December 5, 2025, 6:18 PM
26.7 C
Chennai

மாணவர்களுடன் கலந்துரையாடிய ஆளுநர்

IMG 20231004 WA0069 - 2025
#image_title

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி சிறப்பாக பயின்று பதக்கங்கள் பெற்ற மாணவ, மாணவியர்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்றார்.

நிகழ்ச்சிக்கு துணைவேந்தர் ராம.கதிரேசன் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் பதக்கங்கள் வென்ற பல்கலைக்கழக மாணவ, மாணவியர்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்துரையாடல் நடத்தினார்.

அப்போது மாணவர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தார். சுமார் 1 மணி நேரம் நடைபெற்ற நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு ஆளுநர் காட்டுமன்னார்கோயில் அருகே உள்ள நந்தனார் பிறந்த ஊரான ம.ஆதனூர் கிராமத்தில் புதன்கிழமை காலை நடைபெற்ற நந்தனார் குருபூஜை விழாவில் பங்கேற்றார். பின்னர் பல்கலைக்கழக சாஸ்திரி அரங்கில் புதன்கிழமை மாலை நடைபெறும் அண்ணாமலைப் பல்கலைக்கழக 85வது பட்டமளிப்பு விழாவில் ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்று மாணவ, மாணவியர்களுக்கு பட்டங்களை வழங்குகிறார்.

IMG 20231004 WA0075 - 2025
#image_title

ஆளுநருக்கு வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்பு கொடி ஆர்ப்பாட்டம் செய்த மார்க்சிஸ்ட் கம்யு கட்சியினர் 23 பேர் கைது செய்யப்பட்டனர்.

நந்தனார் குருபூஜை விழாவில் பங்கேற்க காட்டுமன்னார்கோயிலுக்கு ஆளுநர் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்பு கொடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 23 பேரை போலீஸார் கைது செய்தனர்.

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே மா.ஆதனூர் என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் நந்தனார் என்ற திருநாளை போவார் நாயனார் பிறந்து வசித்து வந்தார். ம.ஆதனூர் கிராமத்தில் புதன்கிழமை காலை நந்தனார் குருபூஜை விழாவிற்கு தமிழ் சேவா சங்கம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டு அதில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்றார்.மேலும் ஆயிரம் நபர்களுக்கு பூனூல் அணிவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிலையில் ஆளுநர் ஆர். என், ரவி வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து, ஆளுநர் வருகைக்கு முன்பே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் காட்டுமன்னார்கோவில் பெரிய குளம் அருகில் பிரகாஷ் தலைமையில் கருப்புக்கொடி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 23 பேரை போலீஸார் கைது செய்தனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories