தெரியாத எண்ணில் இருந்து வரும் அழைப்புகள் தொடர்பில்… வாட்ஸ் அப்பின் புது அப்டேட்!

whatsapp update - 2026

‘வாட்ஸாப்’ செயலியில் நமக்கு தொடர்பு பட்டியலில் இல்லாத நபர்களிடம் இருந்து வரும் குரல் அழைப்புகளை தவிர்க்கும் வசதியை ‘மெட்டா’ நிறுவனம் அறிமுகப் படுத்தியுள்ளது. இந்த வசதியைப் பெறுவதற்கு, நீங்கள் வாட்ஸாப் செயலியை ‘அப்டேட்’ செய்து கொள்ள வேண்டும்.

‘வாட்ஸாப்’ தகவல் பரிமாற்ற செயலியை உலக, முழுதும் உள்ள கோடிக்கணக்கான பயனாளர்கள் பயன்படுத்தி வருகின்றனர். இதை ‘மெட்டா’ நிறுவனம் நிர்வகித்து வருகிறது. மொபைல் போன் வாயிலாக குறுஞ்செய்திகளை பரிமாறுவது போக வெளிநாட்டில் உள்ளவர்களை ‘மொபைல் போன்’ வாயிலாக அழைத்துப் பேசும் குரல் அழைப்பு வசதியையும் வாட்ஸாப் செயலி அளித்து வருகிறது. இதனை பெரும்பாலானவர்களும் பயன்படுத்துகின்றனர். குறிப்பாக வாய்ஸ் சிக்னல் சரி இல்லாத போதிலும் வாட்ஸ் அப் வாயிலான கால் சரியாக இயங்குவதால், அதையே பயன்படுத்துகின்றனர். இதனால் ஐ.எஸ்.டி., அழைப்புகளுக்கான கட்டணச் செலவு முற்றிலுமாக குறைந்துள்ளது.

எனினும், வாட்ஸ் அப் வாயிலாக சில சிரமங்களையும் பயனர்கள் சந்தித்து வருகின்றனர். குறிப்பாக, அறிமுகம் இல்லாத நபர்களிடம் இருந்து வரும் வாட்ஸாப் அழைப்புகளின் எண்ணிக்கை, அவற்றில் பலவும் ஏமாற்றுப் பேர்வழிகளால் செய்யப்படுவது இவற்றால் நொந்து போயுள்ளனர்.

அண்மையில் கூட, இந்தியா உட்பட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த வாட்ஸாப் பயனாளர்களுக்கு வியட்நாம், மலேஷியா, கென்யா, எத்தியோப்பியா உள்ளிட்ட நாடுகளின் எண்களில் இருந்து அழைப்புகள் வருவதாக புகார் எழுந்தது. அவ்வாறு வரும் அழைப்புகளை ஏற்க வேண்டாம் என்றும், அவை சைபர் குற்றங்களில் ஈடுபடும் கும்பல்களிடம் இருந்து வரும் மோசடி அழைப்புகள் என்றும் மத்திய அரசு எச்சரித்தது. இந்தக் குறைபாட்டை சீர் செய்யும்படி, மெட்டா நிறுவனத்துக்கு மத்திய அரசு உத்தரவு பிறப்பித்தது.

இதை அடுத்து, சைலன்ஸ் அன்நோன் காலர்ஸ்’ என்ற புதிய வசதியை மெட்டா நிறுவனம் அறிமுகப்படுத்தி உள்ளது. இதன்படி, பயனாளர்களின் வாட்ஸாப் தொடர்பு பட்டியலில் இல்லாத புதிய எண்களில் இருந்து அழைப்பு வரும் போது, அவை நம், ‘மொபைல் போன்’ திரையில் தெரியாது. ‘ரிங் டோன்’ ஒலிக்காது. ஆனால், ‘நோட்டிபிகேஷன்’ பிரிவில், அழைப்பு வந்த தகவல் பதிவாகிவிடும். இதன் வாயிலாக, அழைத்த எண்ணை பயனாளர்கள் தெரிந்து கொள்ள முடியும்.

வாட்ஸாப் செயலியில் உள்ள, ‘செட்டிங்க்ஸ்’ – ‘பிரைவசி’ – ‘கால்ஸ்’ ஆகியவற்றை அடுத்தடுத்து, ‘கிளிக்’ செய்து, ‘சைலன்ஸ் அன்நோன் காலர்ஸ்’ என்ற வசதியை செயல்படுத்தினால், இந்த புதிய வசதியை அனைத்து பயனாளர்களும் பெற முடியும்.


Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரிய மாரியம்மன் திருக்கோவில் பூக்குழி திருவிழா..

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ பெரிய மாரியம்மன்...

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை!

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை வெளியீடு : விஜயபாரதம் பிரசுரம்

பஞ்சாங்கம் மார்ச் 16 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரிய மாரியம்மன் திருக்கோவில் பூக்குழி திருவிழா..

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ பெரிய மாரியம்மன்...

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை!

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை வெளியீடு : விஜயபாரதம் பிரசுரம்

பஞ்சாங்கம் மார்ச் 16 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தேர்தல் தேதி அறிவிச்சாச்சு… இனி இதெல்லாம் செய்யாதீங்க!

தமிழகம், கேரளம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் தேதி மார்ச் 15 இன்று மாலை 4 மணிக்கு அறிவிக்கப்பட்டது. இதை அடுத்து, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. 

தமிழகம் உள்பட 5 மாநில சட்டப் பேரவை தேர்தல் தேதி அறிவிப்பு!

தமிழகத்தில் மொத்தமுள்ள 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படுகிறது.

பாலமேடு – வெளிச்சத்திற்கு வந்த மெகா ஊழல்? திமுக., தலைவர் துணைத் தலைவர், செயல் அலுவலர் மீது புகார்!

மதுரை பாலமேடு பேரூராட்சியில் வெளிச்சத்திற்கு வந்த மெகா ஊழல் ? திமுகவைச் சேர்ந்த தலைவர் துணைத் தலைவர் மற்றும் பேரூராட்சி செயல் அலுவலர் மீது பரபரப்பு குற்றச்சாட்டு:

Entertainment News

Popular Categories