ரேசன் அரிசி கடத்தலில் பல்லாயிரம் கோடி இழப்பு : சி.பி.ஐ. விசாரணை கோருகிறார் ராமதாஸ்

ramadoss சென்னை ரேஷன் அரிசி கடத்தல் விவகாரத்தில் பல்லாயிரம் கோடி ரூபாய்க்கு இழப்பு ஏற்பட்டுள்ளது என்றும், இது குறித்து சிபிஐ விசாரணை நடத்தப் பட வேண்டும் என்றும் பாமக நிறுவுனர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார். இன்று இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பொருளாதார ஆய்வறிக்கையில் தமிழகத்தில் நியாயவிலை கடைகள் மூலம் வழங்கப்பட வேண்டிய அரிசி கடத்தப்படுவது குறித்து அதிர்ச்சியூட்டும் தகவல்கள் தெரிவிக்கப்பட்டிருக்கின்றன. பொது வினியோகத் திட்டத்தின் கீழ் வழங்கப்படுவதற்கான அரிசியில் 12 விழுக்காட்டுக்கும் கூடுதலான அரிசி கடத்தப்படுவதை சாதாரண விசயமாக ஒதுக்கிவிட முடியாது. தமிழகத்தில் நடைபெறும் அரிசிக் கடத்தல் தொடர்பாக தேசிய மாதிரிக் கனக்கெடுப்பில் தெரிய வந்துள்ள புள்ளி விவரங்களின் அடிப்படையில் தான் இந்தக் குற்றச்சாற்றை பொருளாதார ஆய்வறிக்கை முன்வைத்துள்ளது. 2011-12 ஆம் ஆண்டில் தமிழ்நாட்டிற்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட 35.32 லட்சம் டன் அரிசியில் 31.56 லட்சம் டன் அரிசி மட்டும் தான் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது என்றும், மீதமுள்ள 3.76 லட்சம் டன் அரிசி கடத்தப்பட்டுள்ளதாகவும் பொருளாதார ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இதன் மதிப்பு ரூ.610 கோடி எனவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அரிசி அளவின் அடிப்படையில் பார்த்தால் பொதுவினியோகத்திட்டத்தின் கீழ் வழங்கப்பட வேண்டிய அரிசியில் சுமார் 12 விழுக்காடு கடத்தப்பட்டிருக்கிறது. மதிப்பின் அடிப்படையில் பார்த்தால் அரிசி மானியத்திற்கான ரூ.3200 கோடியில் சுமார் 19% அளவுக்கு கடத்தல் நடைபெற்றிருக்கிறது. இது மிகப்பெரிய அளவிலான ஊழல் ஆகும். அரிசி கடத்தலைத் தொடர்பான தேசிய மாதிரிக் கணக்கெடுப்பு விவரங்கள் துல்லியமானவை அல்ல என்றும், இதனால் இதை பொருட்படுத்தத் தேவையில்லை என்றும் தமிழக அரசு அதிகாரிகள் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டிருக்கிறது. இது அரிசிக் கடத்தல் ஊழலை அடியோடு மூடி மறைக்கும் முயற்சி ஆகும். அரிசிக் கடத்தல் தொடர்பான தேசிய மாதிரிக் கணக்கெடுப்பு விவரங்கள் அரிசிக் கடத்தலின் அளவைக் குறைத்து வேண்டுமானால் காட்டியிருக்கலாமே தவிர நிச்சயமாக அதிகரித்துக் காட்டியிருக்க வாய்ப்பு இல்லை. அதற்கெல்லாம் மேலாக கைப்புண்ணுக்கு கண்ணாடி தேவையில்லை என்பதைப் போல தமிழகத்தில் நடைபெறும் நியாயவிலைக் கடை அரிசி கடத்தல் அனைவருக்கும் தெரிந்த உண்மை தான். எனவே. தேசிய மாதிரிக் கணக்கெடுப்பு புள்ளி விவரங்களின் துல்லியத் தன்மையை காரணம் காட்டி இந்த ஊழலை மூடி மறைக்க முயல்வதை ஏற்றுக்கொள்ள முடியாது. தமிழகத்தில் மொத்தம் 33,973 நியாயவிலைக் கடைகள் உள்ளன. இவற்றில் எந்த நியாயவிலைக் கடைக்கு சென்றாலும் 20 ஆம் தேதிக்குப் பிறகு அரிசி வழங்கப்படாது. அதேபோல், சிறப்பு பொது வினியோகத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பு, பாமாயில் ஆகியவற்றை 10 ஆம் தேதிக்குப் பிறகு வாங்க முடியாது. காரணம் ஒவ்வொரு நியாயவிலைக் கடைக்கும் எந்த அளவுக்கு அரிசி ஒதுக்கீடு செய்யப்பட வேண்டுமோ, அதில் 60% மட்டுமே ஒதுக்கீடு செய்யப்படுகிறது. அதேபோல், பருப்பு, பாமாயில் போன்ற பொருட்கள் 50% அளவுக்கு மட்டுமே ஒதுக்கீடு செய்யப் படுகின்றன. அப்படியானால் மீதமுள்ள பொருட்கள் கடத்தப்பட்டிருப்பதாகத் தான் கொள்ள வேண்டும். இந்தக் கணக்கின் அடிப்படையில் பார்த்தால் அரிசி கடத்தல் மூலம் ரூ.1280 கோடியும், பருப்பு மற்றும் பாமாயில் கடத்தல் மூலம் அரசுக்கு ரூ.697 கோடியும் இழப்பு ஏற்பட்டிருக்க வேண்டும். இது பொருளாதார ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள தொகையை விட பல மடங்கு அதிகமாகும். நியாயவிலைக் கடை பொருட்கள் கடத்தப்படுவதன் மூலம் அரசுக்கு ஓராண்டுக்கு ஏற்படும் இழப்பு ரூ.1977 கோடி என்றால், 4 ஆண்டுகளில் அரசுக்கு ரூ.7908 கோடி இழப்பு ஏற்பட்டிருக்க வேண்டும். நியாயவிலைக் கடை பொருட்கள் கடத்தல் தொடர்பான குற்றச்சாற்றுக்கள் உண்மையில்லை என்றால் அதை நிரூபிக்க வேண்டிய கடமையும், பொறுப்பும் தமிழக அரசுக்கு தான் உள்ளது. தமிழ்நாட்டில் அரிசி, பருப்பு உள்ளிட்ட பொருட்கள் கடத்தப்படவில்லை என்று தமிழக அரசு கருதுமானால், இதுகுறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு தன்னை ஆட்படுத்திக் கொண்டு குற்றமற்ற தன்மையை நிரூபிக்க வேண்டும். இல்லாவிட்டால் இந்தக் குற்றச்சாட்டுக்கள் உண்மை என்று தான் மக்கள் நம்ப வேண்டியிருக்கும். என்று கூறியுள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

திருப்பரங்குன்றம் கோயிலில் பங்குனி பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!

ஏப்ரல் ஐந்தாம் தேதி தேரோட்டம், ஏப்ரல் ஆறாம் தேதி தீர்த்த உற்ஸவம் நடக்கிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை, கோயில் நிர்வாகம் மற்றும் அறங்காவலர் குமுவினர் செய்து வருகிறது

ராகுல் – நேரு – கான்ஷிராம்: காங்கிரஸின் வரலாறு சொல்வது என்ன ?

அரசமைப்பு மாநாட்டில் பேசிய ராகுல் காந்தி இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு உயிரோடு இருந்திருந்தால் அவர் பகுஜன் சமாஜ் கட்சியை ஆரம்பித்த கான்ஷிராமை உத்தர பிரதேசத்தின் முதல்வராக்கி இருப்பார்

பஞ்சாங்கம் மார்ச் 23 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அச்சத்தில் தமிழக பெண்கள்; திமுக.,வுக்கு பாடம் புகட்ட சரியான நேரம்!

திமுக அரசின் அலட்சியத்தால் கேள்விக்குறியான பெண்கள் பாதுகாப்பு; அச்சத்தில் தமிழகத்தின் பெண்கள் இருப்பதாக,

Topics

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

திருப்பரங்குன்றம் கோயிலில் பங்குனி பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!

ஏப்ரல் ஐந்தாம் தேதி தேரோட்டம், ஏப்ரல் ஆறாம் தேதி தீர்த்த உற்ஸவம் நடக்கிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை, கோயில் நிர்வாகம் மற்றும் அறங்காவலர் குமுவினர் செய்து வருகிறது

ராகுல் – நேரு – கான்ஷிராம்: காங்கிரஸின் வரலாறு சொல்வது என்ன ?

அரசமைப்பு மாநாட்டில் பேசிய ராகுல் காந்தி இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு உயிரோடு இருந்திருந்தால் அவர் பகுஜன் சமாஜ் கட்சியை ஆரம்பித்த கான்ஷிராமை உத்தர பிரதேசத்தின் முதல்வராக்கி இருப்பார்

பஞ்சாங்கம் மார்ச் 23 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அச்சத்தில் தமிழக பெண்கள்; திமுக.,வுக்கு பாடம் புகட்ட சரியான நேரம்!

திமுக அரசின் அலட்சியத்தால் கேள்விக்குறியான பெண்கள் பாதுகாப்பு; அச்சத்தில் தமிழகத்தின் பெண்கள் இருப்பதாக,

பஞ்சாங்கம் மார்ச் 22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தகுந்த வைத்தியம் தேவை!

ஒரு பெண்மணி கால்நடை மருத்துவரிடம் வந்தார், அவருடன் ஒரு உயர் இன...

திருப்பரங்குன்றம் மலை மீது தொழுகைக்குச் சென்றவர்கள் போலீஸாருடன் வாக்குவாதம்!

திருப்பரங்குன்றம் மலைப்பாதையில் பரபரப்பு; மலைமேல் நெல்லி தோப்பில் ரம்ஜான் தொழுகைக்குச் சென்ற இஸ்லாமியர்கள்பெயர் முகவரி பதிவு செய்ய எதிர்ப்பு போலீசாருடன் வாக்குவாதம்!

Entertainment News

Popular Categories