வீட்டிலே ஆடு; மதுரையில் ஜல்லிக்கட்டு மாடு! சீறிய காளையை பாசத்தால் கட்டுப்படுத்திய அண்ணாமலை!

annamalai bull - 2026

மதுரயில், கூட்டத்தில் சீறிப்பாய்ந்த காளையைக் கண்டு, தெறித்து ஓடிய தொண்டர்களையும், காளையையும் பாசத்தால் கட்டுப்படுத்திய அண்ணாமலை குறித்த வீடியோ சமூகத் தளங்களில் வைரலாகி வருகிறது..

மதுரை மாவட்டத்தில் பாதயாத்திரையின் தொடக்க நிகழ்ச்சியில் வரவேற்பிற்காக கொண்டு வரப்பட்ட ஜல்லிக்கட்டுக் காளை ஒன்று, அண்ணாமலை வந்து வஸ்திரம் சாற்றி பொட்டு வைத்த போது, கூட்டத்தைக் கண்டு மிரண்டு, திடீரென துள்ளிக் குதித்தது. அதனால் உடன் இருந்த கூட்டத்தினர் சற்று பின்வாங்கிச் சென்றனர். ஆனால், பாஜக தலைவர் அண்ணாமலை உடனே அதன் அருகில் வந்து, முகத்தில் தடவிக் கொடுத்து, அதனை அமைதிப்படுத்தினார். அதன் பின் மாடு தலையாட்டியபடி அமைதியாக நின்றது. இந்தக் காட்சி சமூகத் தளங்களில் வைரலாகி வருகிறது.

‘என் மண், என் மக்கள்’ என  தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தமிழகம் தழுவிய அளவில் பாதயாத்திரை மேற்கொணடு வருகிறார். அதன் ஒரு பகுதியாக இன்று மதுரை மாவட்டத்தில் பாதையாத்திரை மேற்கொண்டார். இதில், மதுரை மேலூர் அரசு கலைக்கல்லூரி அருகே பாதயாத்திரை தொடங்கியுயது. இதில் ஏராளமான பாஜக தொண்டர்களும் கலந்து கொண்டனர்.

ALSO READ:  சோலைமலை முருகன் கோயிலில் மகா கும்பாபிஷேகம்!

பாதயாத்திரை தொடங்கும் இடத்தில் 10க்கும் மேற்பட்ட ஜல்லிக்கட்டுக் காளைகளைக் கட்டி வரவேற்பு அளிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த நிகழ்ச்சியில் தான் மேற்குறிப்பிட்ட சம்பவம் நடைபெற்றது.

அண்ணாமலை ஒரு விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவர் என்பதும், அவர் வீட்டிலே ஆடுகள் வளர்ப்பினைக் கொண்டவர் என்பதும் தெரிந்த விஷயம்தான். அங்கே ஆடுகளுடன் அன்பாகப் பழகியவர், இன்று சீறும் ஒரு ஜல்லிக்கட்டுக் காளையையும் அச்சமின்றி அருகே சென்று அன்பாகத் தடவிக் கொடுத்து அமைதிப் படுத்தியதைக் கண்ட கட்சியினர் ஆரவாரம் செய்தனர்.

தொடர்ந்து அண்ணாமலை மேற்கொண்ட பாதயாத்திரை சந்தைப்பேட்டை பெரிய கடை வீதி, நகைக்கடை பஜார், சிவன் கோவில், செக்கடி, அழகர் கோவில் ரோடு வழியாக மேலூர் பஸ் நிலையத்தை அடைந்தது.

வழிநெடுகிலும் நடைபயணம் மேற்கொண்டு வரும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு பாஜக.,வினர் மட்டுமல்லாது, பொதுமக்களும் அதிக அளவில் ஆர்வத்துடன் மலர்களைத் தூவியும் ஆரத்தி எடுத்தும் வரவேற்று மகிழ்ந்தனர்.

ALSO READ:  சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

எரிவாயு கசிவு ஏற்பட்ட சிலிண்டர்; லாரி ஓட்டுநரின் அலட்சிய பதிலால் பரபரப்பு!

மதுரையில் நூற்றுக்கணக்கான கேஸ் சிலிண்டர்கள் எடுத்துச் சென்ற லாரியில் எரிவாயு கசிவு ஏற்பட்ட நிலையில், சாலையில் சென்றவர்கள் அச்சம் அடைந்தனர்.

சோலைமலை முருகன் கோயிலில் மகா கும்பாபிஷேகம்!

அழகர்கோவில்: மதுரை, அழகர் மலையில் அமையப்பெற்றுள்ளது சோலை மலை முருகன் கோவில் சிறப்புமிக்க இந்த பிரசித்தி பெற்ற சோலை மலை முருகன் கோவிலில் கடந்த 2014ம் ஆண்டு கும்பாபிஷேக விழா நடந்தது.

பஞ்சாங்கம் ஜூலை 05 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

திருப்பரங்குன்றத்தில் வருஷாபிஷேகம்

திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் வருஷாபிஷேகத்தை முன்னிட்டு யாகசாலை பூஜையுடன் துவங்கியது.

FIFA 2026: 32 அணிகள் சுற்றில் தேறியவை!

காலிறுதிக்கு முந்தைய சுற்று இன்று முதல் தொடங்குகிறது. நாளொன்றுக்கு இரண்டு ஆட்டங்கள் வீதம் ஜூலை 4 முதல் 7 வரை எட்டு ஆட்டங்கள் நடைபெறும்.

Topics

எரிவாயு கசிவு ஏற்பட்ட சிலிண்டர்; லாரி ஓட்டுநரின் அலட்சிய பதிலால் பரபரப்பு!

மதுரையில் நூற்றுக்கணக்கான கேஸ் சிலிண்டர்கள் எடுத்துச் சென்ற லாரியில் எரிவாயு கசிவு ஏற்பட்ட நிலையில், சாலையில் சென்றவர்கள் அச்சம் அடைந்தனர்.

சோலைமலை முருகன் கோயிலில் மகா கும்பாபிஷேகம்!

அழகர்கோவில்: மதுரை, அழகர் மலையில் அமையப்பெற்றுள்ளது சோலை மலை முருகன் கோவில் சிறப்புமிக்க இந்த பிரசித்தி பெற்ற சோலை மலை முருகன் கோவிலில் கடந்த 2014ம் ஆண்டு கும்பாபிஷேக விழா நடந்தது.

பஞ்சாங்கம் ஜூலை 05 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

திருப்பரங்குன்றத்தில் வருஷாபிஷேகம்

திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் வருஷாபிஷேகத்தை முன்னிட்டு யாகசாலை பூஜையுடன் துவங்கியது.

FIFA 2026: 32 அணிகள் சுற்றில் தேறியவை!

காலிறுதிக்கு முந்தைய சுற்று இன்று முதல் தொடங்குகிறது. நாளொன்றுக்கு இரண்டு ஆட்டங்கள் வீதம் ஜூலை 4 முதல் 7 வரை எட்டு ஆட்டங்கள் நடைபெறும்.

பஞ்சாங்கம் ஜூலை 04 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

திருநெல்வேலி சிறப்பு ரயில்களின் சேவை நீட்டிப்பு!

தெற்கு ரயில்வே சார்பாக இயக்கப்படும் திருநெல்வேலி மேட்டுப்பாளையம் திருநெல்வேலி சிறப்பு ரயில் உட்பட சில சிறப்பு ரயில் சேவைகள் ஜூலை இறுதி வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளதாக தென்னக இரயில்வே அறிவித்துள்ளது .

Entertainment News

Popular Categories