விசுவ ஹிந்து பரிஷத் யாத்திரை, கூட்டத்திற்கு ‘தமிழகத்தில் மட்டும் தடை’! ஏன்?

vishwa hindu parishad vhp - 2026
#image_title

“நாடு முழுவதும் அமைதியாகவும் சிறப்பாகவும் நடைபெற்று வரும் விசுவ இந்து பரிசத் அமைப்பின் 60ஆவது ஆண்டு தொடக்க விழா நிகழ்ச்சிகளின் யாத்திரை மற்றும் பொதுக்கூட்டத்துக்கு தமிழகத்தில் மட்டும் தடை ஏன்?” என்ற கேள்வியை அந்த அமைப்பினர் எழுப்பியுள்ளனர். அதன் மூலம் இது தமிழ்நாடா அல்லது தாலிபான் நாடா என்ற கேள்வியையும் முன்வைத்துள்ளனர்.

இதுகுறித்து அந்த அமைப்பினர் தெரிவித்த போது…

VHP யாத்திரை மற்றும் பொதுக்கூட்டத்திற்கு தமிழகத்தில் தடை ஏன்? பாரதம் முழுவதும் விஷ்வ ஹிந்து பரிஷத்தின் 60 வது ஆண்டு துவக்க விழா மற்றும் தேசம் காப்போம் தெய்வீகம் காப்போம் என்று ஹிந்து இளைஞர்களின் பஜ்ரங்தள் யாத்திரை செப்டம்பர் 29ஆம் தேதி முதல் அக்டோபர் 15 வரை பாரத முழுவதும் நடத்த திட்டமிடப்பட்டது. பிற மாநிலங்களில் மிகச் சிறப்பாக எந்தவித பிரச்சனைகளும் இல்லாமல் விமர்சியாக நடந்து வருகிறது ஹிந்துக்களின் ஆதரவுடன்.

தமிழகத்தில் இந்து விரோத திராவிட அரசு
வேண்டுமென்றே VHP யின் 60 வது ஆண்டு துவக்க விழா பொதுக்கூட்டங்கள் மற்றும் இளைஞர்கள் பஜ்ரங்தள் யாத்திரையையும் நடத்த தடை விதித்துள்ளது.

கடந்த செப். 30 ம் தேதி கன்னியாகுமரியில் பாரத மாதா பூஜை உடன் விஎச்பி., பஜ்ரங்தள் இளைஞர்கள் தேசபக்த சுதந்திர போராட்ட வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வாக செல்ல இருந்தனர். அவர்களை பாரதமாதா பூஜை செய்ய விடாமல் தடுத்தும் கைதும் செய்தனர். மீண்டும் அதே இடத்தில் பாரத மாதா பூஜை செய்ய வேண்டும் என்று உணவு உண்ணாமல் தர்ணா செய்தனர். இரவு விடுவிக்கப்பட்டு அதே இடத்தில் பாரதமா பூஜை நடைபெற்றது.

ALSO READ:  ஆண்டாள் சூடிய மாலை கள்ளழகருக்குச் சாற்ற, புறப்பாடு!

அதே நாளில் விஎச்பி.,யின் 60வது ஆண்டு தொடக்க நிகழ்ச்சி பொதுக்கூட்டம் நாகர்கோவிலில் சிறப்பாக நடைபெற்றது. அகில பாரத இணைச் செயலாளர் ஸ்தானுமாலயன் அவர்கள் கலந்துகொண்டு சிறப்புரை நிகழ்த்தினார்கள். காவல் துறை அனுமதி உடன்.

அக்.1 -தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் விஎச்பி., யின் 60 வது ஆண்டு துவக்க நிகழ்ச்சி பொதுக்கூட்டம் நடைபெற்றது, காவல் துறையின் அனுமதி உடன்.

அக். 3 தேதி விஎச்பி., பஜ்ரங்தள் இளைஞர்கள் சுதந்திரப் போராட்ட வீரர்களை நினைவு செலுத்தும் விதமாக சிவகாசி சென்றபோது அங்கே காவல் துறை நோட்டீஸ் கூட விநியோகம் செய்ய அனுமதிக்க வில்லை. கடுமையான நெருக்கடியை கொடுத்து வந்தனர்.

அக். 4 ம் தேதி மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் மாலை நடைபெற இருந்த விஎச்பி 60ம் ஆண்டு துவக்க நிகழ்ச்சி பொதுக்கூட்டம் அனுமதி இல்லை என்று அன்று காலை நோட்டீஸ் கொடுக்கின்றனர் காவல்துறையினர்.

மாநில மாவட்ட நிர்வாகிகள் அன்று மாலை உசிலம்பட்டியில் உள்ள பசும்பொன் முத்துராமலிங்க தேவர் ஐயா சிலை முன்பு இந்து விரோத அரசின் இந்த செயலை கண்டித்து மனம்முருகி வேண்டி முறையிட்டனர், அனைவரும் கைது செய்யப்பட்டனர்.

ALSO READ:  அண்ணாமலை இளந்தலைமுறையால் ஈர்க்கப்பட்டவர்; பாஜக.,வோ தலைமுறைகளாக பெருவளர்ச்சி கண்டது!

அக். 6ம் தேதி சிவகங்கை மாவட்டம் சிங்கப்பூனேரி பகுதியில் நடைபெற இருந்த விஎச்பி 60ம் ஆண்டு துவக்க நிகழ்ச்சி பொதுக்கூட்டம் அனுமதி மறுப்பு என்கிற உத்தரவை பிறப்பிக்கின்றனர் காவல்துறையினர்.

அக்.8ம் தேதி நாளை திருச்சியில் நடைபெற இருக்கிற விஎச்பி 60ம் ஆண்டு துவக்கநிகழ்ச்சி பொதுக்கூட்டம் அனுமதி மறுத்து இருக்கிறது காவல்துறை.

ஆக, இது தமிழ்நாடா அல்லது தாலிபான்நாடா? ஹிந்துக்களின் ஒற்றுமைக்காக உலகம் முழுவதும் ஆன்மீக தொண்டாற்றி வரும் விஷ்வ ஹிந்து பரிஷத்தின் நிகழ்ச்சிகளுக்கு தமிழகத்தில் மட்டுமே தடை! தமிழகத்தின் இந்து விரோத போக்கை மக்கள் மத்தியில் தொடர்ந்து சொல்லுவோம். ஆட்சிகள் மாறும் காட்சிகளும் மாறும் – என்று தெரிவித்தனர் விஎச்பி நிர்வாகிகள்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 23 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

‘தவெக., இன்னுமொரு திமுக., தானா?’ திருப்பரங்குன்ற தீப நிலைப்பாட்டுக்கு இந்து முன்னணி கண்டனம்!

உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை திருப்பரங்குன்றம் மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பாக வழங்கிய உத்தரவை அமல்படுத்துவதில், புதிதாக பதவி ஏற்றுள்ள தவெகவின் நிலைப்பாட்டை கேட்டிருந்தது. அது குறித்து இன்று தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் குழப்பமான கருத்துக்களை தெரிவித்துள்ளது.

ஆர்.எஸ்.எஸ்., பதிவு செய்யப்பட்ட அமைப்பா?

ஆர் எஸ் எஸ் தனது பதிவு சான்றிதழைக் காட்ட வேண்டுமென கார்கே கேட்பது பொருள் அற்றது. ஆர் எஸ் எஸ் 100 ஆண்டுகளுக்கு மேலாக இந்த நாட்டில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அதில் 75 ஆண்டுகள் இந்திய அரசமைப்பு சட்டத்திற்கு உட்பட்டது.

பஞ்சாங்கம் ஜூன் 22 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் ஜூன் 23 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

‘தவெக., இன்னுமொரு திமுக., தானா?’ திருப்பரங்குன்ற தீப நிலைப்பாட்டுக்கு இந்து முன்னணி கண்டனம்!

உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை திருப்பரங்குன்றம் மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பாக வழங்கிய உத்தரவை அமல்படுத்துவதில், புதிதாக பதவி ஏற்றுள்ள தவெகவின் நிலைப்பாட்டை கேட்டிருந்தது. அது குறித்து இன்று தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் குழப்பமான கருத்துக்களை தெரிவித்துள்ளது.

ஆர்.எஸ்.எஸ்., பதிவு செய்யப்பட்ட அமைப்பா?

ஆர் எஸ் எஸ் தனது பதிவு சான்றிதழைக் காட்ட வேண்டுமென கார்கே கேட்பது பொருள் அற்றது. ஆர் எஸ் எஸ் 100 ஆண்டுகளுக்கு மேலாக இந்த நாட்டில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அதில் 75 ஆண்டுகள் இந்திய அரசமைப்பு சட்டத்திற்கு உட்பட்டது.

பஞ்சாங்கம் ஜூன் 22 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூன் 21 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

பஞ்சாங்கம் ஜூன் 20 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஜூன் 19 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Entertainment News

Popular Categories