December 5, 2025, 7:47 PM
26.7 C
Chennai

கனல் கண்ணன் கைது- கருத்துச் சுதந்திரத்தை நசுக்கி பிதுக்கும் செயல்!

hindumunnani - 2025

கனல் கண்ணன் கைது – கருத்து சுதந்திரத்தை நசுக்கி பிதுக்கும் செயல் என்று இந்துமுன்னணி அமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பில், இந்து முன்னணி அமைப்பின் மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் வெளியிட்ட அறிக்கை:

இந்து முன்னணி கலை இலக்கிய பிரிவு மாநிலத் தலைவர் திரு. கனல்கண்ணன் அவர்களை நாகர்கோவில் சைபர் கிரைம் காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார் . இது கடும் கண்டனத்திற்குரியதாகும் .

கனல் கண்ணன் அவர்கள் ஏற்கனவே சமூக வலைதளங்களில் பல ஆயிரம் நபர்களால் பதிவிடப்பட்டு வந்த ஒரு வீடியோவை பதிவு செய்துள்ளார். அந்த வீடியோ காட்சி எதனையும் அவர் உருவாக்கவில்லை, எடிட் செய்யவும் இல்லை . அவரது பதிவில் எந்த மதத்தையும் குறிப்பிட்டு எந்த வாசகமும் தெரிவிக்கவில்லை. அவரது செயல் எந்த விதத்திலும் சட்டப்படியான குற்றச்செயல் அல்ல.
திமுக பொறுப்பாளரின் புகாரின் பேரில் பொய் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

இருந்தபோதிலும் விசாரணை அழைப்பாணையை ஏற்று மருத்துவமனையில் போய் பயந்து படுத்துக்கொள்ளாமல் தைரியத்தோடும், தன்னம்பிக்கையோடும் நியாயம் தன்னிடம் உள்ளது என்ற நம்பிக்கையோடும் காவல்துறை விசாரணைக்கு ஒத்துழைப்பு அளிக்கும் நல்ல எண்ணத்தோடு நாகர்கோவில் சைபர் கிரைம் காவல் நிலையத்திற்கு நேற்று காலை 10:30 மணிக்கு சென்றுள்ளார். மதியம் 2 மணி வரை அவரிடம் ஐந்து நிமிடம் மட்டுமே விசாரணை நடத்தி விட்டு வேண்டுமென்றே பல மணி நேரம் தேவையில்லாமல் அவரை காக்க வைத்துள்ளனர். மதியம் இரண்டு மணிக்கு ஆகியும் உணவருந்தக்கூட விடாமல் அவரை தடுத்து நிறுத்தி உள்ளே அனுப்பி உள்ளனர். மயக்க நிலைக்குப் போன பிறகு 4 மணிக்கு தான் அவருக்கு உணவளித்துள்ளனர். உரிய நேரத்தில் உணவே வழங்காமல் இரவு 8 மணி வரை சித்தரவதை செய்துள்ளனர். இது அப்பட்டமான மனித உரிமை மீறலாகும் .

தமிழக அரசின் மக்கள் விரோத போக்கை, இந்து விரோத போக்கை யார் யாரெல்லாம் சுட்டிக்காட்டுகிறார்களோ அவர்களை எல்லாம் காவல்துறையை வைத்து மிரட்டி வழக்கு பதிவு செய்து கைது செய்வது தொடர்கதையாகி வருகிறது. தமிழக அரசின் இச்செயல் கருத்துச் சுதந்திரத்தை பறித்து, ஜனநாயகத்தின் குரல்வலையை பிதுக்கும் செயலாகும் .

கனல் கண்ணன் மீது புகார் கொடுத்த ஆஸ்டின் என்பவர் மீது அதே சைபர் கிரைம் காவல் நிலையத்தில் இரண்டு புகார்கள் பல மாதங்களாக நிலுவையில் உள்ளது. அதன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க திராணியற்ற காவல்துறை அரசியல் பழிவாங்கும் நோக்கோடு திரு.கனல் கண்ணன் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்துள்ளது.

இத்தகைய பழிவாங்கும் நோக்கத்துடன் செயல்படும் தமிழக அரசின் ஜனநாயக விரோத செயலை இந்துமுன்னணி பேரியக்கம் வன்மையாக கண்டிக்கிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories