December 6, 2025, 6:00 AM
23.8 C
Chennai

மெட்ரோ ரயில் திட்ட அறிக்கை குறித்த ஆலோசனைக் கூட்டம்!

madurai metro rail project meeting - 2025

மதுரை: மதுரை மாவட்டம் மெட்ரோ ரயில் திட்டம் தொடர்பான விரிவான வரைவு திட்ட அறிக்கை குறித்த ஆலோனைக்கூட்டம், அரசு முதன்மைச் செயலாளர் ஃசென்னை மெட்ரோ இரயில் நிறுவன மேலாண்மை இயக்குநர் எம்.ஏ.சித்திக், தலைமையில் நடைபெற்றது.

மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் , அரசு முதன்மைச் செயலாளர் ஃ சென்னை மெட்ரோ இரயில் நிறுவன மேலாண்மை இயக்குநர் எம்.ஏ.சித்திக் , தலைமையில் மதுரை மெட்ரோ ரயில் திட்டம் தொடர்பான விரிவான வரைவு திட்ட அறிக்கை குறித்த ஆலோனைக் கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில், அரசு முதன்மைச் செயலாளர் ஃ சென்னை மெட்ரோ இரயில் நிறுவன மேலாண்மை இயக்குநர் எம்.ஏ.சித்திக் தெரிவித்தாவது:-

மதுரை மெட்ரோ ரயில் திட்டம் தொடர்பான விரிவான வரைவு திட்ட அறிக்கை தயாரிப்பது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. மதுரை மெட்ரோ ரயில் திட்டத்திற்கான விரிவான வரைவு திட்ட அறிக்கை நிறைவுபெறும் நிலையில் உள்ளது. மாவட்ட அளவிலான கூட்டம் நடைபெற்றுள்ளது.

இந்த கூட்டத்தில் விரிவான அறிக்கை தொடர்பாக விவாதிக்கப்பட்டது. மதுரை ஒத்தக்கடை முதல் திருமங்கலம் 32 கிலோ மீட்டர் வழித்தடம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதில்இ 5 கி.மி சுரங்கபாதை ரயில் வழித்தடம்இ 27 கி.மீ மேல்மட்ட ரயில் வழித்தடம் ஆகும்.

அதேபோல, 27 ரயில் நிறுத்தங்கள் ஏற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதில் 3 ரயில் நிறுத்தங்கள் சுரங்கபாதை ரயில் நிறுத்தங்களாக அமையும். அவை நகரின் மையப்பகுதிகளான மதுரை ரயில் நிலையம் – பெரியார் பேருந்து நிலையம், அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவில், கோரிப்பாளையம் ஆகிய பகுதிகளில் அமையும்.

அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில் பகுதியில் ஆவணி மூல வீதி அல்லது மாசி வீதி பகுதியில் மெட்ரோ ரயில் நிறுத்தம் அமைப்பது என, திட்டமிட்டுள்ளோம். மெட்ரோ ரயில் வழிப்பாதை அமைக்கும் பணிகளால் கோவில் தேரோட்டத்தில் பாதிப்பு இருக்காது.

மதுரை மெட்ரோ ரயில் திட்ட அறிக்கையே இதுவரையிலும் விரைவாக தயாரிக்கப்பட்ட அறிக்கை ஆகும். கோவை மதுரை ஆகிய இரு மெட்ரோ திட்ட அறிக்கைகளும் வரும் ஜூலை 15-ஆம் தேதி தமிழ்நாடு அரசிடம் சமர்ப்பிக்கப் படவுள்ளது.

திட்ட அறிக்கை மத்திய அரசின் ஒப்புதல் பெற்ற பின்பு போதிய நிதி ஆதாரம் பெறப்பட்டு திட்டப்பணிகள் தொடங்கும் என, அரசு முதன்மைச் செயலாளர் ஃ சென்னை மெட்ரோ இரயில் நிறுவன மேலாண்மை இயக்குநர் எம்.ஏ.சித்திக் தெரிவித்தார்.

முன்னதாக, அரசு முதன்மைச் செயலாளர் ஃ சென்னை மெட்ரோ இரயில் நிறுவன மேலாண்மை இயக்குநர் எம்.ஏ.சித்திக், மதுரை மெட்ரோ ரயில் திட்டப்பணிகள் தொடர்பாக, அருள்மிகு மினாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவில், தல்லாகுளம் பகுதிகளில் நேரடியாக கள ஆய்வு மேற்கொண்டார்.

இந்த கூட்டத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர் மா.சௌ.சங்கீதா மாநகராட்சி ஆணையாளர் கே.ஜெ.பிரவீன் குமார், மாவட்ட வருவாய் அலுவலர் ர.சக்திவேல் சென்னை மெட்ரோ இரயில் திட்ட இயக்குநர் த.அர்ஜீனன் , முதன்மைப் பொது மேலாளர்கள் (கட்டிடக்கலை) ரேகா பிரகாஷ், லிவிங்ஸ்டன் உட்பட பல்வேறு துறை சார்ந்த அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories