விசுவ ஹிந்து பரிஷத் யாத்திரை, கூட்டத்திற்கு ‘தமிழகத்தில் மட்டும் தடை’! ஏன்?

vishwa hindu parishad vhp - 2026
#image_title

“நாடு முழுவதும் அமைதியாகவும் சிறப்பாகவும் நடைபெற்று வரும் விசுவ இந்து பரிசத் அமைப்பின் 60ஆவது ஆண்டு தொடக்க விழா நிகழ்ச்சிகளின் யாத்திரை மற்றும் பொதுக்கூட்டத்துக்கு தமிழகத்தில் மட்டும் தடை ஏன்?” என்ற கேள்வியை அந்த அமைப்பினர் எழுப்பியுள்ளனர். அதன் மூலம் இது தமிழ்நாடா அல்லது தாலிபான் நாடா என்ற கேள்வியையும் முன்வைத்துள்ளனர்.

இதுகுறித்து அந்த அமைப்பினர் தெரிவித்த போது…

VHP யாத்திரை மற்றும் பொதுக்கூட்டத்திற்கு தமிழகத்தில் தடை ஏன்? பாரதம் முழுவதும் விஷ்வ ஹிந்து பரிஷத்தின் 60 வது ஆண்டு துவக்க விழா மற்றும் தேசம் காப்போம் தெய்வீகம் காப்போம் என்று ஹிந்து இளைஞர்களின் பஜ்ரங்தள் யாத்திரை செப்டம்பர் 29ஆம் தேதி முதல் அக்டோபர் 15 வரை பாரத முழுவதும் நடத்த திட்டமிடப்பட்டது. பிற மாநிலங்களில் மிகச் சிறப்பாக எந்தவித பிரச்சனைகளும் இல்லாமல் விமர்சியாக நடந்து வருகிறது ஹிந்துக்களின் ஆதரவுடன்.

தமிழகத்தில் இந்து விரோத திராவிட அரசு
வேண்டுமென்றே VHP யின் 60 வது ஆண்டு துவக்க விழா பொதுக்கூட்டங்கள் மற்றும் இளைஞர்கள் பஜ்ரங்தள் யாத்திரையையும் நடத்த தடை விதித்துள்ளது.

கடந்த செப். 30 ம் தேதி கன்னியாகுமரியில் பாரத மாதா பூஜை உடன் விஎச்பி., பஜ்ரங்தள் இளைஞர்கள் தேசபக்த சுதந்திர போராட்ட வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வாக செல்ல இருந்தனர். அவர்களை பாரதமாதா பூஜை செய்ய விடாமல் தடுத்தும் கைதும் செய்தனர். மீண்டும் அதே இடத்தில் பாரத மாதா பூஜை செய்ய வேண்டும் என்று உணவு உண்ணாமல் தர்ணா செய்தனர். இரவு விடுவிக்கப்பட்டு அதே இடத்தில் பாரதமா பூஜை நடைபெற்றது.

அதே நாளில் விஎச்பி.,யின் 60வது ஆண்டு தொடக்க நிகழ்ச்சி பொதுக்கூட்டம் நாகர்கோவிலில் சிறப்பாக நடைபெற்றது. அகில பாரத இணைச் செயலாளர் ஸ்தானுமாலயன் அவர்கள் கலந்துகொண்டு சிறப்புரை நிகழ்த்தினார்கள். காவல் துறை அனுமதி உடன்.

அக்.1 -தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் விஎச்பி., யின் 60 வது ஆண்டு துவக்க நிகழ்ச்சி பொதுக்கூட்டம் நடைபெற்றது, காவல் துறையின் அனுமதி உடன்.

அக். 3 தேதி விஎச்பி., பஜ்ரங்தள் இளைஞர்கள் சுதந்திரப் போராட்ட வீரர்களை நினைவு செலுத்தும் விதமாக சிவகாசி சென்றபோது அங்கே காவல் துறை நோட்டீஸ் கூட விநியோகம் செய்ய அனுமதிக்க வில்லை. கடுமையான நெருக்கடியை கொடுத்து வந்தனர்.

அக். 4 ம் தேதி மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் மாலை நடைபெற இருந்த விஎச்பி 60ம் ஆண்டு துவக்க நிகழ்ச்சி பொதுக்கூட்டம் அனுமதி இல்லை என்று அன்று காலை நோட்டீஸ் கொடுக்கின்றனர் காவல்துறையினர்.

மாநில மாவட்ட நிர்வாகிகள் அன்று மாலை உசிலம்பட்டியில் உள்ள பசும்பொன் முத்துராமலிங்க தேவர் ஐயா சிலை முன்பு இந்து விரோத அரசின் இந்த செயலை கண்டித்து மனம்முருகி வேண்டி முறையிட்டனர், அனைவரும் கைது செய்யப்பட்டனர்.

அக். 6ம் தேதி சிவகங்கை மாவட்டம் சிங்கப்பூனேரி பகுதியில் நடைபெற இருந்த விஎச்பி 60ம் ஆண்டு துவக்க நிகழ்ச்சி பொதுக்கூட்டம் அனுமதி மறுப்பு என்கிற உத்தரவை பிறப்பிக்கின்றனர் காவல்துறையினர்.

அக்.8ம் தேதி நாளை திருச்சியில் நடைபெற இருக்கிற விஎச்பி 60ம் ஆண்டு துவக்கநிகழ்ச்சி பொதுக்கூட்டம் அனுமதி மறுத்து இருக்கிறது காவல்துறை.

ஆக, இது தமிழ்நாடா அல்லது தாலிபான்நாடா? ஹிந்துக்களின் ஒற்றுமைக்காக உலகம் முழுவதும் ஆன்மீக தொண்டாற்றி வரும் விஷ்வ ஹிந்து பரிஷத்தின் நிகழ்ச்சிகளுக்கு தமிழகத்தில் மட்டுமே தடை! தமிழகத்தின் இந்து விரோத போக்கை மக்கள் மத்தியில் தொடர்ந்து சொல்லுவோம். ஆட்சிகள் மாறும் காட்சிகளும் மாறும் – என்று தெரிவித்தனர் விஎச்பி நிர்வாகிகள்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தகுந்த வைத்தியம் தேவை!

ஒரு பெண்மணி கால்நடை மருத்துவரிடம் வந்தார், அவருடன் ஒரு உயர் இன...

திருப்பரங்குன்றம் மலை மீது தொழுகைக்குச் சென்றவர்கள் போலீஸாருடன் வாக்குவாதம்!

திருப்பரங்குன்றம் மலைப்பாதையில் பரபரப்பு; மலைமேல் நெல்லி தோப்பில் ரம்ஜான் தொழுகைக்குச் சென்ற இஸ்லாமியர்கள்பெயர் முகவரி பதிவு செய்ய எதிர்ப்பு போலீசாருடன் வாக்குவாதம்!

பஞ்சாங்கம் மார்ச் 21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

துரந்தர் 3.0 படம் எடுக்கலாம்! அவ்வளவு விஷயங்கள் கொட்டிக் கிடக்கிறது இதில்!

துல்லிய தகவல்களும் மிக ஆழமான வலைப் பின்னல்களும் கச்சிதமாக செயல்பட்டதால் இவர்களை இந்திய உளவுத்துறையால் கைது செய்ய முடிந்தது.  அவர்களுக்கு பாராட்டுகள். 

Topics

பஞ்சாங்கம் மார்ச் 22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தகுந்த வைத்தியம் தேவை!

ஒரு பெண்மணி கால்நடை மருத்துவரிடம் வந்தார், அவருடன் ஒரு உயர் இன...

திருப்பரங்குன்றம் மலை மீது தொழுகைக்குச் சென்றவர்கள் போலீஸாருடன் வாக்குவாதம்!

திருப்பரங்குன்றம் மலைப்பாதையில் பரபரப்பு; மலைமேல் நெல்லி தோப்பில் ரம்ஜான் தொழுகைக்குச் சென்ற இஸ்லாமியர்கள்பெயர் முகவரி பதிவு செய்ய எதிர்ப்பு போலீசாருடன் வாக்குவாதம்!

பஞ்சாங்கம் மார்ச் 21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

துரந்தர் 3.0 படம் எடுக்கலாம்! அவ்வளவு விஷயங்கள் கொட்டிக் கிடக்கிறது இதில்!

துல்லிய தகவல்களும் மிக ஆழமான வலைப் பின்னல்களும் கச்சிதமாக செயல்பட்டதால் இவர்களை இந்திய உளவுத்துறையால் கைது செய்ய முடிந்தது.  அவர்களுக்கு பாராட்டுகள். 

1 முதல் 9ம் வகுப்பு வரை… முழு ஆண்டுத் தேர்வு தேதிகள் விவரம்!

சட்டமன்றத் தேர்தல் நடக்க இருப்பதன் காரணமாக பள்ளி மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வுகள் இந்த ஆண்டு முன்கூட்டியே நடத்தப்படுகின்றன.

சரணாகதி அரசல்ல, சாதுர்யமான அரசு!

இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Entertainment News

Popular Categories