spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeசற்றுமுன்துர்நாற்றம் வீசுது வண்டியூர் கண்மாய்!

துர்நாற்றம் வீசுது வண்டியூர் கண்மாய்!

- Advertisement -

மதுரை: மதுரை சிவகங்கை சாலையில், அமைந்துள்ளது வண்டியூர் கண்மாய். இந்த கண்மாய் மூலம் பெறும் நீரில் பல ஏக்கர் கணக்கில் விவசாயிகள் பாசனம் செய்வதுடன், மதுரை கோமதிபுரம், வண்டியூர், மேலமடை, பாண்டி கோவில் பகுதிகளில் குடிநீர் ஊற்று ஆதாரமாகவும் திகழ்கிறது.

இந்தக் கண்மாய் பொதுப்பணித் துறையினர் கட்டுப்பாட்டில் உள்ளது . இந்தக் கண்மாயில், முழுவதுமாக ஆகாயத் தாமரை படர்ந்து அப்பகுதியில் செல்வோர் முகம் சுளிக்கும் வகையில் துர்நாற்றம் வீசுகிறது.

கண்மாய் கரையை உயர்த்தியும், கண்மாயை ஆழப் படுத்தியும் பணிகள் மேற்கொள்ள விவசாயிகள் கேட்டுக் கொண்டுள்ளனர். மேலும், இந்தக் கண்மாயில் கரைகளை உயர்த்தி படகு சவாரி விட வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

கண்மாயில் உள் பகுதிகளில், ஆகாயத்தாமரை நிறைந்து காணப்படுவதால், அப்பதிகளில் முச்செடிகள் அடர்ந்து காணப்படுகிறது. ஆகவே, தமிழக அரசு பொதுப்பணித் துறையினர் விவசாயிகளின் நலனில் அக்கறை காட்ட வேண்டும் என இப்பகுதி மக்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari

Follow us on Social Media

19,131FansLike
386FollowersFollow
91FollowersFollow
0FollowersFollow
4,904FollowersFollow
17,200SubscribersSubscribe