ஆட்டோக்கள் நேருக்கு நேர் மோதல்: ஓட்டுநர் பலி

Published:

சென்னை: சென்னையில் ஆட்டோக்கள் இரண்டு நேருக்கு நேர் மோதிக் கொண்டதில், ஓட்டுநர் ஒருவர் பலியானார். சென்னை சேத்துப்பட்டு வரதராஜபுரத்தைச் சேர்ந்தவர் ராஜ்குமார் (60). ஆட்டோ ஓட்டுநர். இவர் நேற்று தனது ஆட்டோவை சேத்துப்பட்டு மேயர் ராமநாதன் சாலையில் ஓட்டி வந்தார். அதே சாலையில் எதிரில் அந்தோணிராவ் என்றபவர் ஆட்டோவை ஓட்டி வந்தார். இந்த 2 ஆட்டோக்களும் எதிர்பாராத விதமாக நேருக்கு நேர் பயங்கரமாக மோதிக் கொண்டன. இந்த விபத்தில் இரண்டு ஆட்டோக்களிலும் பயணிகள் எவரும் இல்லை என்பதால் வேறு பெரிய அசம்பாவிதம் ஏற்படவில்லை. இருப்பினும், இரண்டு ஆட்டோக்களிலும் இருந்த ஓட்டுநர்கள் ராஜ்குமார், அந்தோணிராஜ் இருவரும் படுகாயம் அடைந்தனர். அவர்கள் இருவரும் அருகில் உள்ள கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் உடனே அனுமதிக்கப்பட்டனர். மருத்துவமனையில் ஓட்டுநர் ராஜ்குமாரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாகத் தெரிவித்தனர். மற்றொரு ஆட்டோ ஓட்டுநர் அந்தோணிராஜ் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து, பாண்டிபஜார் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ALSO READ:  செல்போனுக்குத் தடை; கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு தண்டனையா?

Related articles

Recent articles

spot_img