‘ஜனம் தமிழ்’ டிஜிட்டல் ஒளிபரப்பு தொடக்கம்!

janam tv opening - 2026

‘ஜனம் தமிழ்’ செய்தித் தொலைக்காட்சியின் ‘டிஜிட்டல்’ ஒளிபரப்பு தமிழகத்தில் நேற்று தொடங்கப்பட்டது.

‘ஜனம்’ தொலைக்காட்சி மலையாள செய்திகளுக்கான முக்கியமான சாட்டிலைட் சேனலாக உள்ளது. 2015ல் மலையாளத்தில் க்ரௌட் ஃபண்டிங் எனப்படும் ஆர்வலர்கள் பலர் சேர்ந்து முதலீடு செய்து உருவாக்கப்பட்ட சேனலாக அது உள்ளது. தொடங்கப்பட்ட சிறிது காலத்திலேயே கேரளத்தில் செய்திகளுக்கான தளத்தில் தனியிடம் பதித்தது ஜனம் டிவி.

இந்நிலையில் தமிழில் அது போல் ஒரு முயற்சி கொண்டு வரப்பட வேண்டும் என்று தேசியவாதிகள் பலரும் தெரிவித்த கருத்துகள் வடிவாக்கம் பெற்று, ஜனம் டிவி.,யே தமிழில் தொடங்கப்பட்டுள்ளது. இது தன் தமிழ் செய்திச் சேனலை ‘ஜனம் தமிழ்’ என்ற பெயரில் தொடங்கியுள்ளது. இதன் லோகோ வெளியீடு இந்த நிகழ்ச்சியில் நடைபெற்றது. ஜனம் டிவி., தமிழ் தோற்றத்துக்கான பின்னணியை அதன் நிர்வாக இயக்குனர் மற்றும் ஒரேநாடு இதழாசிரியர் நம்பி நாராயணன் ஆகியோர் எடுத்துரைத்தனர்.

சென்னையில் நேற்று மாலை நடந்த இதன் தொடக்க விழாவில் ‘ஜனம் தமிழ்’ டிஜிட்டல் ஒளிபரப்பை தமிழக பாஜக., மாநிலத் தலைவர் அண்ணாமலை தொடக்கி வைத்தார். ஹிந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் அதன் யுடியூப் சேனலை தொடங்கி வைத்தார். சக்தி மசாலா அதிபர்கள் துரைசாமி, சாந்தி துரைசாமி ஆகியோர் ஜனம் தமிழ் பேஸ்புக் பக்கத்தைத் தொடங்கி வைத்தார். மதுரை பேராசிரியர் அதன் இன்ஸ்டாக்ராம் பக்கத்தைத் தொடங்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் அதிமுக., முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன், விஸ்வ ஹிந்து பரிஷத் மாநில தலைவர் ஆண்டாள் சொக்கலிங்கம், ஐ.ஆர்.எஸ்., அதிகாரி நந்தகுமார், பட்டிமன்ற பேச்சாளர் மணிகண்டன், அதிமுக., முன்னாள் எம்.எல்.ஏ.,வும் முன்னாள் டிஜிபி.,யுமான நட்ராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றுப் பேசினர்.

விழாவில் பேசிய அண்ணாமலை, ”தமிழகத்தில், தேசியம் குறைவாக பேசப்படுகிறது. தேசிய செய்திகள் விரிவாக அலசப்படுவதில்லை. உலகின் தொன்மையான தமிழை உலகம் முழுதும் கொண்டு செல்ல வேண்டும். செய்தி தொலைக்காட்சிகளில், 80 சதவீதம் அரசியல் தான். மற்ற செய்திகளையும் மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும். அதற்காகவே ‘ஜனம் தமிழ்’ துவங்கப்பட்டுள்ளது” என்றார்.

முன்னதாக, டாக்டர் சீர்காழி சிவசிதம்பரத்தில் தமிழிசைக் கச்சேரி இடம்பெற்றது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 9 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

மேற்கு வங்க முதல்வர் ஆகிறார் சுவேந்து அதிகாரி! அறிவித்தார் அமித் ஷா!

மேற்கு வங்கத்தின் புதிய முதல்வர் யார் என்பது குறித்த முடிவு, சட்டசபை கட்சிக் கூட்டத்திற்குப் பிறகு இன்று (மே 08) அறிவிக்கப்படும் என்று பாஜ தெரிவித்தது.

முதலமைச்சர் கனவில் முந்திய விஜய்; வெளியில் இருந்து ஆதரிக்கும் திமுக., கூட்டணிக் கட்சிகள்!

முதலமைச்சர் கனவில் முந்திய விஜய்; வெளியில் இருந்து ஆதரிக்கும் திமுக., கூட்டணிக் கட்சிகள்!

எண்ணம் முக்கியம்; எண்ணிக்கையும் முக்கியமே!

“ஏ அர்லேகா! யாரைக் கேட்கிறாய் எண்ணிக்கை?” என்று முச்சந்திக் கூட்டத்தில் இன்னமும் ஒபாமாவுக்கு சவால் விடும் கம்யூனிஸ்டுகளைப் போலப் பேசிக் கொண்டிருப்பது நல்லதில்லை.

விஜய் தரப்பு செய்த அந்த ஒரு தவறு! தள்ளாடும் தமிழகம்!

ஆளுநர் விஸ்வநாத் ஆர்லேகர் தன் நிலையில் தெளிவாக இருக்க, அதை மீறி இந்த விவகாரம் நீதிமன்றத்திற்குச் சென்றாலும் விஜய்க்குச் சாதகமான தீர்ப்பு கிடைப்பது கடினம் என்கிறார்கள் சட்ட வல்லுநர்கள்.

Topics

பஞ்சாங்கம் மே 9 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

மேற்கு வங்க முதல்வர் ஆகிறார் சுவேந்து அதிகாரி! அறிவித்தார் அமித் ஷா!

மேற்கு வங்கத்தின் புதிய முதல்வர் யார் என்பது குறித்த முடிவு, சட்டசபை கட்சிக் கூட்டத்திற்குப் பிறகு இன்று (மே 08) அறிவிக்கப்படும் என்று பாஜ தெரிவித்தது.

முதலமைச்சர் கனவில் முந்திய விஜய்; வெளியில் இருந்து ஆதரிக்கும் திமுக., கூட்டணிக் கட்சிகள்!

முதலமைச்சர் கனவில் முந்திய விஜய்; வெளியில் இருந்து ஆதரிக்கும் திமுக., கூட்டணிக் கட்சிகள்!

எண்ணம் முக்கியம்; எண்ணிக்கையும் முக்கியமே!

“ஏ அர்லேகா! யாரைக் கேட்கிறாய் எண்ணிக்கை?” என்று முச்சந்திக் கூட்டத்தில் இன்னமும் ஒபாமாவுக்கு சவால் விடும் கம்யூனிஸ்டுகளைப் போலப் பேசிக் கொண்டிருப்பது நல்லதில்லை.

விஜய் தரப்பு செய்த அந்த ஒரு தவறு! தள்ளாடும் தமிழகம்!

ஆளுநர் விஸ்வநாத் ஆர்லேகர் தன் நிலையில் தெளிவாக இருக்க, அதை மீறி இந்த விவகாரம் நீதிமன்றத்திற்குச் சென்றாலும் விஜய்க்குச் சாதகமான தீர்ப்பு கிடைப்பது கடினம் என்கிறார்கள் சட்ட வல்லுநர்கள்.

மாநில ஆளுநரின் அதிகாரங்களும், ஆட்சிப் பொறுப்பு ஒப்படைப்பும்!

மறு தேர்தல் ஆறு மாதத்திற்கு நடத்த வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால் குடியரசுத் தலைவரின் பெயரில் கவர்னர் ஆட்சி செய்வார். இத்தகைய சூழ்நிலைகளில், ஆளுநர் நடுநிலையுடன் செயல்பட வேண்டும்

பஞ்சாங்கம் மே 8 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories