சென்னை: திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலினைப் பாராட்டி புதிய பாடல் கேசட் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. இந்த விழாவில் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெகத்ரட்சகன், ஸ்டாலின் ஒரு துளசிச் செடி என்று பாராட்டினார். திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் இன்று தனது 63வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். ஸ்டாலினைப் பாராட்டி சென்னை கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் பி.கே.சேகர் பாபுவும், இளைஞர் அணி அசன் முகமது அலி ஜின்னாவும் புதிய பாடல் சி.டி. ஒன்றைத் தயார் செய்துள்ளனர். கவிஞர்கள் பா.விஜய், விவேகா, பழனி பாரதி, யுகபாரதி, நெல்லை ஜெயந்தா உள்ளிட்டோர் எழுதியுள்ள இந்தப் பாடலுக்கு தாஜ்னூர் இசையமைத்துள்ளார். இந்த பாடல் சி.டி. வெளியீட்டு விழா மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழாவையொட்டி பெரியார் திடலில் நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் பேசிய ஜெகத்ரட்சகன் “மு.க.ஸ்டாலின் தமிழ் இளைஞர்களை தட்டி எழுப்பக்கூடியவர். அவர் ஒரு துளசி செடி. 8 கோடி தமிழர்களை இணைக்கும் பாலமாக செயல்படுகிறார்” என்றார்.
ஸ்டாலின் ஒரு துளசி செடி: ஜெகத்ரட்சகன்
Popular Categories


