ஹிந்து அல்லாதோர் நுழையத் தடை: கோயிலில் அறிவிப்புப் பலகையை வைக்க நீதிமன்றம் உத்தரவு!

palani temple annoucement - 2026

ஹிந்துக்கள் அல்லாதோர் பழநி கோயிலில் நுழைய தடை என்ற அறிவிப்பு பலகையை கோயில் முன்பாக நிறுவ வேண்டும் என சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த செந்தில்குமார் என்பவர் தாக்கல் செய்த வழக்கை விசாரித்த நீதிபதி ஸ்ரீமதி, ஏற்கெனவே இருந்த அறிவிப்புப் பலகை நீக்கப்பட்டது ஏன்? என்று அறநிலையத்துறைக்கு கேள்வி எழுப்பியதுடன், தேவையற்ற சர்ச்சைகளை உருவாக்க வேண்டாம் என்றும் அறிவுறுத்தினார். மேலும், ஹிந்து அல்லாதோர் கோயிலில் நுழைய தடை என்ற அறிவிப்பு பலகையை மீண்டும் அங்கே நிறுவ வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பித்தார்.

இது கூறித்து விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பினர் தெரிவித்த போது, பழனி ஞானதண்டாயுதபானி திருக்கோவிலில், ஹிந்து அல்லாதோர் நுழைய தடை விதிக்கும் பதாகையை அகற்றிய அறங்கெட்ட அறநிலையத்துறையின் செயலை எதிர்த்து, விஸ்வ ஹிந்து பரிஷத் – திருக்கோவில், அர்ச்சகர், புரோகித் தென் தமிழக மாநில அமைப்பாளர் செந்தில் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார்.

அதன் அடிப்படையில் இந்த வழக்கு இன்று நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. எங்கள் சார்பாக வழக்கறிஞர் அருண் சுவாமிநாதன் வாதாடினார். இந்த வழக்கை விசாரித்த நீதியரசர், பழனி கோவிலுக்குள் ஹிந்துக்கள்‌ அல்லாதோர் நுழைய தடை விதித்ததோடு மட்டுமன்றி உடனடியாக அந்த பதாகையை வைக்கவும் உத்தரவிட்டார்.

மேலும் எதன் அடிப்படையில் பதாகையை இந்து சமய‌ அறநிலையத்துறை அகற்றியது, அகற்ற‌ உத்தரவிட்டது யார்‌ என்ற கேள்வியும் எழுப்பினார்? இதன் மூலம், இந்து சமய அறநிலையத்துறையின் கருப்பு ஆடுகளுக்கு சம்மட்டி அடி கொடுக்கப்பட்டுள்ளது. மேலும், இது விசுவ ஹிந்து பரிஷத் – திருக்கோவில், அர்ச்சக், புரோகித் பேரமைப்பிற்கு கிடைத்த மாபெரும் வெற்றி என்று குறிப்பிட்டனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories