வீட்டிலே ஆடு; மதுரையில் ஜல்லிக்கட்டு மாடு! சீறிய காளையை பாசத்தால் கட்டுப்படுத்திய அண்ணாமலை!

annamalai bull - 2026

மதுரயில், கூட்டத்தில் சீறிப்பாய்ந்த காளையைக் கண்டு, தெறித்து ஓடிய தொண்டர்களையும், காளையையும் பாசத்தால் கட்டுப்படுத்திய அண்ணாமலை குறித்த வீடியோ சமூகத் தளங்களில் வைரலாகி வருகிறது..

மதுரை மாவட்டத்தில் பாதயாத்திரையின் தொடக்க நிகழ்ச்சியில் வரவேற்பிற்காக கொண்டு வரப்பட்ட ஜல்லிக்கட்டுக் காளை ஒன்று, அண்ணாமலை வந்து வஸ்திரம் சாற்றி பொட்டு வைத்த போது, கூட்டத்தைக் கண்டு மிரண்டு, திடீரென துள்ளிக் குதித்தது. அதனால் உடன் இருந்த கூட்டத்தினர் சற்று பின்வாங்கிச் சென்றனர். ஆனால், பாஜக தலைவர் அண்ணாமலை உடனே அதன் அருகில் வந்து, முகத்தில் தடவிக் கொடுத்து, அதனை அமைதிப்படுத்தினார். அதன் பின் மாடு தலையாட்டியபடி அமைதியாக நின்றது. இந்தக் காட்சி சமூகத் தளங்களில் வைரலாகி வருகிறது.

‘என் மண், என் மக்கள்’ என  தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தமிழகம் தழுவிய அளவில் பாதயாத்திரை மேற்கொணடு வருகிறார். அதன் ஒரு பகுதியாக இன்று மதுரை மாவட்டத்தில் பாதையாத்திரை மேற்கொண்டார். இதில், மதுரை மேலூர் அரசு கலைக்கல்லூரி அருகே பாதயாத்திரை தொடங்கியுயது. இதில் ஏராளமான பாஜக தொண்டர்களும் கலந்து கொண்டனர்.

பாதயாத்திரை தொடங்கும் இடத்தில் 10க்கும் மேற்பட்ட ஜல்லிக்கட்டுக் காளைகளைக் கட்டி வரவேற்பு அளிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த நிகழ்ச்சியில் தான் மேற்குறிப்பிட்ட சம்பவம் நடைபெற்றது.

அண்ணாமலை ஒரு விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவர் என்பதும், அவர் வீட்டிலே ஆடுகள் வளர்ப்பினைக் கொண்டவர் என்பதும் தெரிந்த விஷயம்தான். அங்கே ஆடுகளுடன் அன்பாகப் பழகியவர், இன்று சீறும் ஒரு ஜல்லிக்கட்டுக் காளையையும் அச்சமின்றி அருகே சென்று அன்பாகத் தடவிக் கொடுத்து அமைதிப் படுத்தியதைக் கண்ட கட்சியினர் ஆரவாரம் செய்தனர்.

தொடர்ந்து அண்ணாமலை மேற்கொண்ட பாதயாத்திரை சந்தைப்பேட்டை பெரிய கடை வீதி, நகைக்கடை பஜார், சிவன் கோவில், செக்கடி, அழகர் கோவில் ரோடு வழியாக மேலூர் பஸ் நிலையத்தை அடைந்தது.

வழிநெடுகிலும் நடைபயணம் மேற்கொண்டு வரும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு பாஜக.,வினர் மட்டுமல்லாது, பொதுமக்களும் அதிக அளவில் ஆர்வத்துடன் மலர்களைத் தூவியும் ஆரத்தி எடுத்தும் வரவேற்று மகிழ்ந்தனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories