயில்..

Screenshot 2023 06 14 20 06 55 180 comfacebookkatana - 2025
#image_title

மதுரை டூ போடி, சென்னை டூ போடி ரயில் .. நாளை முதல் மாறுது.. தேனிக்கு வந்த சூப்பர் அறிவிப்பால் தேனி மற்றும் கேரளா மக்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தேனி: மதுரை – போடி இடையேயும், சென்னை போடி இடையேயும் ஜூன் 15-ம் தேதி முதல் ரயில் (நாளை முதல் )இயக்கப்பட உள்ளது. தேனி மாவட்ட மக்களின் பல வருடக்கனவு நாளை நினைவாகப் போகிறது.

சுமார் 110 வருடங்களுக்கு முன்பே அதாவது 1909-ல் மதுரை போடி இடையே மீட்டர்கேஜ் ரயில் பாதையை ஆங்கிலேயர்கள் அமைத்தனர். இந்த பாதை அமைக்கப்பட்டதற்கு காரணம். கேரளாவின் இடுக்கி மாவட்டத்தில் விளையும் ஏலாக்காய், காபி, டீத்தூள் போன்ற விளை பொருட்களை எடுத்து செல்வதற்காகத்தான். மதுரை போடி இடையே 87 கிலோ மீட்டர் தூரத்திற்கு ரயில் பாதை அமைக்கப்பட்டது. இந்த பாதையில் பயணிகள் ரயில்கள் இயங்கி வந்தன.

பல சினிமா படங்களின் படப்பிடிப்புகள் மதுரை போடி ரயிலில் தான் அந்த காலத்தில் எடுக்கப்பட்டன. கேப்டன் பிரபாகரன்,கிழக்கே போகும் ரயில் போன்றவை வெகு பிரபலமான படங்கள் ஆகும். தேனி மாவட்டத்தின் வாழ்வியலை அங்கமாக இருந்த இந்த கிழக்கே போகும் ரயில், 2010 டிசம்பர் முதல் நிறுத்தப்பட்டது, அகல ரயில் பாதையாக மாற்றும் பணி தொடங் கியது. சுமார் 10 வருடங்களாக ஆமை வேகத்தில் நடந்த பணிகள், கடைசி 3 வருடங்களத்தான் முழு தொகை ஒதுக்கப்பட்டு பணிகள் விறுவிறுப்பாக நடந்தது.

12 ஆண்டு களுக்குப் பிறகு முதல் கட்டமாக மதுரை – தேனி வரையிலும் ரயில் சேவையை கடந்த ஆண்டு மே 26-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி காணொலி மூலம் தொடங்கிவைத்தார். இதனால் தேனி மாவட்ட மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். தேனி – போடி வரை 15 கி.மீ.க்கான பணி தொடர்ந்து நடந்தது. தற்போது அனைத்துக்கட்ட சோதனைகளும் நிறைவடைந்துள்ளது.

ஜூன் 15-ம் தேதி முதல் மதுரை- போடி அகல ரயில் பாதையில் தினமும் பயணிகள் ரயில் இயக்கப்பட உள்ளது. இதேபோல் சென்னை- மதுரை துரந்தோ ரயில் போடி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. திங்கள், புதன், வெள்ளி ஆகிய தினங்களில் இந்த ரயில் இயக்கப்பட உள்ளது.

இதன் தொடக்க விழா வரும் 15 ம் தேதி தேனி மாவட்டம் போடியில் நடைபெற உள்ளது. ரயில் சேவையை மத்திய இணை அமைச்சர் ஓ.முருகன் போடியில் இந்த சேவையைத் துவக்கி வைக்கிறார். வரும் 15.06.23 வியாழக்கிழமை இரவு 8:30 மணிக்கு ரயில் எண் 20602 : போடி – சென்னை சென்ட்ரல் ரயில் சேவை தொடங்கி வைக்கப்படுகிறது. ரயில் எண் 20602: போடி – சென்னை ரயில் செவ்வாய், வியாழன், ஞாயிற்றுக்கிழமைகளிலும், ரயில் எண் 20601 சென்னை – போடி ரயில் திங்கள், புதன், வெள்ளிக்கிழமைகளிலும் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

போடி – சென்னை இடையே தேனி, ஆண்டிப்பட்டி, உசிலம்பட்டி, மதுரை, திண்டுக்கல், கரூர், சேலம், காட்பாடி மற்றும் பெரம்பூர் ஆகிய ரயில் நிறுத்தங்களில் நின்று செல்லும். 20601 சென்னை – போடி ரயில் சென்னை சென்ட்ரலில் இரவு 10.30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 9:35 மணிக்கு போடியைச் சென்றடையும். 20602 போடி – சென்னை ரயில் போடியில் இரவு 08.30 க்கு புறப்பட்டு மறுநாள் காலை 07.55 மணிக்கு சென்னை சென்ட்ரலை சென்றடையும். 15.06.23 இரவு 8.45 மணிக்கு போடி – மதுரை ரயில் சேவை தொடங்கி வைக்கப்படும்.

போடி – மதுரை தினமும் மாலை 05.50 க்கு போடியில் புறப்பட்டு 07.50 க்கு மதுரை சென்றடையும். மதுரை – போடி தினசரி ரயில் காலை 08.20 க்கு மதுரையில் புறப்பட்டு 10:30 மணிக்கு போடியை சென்றடையும்.

இந்த நிலையில் மதுரை போடி மதுரை இடையே விரைவு ரயில் சோதனை ஓட்டம் இன்று நடைபெற்றது.

போடி-மதுரை அகல ரயில் பாதை பணிகள் முடிந்த நிலையில் ஜூன் 15ஆம் தேதி (வியாழக்கிழமை) நாளை போடி-மதுரை, போடி -சென்னை இடையே ரயில் சேவை தொடங்கப்பட உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் மதுரை-போடி இடையே அகல ரயில் பாதையில் அதிர்வுகள் குறித்த இறுதிக்கட்ட ஆய்வு ரயில் புதன் கிழமை நடைபெற்றது.

OMS (Oscillation Monitoring System) எனப்படும் சிறப்பு ரயில் என்ஜின் மூலம் மதுரையிலிருந்து போடி வரை சோதனை செய்யப்பட்டது. இரண்டு பெட்டிகள் இணைக்கப்பட்ட இந்த ரயிலில் நவீன கருவிகள் மூலம் ரயில்பாதையின் அதிர்வு தாங்கும் திறன் சோதனை செய்யப்பட்டது. காலை 10 மணிக்கு புறப்பட்ட ரயில் போடிக்கு 11.15 மணிக்கு வந்து சேர்ந்தது. பின்னர் 11.45 மணிக்கு மதுரைக்குப் புறப்பட்டுச் சென்றது.

ரயிலில் பொறியாளர் குழுவினர் ரயில்பாதை குறித்து இறுதிக் கட்ட சோதனை மேற்கொண்டனர். நாளை (வியாழக்கிழமை) போடியில் நடைபெறும் நிகழ்ச்சியில் போடி-மதுரை, போடி-சென்னை ரயில்களை மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை மற்றும் மீன்வளம், கால்நடைத்துறை இணை அமைச்சர் எல்.முருகன் நேரில் பங்கேற்று ரயில் சேவைகளை தொடங்கி வைக்க உள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories