மெட்ரோ ரயில் திட்ட அறிக்கை குறித்த ஆலோசனைக் கூட்டம்!

madurai metro rail project meeting - 2026

மதுரை: மதுரை மாவட்டம் மெட்ரோ ரயில் திட்டம் தொடர்பான விரிவான வரைவு திட்ட அறிக்கை குறித்த ஆலோனைக்கூட்டம், அரசு முதன்மைச் செயலாளர் ஃசென்னை மெட்ரோ இரயில் நிறுவன மேலாண்மை இயக்குநர் எம்.ஏ.சித்திக், தலைமையில் நடைபெற்றது.

மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் , அரசு முதன்மைச் செயலாளர் ஃ சென்னை மெட்ரோ இரயில் நிறுவன மேலாண்மை இயக்குநர் எம்.ஏ.சித்திக் , தலைமையில் மதுரை மெட்ரோ ரயில் திட்டம் தொடர்பான விரிவான வரைவு திட்ட அறிக்கை குறித்த ஆலோனைக் கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில், அரசு முதன்மைச் செயலாளர் ஃ சென்னை மெட்ரோ இரயில் நிறுவன மேலாண்மை இயக்குநர் எம்.ஏ.சித்திக் தெரிவித்தாவது:-

மதுரை மெட்ரோ ரயில் திட்டம் தொடர்பான விரிவான வரைவு திட்ட அறிக்கை தயாரிப்பது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. மதுரை மெட்ரோ ரயில் திட்டத்திற்கான விரிவான வரைவு திட்ட அறிக்கை நிறைவுபெறும் நிலையில் உள்ளது. மாவட்ட அளவிலான கூட்டம் நடைபெற்றுள்ளது.

இந்த கூட்டத்தில் விரிவான அறிக்கை தொடர்பாக விவாதிக்கப்பட்டது. மதுரை ஒத்தக்கடை முதல் திருமங்கலம் 32 கிலோ மீட்டர் வழித்தடம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதில்இ 5 கி.மி சுரங்கபாதை ரயில் வழித்தடம்இ 27 கி.மீ மேல்மட்ட ரயில் வழித்தடம் ஆகும்.

அதேபோல, 27 ரயில் நிறுத்தங்கள் ஏற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதில் 3 ரயில் நிறுத்தங்கள் சுரங்கபாதை ரயில் நிறுத்தங்களாக அமையும். அவை நகரின் மையப்பகுதிகளான மதுரை ரயில் நிலையம் – பெரியார் பேருந்து நிலையம், அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவில், கோரிப்பாளையம் ஆகிய பகுதிகளில் அமையும்.

அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில் பகுதியில் ஆவணி மூல வீதி அல்லது மாசி வீதி பகுதியில் மெட்ரோ ரயில் நிறுத்தம் அமைப்பது என, திட்டமிட்டுள்ளோம். மெட்ரோ ரயில் வழிப்பாதை அமைக்கும் பணிகளால் கோவில் தேரோட்டத்தில் பாதிப்பு இருக்காது.

மதுரை மெட்ரோ ரயில் திட்ட அறிக்கையே இதுவரையிலும் விரைவாக தயாரிக்கப்பட்ட அறிக்கை ஆகும். கோவை மதுரை ஆகிய இரு மெட்ரோ திட்ட அறிக்கைகளும் வரும் ஜூலை 15-ஆம் தேதி தமிழ்நாடு அரசிடம் சமர்ப்பிக்கப் படவுள்ளது.

திட்ட அறிக்கை மத்திய அரசின் ஒப்புதல் பெற்ற பின்பு போதிய நிதி ஆதாரம் பெறப்பட்டு திட்டப்பணிகள் தொடங்கும் என, அரசு முதன்மைச் செயலாளர் ஃ சென்னை மெட்ரோ இரயில் நிறுவன மேலாண்மை இயக்குநர் எம்.ஏ.சித்திக் தெரிவித்தார்.

முன்னதாக, அரசு முதன்மைச் செயலாளர் ஃ சென்னை மெட்ரோ இரயில் நிறுவன மேலாண்மை இயக்குநர் எம்.ஏ.சித்திக், மதுரை மெட்ரோ ரயில் திட்டப்பணிகள் தொடர்பாக, அருள்மிகு மினாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவில், தல்லாகுளம் பகுதிகளில் நேரடியாக கள ஆய்வு மேற்கொண்டார்.

இந்த கூட்டத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர் மா.சௌ.சங்கீதா மாநகராட்சி ஆணையாளர் கே.ஜெ.பிரவீன் குமார், மாவட்ட வருவாய் அலுவலர் ர.சக்திவேல் சென்னை மெட்ரோ இரயில் திட்ட இயக்குநர் த.அர்ஜீனன் , முதன்மைப் பொது மேலாளர்கள் (கட்டிடக்கலை) ரேகா பிரகாஷ், லிவிங்ஸ்டன் உட்பட பல்வேறு துறை சார்ந்த அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

Entertainment News

Popular Categories