February 22, 2026, 7:01 AM
25.4 C
Chennai

கனல் கண்ணன் கைது- கருத்துச் சுதந்திரத்தை நசுக்கி பிதுக்கும் செயல்!

hindumunnani - 2026

கனல் கண்ணன் கைது – கருத்து சுதந்திரத்தை நசுக்கி பிதுக்கும் செயல் என்று இந்துமுன்னணி அமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பில், இந்து முன்னணி அமைப்பின் மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் வெளியிட்ட அறிக்கை:

இந்து முன்னணி கலை இலக்கிய பிரிவு மாநிலத் தலைவர் திரு. கனல்கண்ணன் அவர்களை நாகர்கோவில் சைபர் கிரைம் காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார் . இது கடும் கண்டனத்திற்குரியதாகும் .

கனல் கண்ணன் அவர்கள் ஏற்கனவே சமூக வலைதளங்களில் பல ஆயிரம் நபர்களால் பதிவிடப்பட்டு வந்த ஒரு வீடியோவை பதிவு செய்துள்ளார். அந்த வீடியோ காட்சி எதனையும் அவர் உருவாக்கவில்லை, எடிட் செய்யவும் இல்லை . அவரது பதிவில் எந்த மதத்தையும் குறிப்பிட்டு எந்த வாசகமும் தெரிவிக்கவில்லை. அவரது செயல் எந்த விதத்திலும் சட்டப்படியான குற்றச்செயல் அல்ல.
திமுக பொறுப்பாளரின் புகாரின் பேரில் பொய் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

இருந்தபோதிலும் விசாரணை அழைப்பாணையை ஏற்று மருத்துவமனையில் போய் பயந்து படுத்துக்கொள்ளாமல் தைரியத்தோடும், தன்னம்பிக்கையோடும் நியாயம் தன்னிடம் உள்ளது என்ற நம்பிக்கையோடும் காவல்துறை விசாரணைக்கு ஒத்துழைப்பு அளிக்கும் நல்ல எண்ணத்தோடு நாகர்கோவில் சைபர் கிரைம் காவல் நிலையத்திற்கு நேற்று காலை 10:30 மணிக்கு சென்றுள்ளார். மதியம் 2 மணி வரை அவரிடம் ஐந்து நிமிடம் மட்டுமே விசாரணை நடத்தி விட்டு வேண்டுமென்றே பல மணி நேரம் தேவையில்லாமல் அவரை காக்க வைத்துள்ளனர். மதியம் இரண்டு மணிக்கு ஆகியும் உணவருந்தக்கூட விடாமல் அவரை தடுத்து நிறுத்தி உள்ளே அனுப்பி உள்ளனர். மயக்க நிலைக்குப் போன பிறகு 4 மணிக்கு தான் அவருக்கு உணவளித்துள்ளனர். உரிய நேரத்தில் உணவே வழங்காமல் இரவு 8 மணி வரை சித்தரவதை செய்துள்ளனர். இது அப்பட்டமான மனித உரிமை மீறலாகும் .

தமிழக அரசின் மக்கள் விரோத போக்கை, இந்து விரோத போக்கை யார் யாரெல்லாம் சுட்டிக்காட்டுகிறார்களோ அவர்களை எல்லாம் காவல்துறையை வைத்து மிரட்டி வழக்கு பதிவு செய்து கைது செய்வது தொடர்கதையாகி வருகிறது. தமிழக அரசின் இச்செயல் கருத்துச் சுதந்திரத்தை பறித்து, ஜனநாயகத்தின் குரல்வலையை பிதுக்கும் செயலாகும் .

கனல் கண்ணன் மீது புகார் கொடுத்த ஆஸ்டின் என்பவர் மீது அதே சைபர் கிரைம் காவல் நிலையத்தில் இரண்டு புகார்கள் பல மாதங்களாக நிலுவையில் உள்ளது. அதன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க திராணியற்ற காவல்துறை அரசியல் பழிவாங்கும் நோக்கோடு திரு.கனல் கண்ணன் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்துள்ளது.

இத்தகைய பழிவாங்கும் நோக்கத்துடன் செயல்படும் தமிழக அரசின் ஜனநாயக விரோத செயலை இந்துமுன்னணி பேரியக்கம் வன்மையாக கண்டிக்கிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் பிப்.22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சர்வதேச ஏஐ., மாநாட்டில் அலம்பல்! வெட்கக்கேடான காங்கிரஸின் செயல்!

புது தில்லியில் நடைபெறும் சர்வதேச அளவிலான ஏஐ மாநாட்டில் புகுந்து சட்டையைக் கழற்றி அரை நிர்வாண ஆபாச நடனம் ஆடி, உலக அளவில் இந்தியாவின் மானத்தைக் கப்பலேற்றிய

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டிரம்ப் போட்ட வரி செல்லாது! உலகளாவிய வரிகளை ரத்துசெய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்!

9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்துசெய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் வரிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Topics

பஞ்சாங்கம் பிப்.22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சர்வதேச ஏஐ., மாநாட்டில் அலம்பல்! வெட்கக்கேடான காங்கிரஸின் செயல்!

புது தில்லியில் நடைபெறும் சர்வதேச அளவிலான ஏஐ மாநாட்டில் புகுந்து சட்டையைக் கழற்றி அரை நிர்வாண ஆபாச நடனம் ஆடி, உலக அளவில் இந்தியாவின் மானத்தைக் கப்பலேற்றிய

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டிரம்ப் போட்ட வரி செல்லாது! உலகளாவிய வரிகளை ரத்துசெய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்!

9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்துசெய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் வரிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தமிழ்த் தாயைக் காத்த தனயன்

ஆக, உ.வே.சா. என்பதற்குப் பழந்தமிழை உயிர்ப்பித்த வேதியர் சாமிநாதையர் என்றும் பொருள்கொள்ளலாம்.

பஞ்சாங்கம் பிப்.19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மோடி வரும் நாளில்… புதிய ரயில்கள்..?

அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூருக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக, தூத்துக்குடி - திருச்செந்தூர் இடையே புதிய அகல ரயில் பாதை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

Entertainment News

Popular Categories