ஸ்ரீரங்கம் கோயில் கோபுரம் சிதைவு: அறநிலையத் துறை மெத்தனத்துக்கு இந்து முன்னணி கண்டனம்!

srirangam temple gopuram issue - 2026

ஶ்ரீரங்கம் திருக்கோவில் கிழக்கு கோபுரம் சிதைவடைந்து விழுந்துள்ளது, இந்து சமய அறநிலையத்துறை அலட்சியம். ஆமை வேகத்தில் செயல்படும் அதிகாரிகள். பக்தர்கள் உயிர் கிள்ளுகீரையா? என்று கேட்டு, இந்து முன்னணி அமைப்பின் மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் அறிக்கை வெளியிட்டுள்ளார். அவரது அறிக்கை:

வரலாற்று சிறப்புமிக்கதும், ஆயிரக்கணக்கான ஆண்டுகள் பழமையானதுமான ஶ்ரீரங்கம் திருக்கோவில் கிழக்கு கோபுரம் சிதைவடைந்து விழுந்து உள்ளது.

இது எத்தகைய அபசகுணம். கோவில் வளாகம் தீ பிடிப்பது, சிதிலமடைந்து சிதைவது போன்றவை ஆட்சியாளர்கள் அலட்சியத்தால் ஏற்படுவது. இது போன்ற சம்பவங்கள் ஆட்சியாளர்களுக்கு வரும் ஆபத்தை குறிப்பது என்பது மக்கள் நம்பிக்கை.

நூறு ஆண்டுகள் கடந்தாலே தொன்மையானது என்று பாதுகாக்கபட வேண்டும் என்பதைக் கூட அறியாத குருடர்களாக அறநிலையத்துறை இருந்துவருகிறது வேதனைக்குரிய விஷயம்.

பல நூற்றாண்டுகள் கடந்த ஸ்ரீ ரங்கம் கோவில் போலுள்ள பல கோவில்கள் கலாச்சார பாரம்பரியமாக பாதுக்காக்க பட வேண்டியவை. சிதிலமடைந்துள்ளதை சுட்டிக்காட்டி சில நாட்கள் முன்பு இந்து முன்னணி மற்றும் ஆன்மிக பெரியவர்கள் எச்சரித்தனர். இருந்தும் தமிழக இந்து சமய அறநிலையத்துறை உடனடியாக நடவடிக்கை எடுக்க தவறியது.

இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு அவர்களை செயல்பாபு என முதல்வர் புகழ்ந்து சில மாதங்களுக்கு முன்பு பேசினார். செயல்பாபு என்று முதல்வரால் பாராட்டப்பட்டவரின் நடவடிக்கையே இப்படி என்றால் மற்றவர்களின் செயல்பாடு எத்தகையது என தமிழக மக்கள் சிந்தித்து பார்க்க வேண்டும்.

தெய்வாதீனமாக இந்த அசம்பாவிதம் பகலில் நடைபெறவில்லை. இது இறைவனின் கருணை என்றே கருதுகிறோம். பக்தர்கள் நடமாட்டத்தின் போது நடந்து இருந்தால் பலருக்கு பாதிப்பு ஏற்பட்டு இருக்கும். தமிழக அரசின் மெத்தனபோக்கு இதற்கு காரணம்.

உலகப் புகழ் பெற்ற ஶ்ரீ ரங்கம் திருக்கோவிலில் நடந்துள்ள இந்த அசம்பாவிதத்தை உடனே சீர் செய்து தக்க பரிகாரம் செய்ய தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க இந்து முன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

Entertainment News

Popular Categories