விசுவ ஹிந்து பரிஷத் யாத்திரை, கூட்டத்திற்கு ‘தமிழகத்தில் மட்டும் தடை’! ஏன்?

vishwa hindu parishad vhp - 2026
#image_title

“நாடு முழுவதும் அமைதியாகவும் சிறப்பாகவும் நடைபெற்று வரும் விசுவ இந்து பரிசத் அமைப்பின் 60ஆவது ஆண்டு தொடக்க விழா நிகழ்ச்சிகளின் யாத்திரை மற்றும் பொதுக்கூட்டத்துக்கு தமிழகத்தில் மட்டும் தடை ஏன்?” என்ற கேள்வியை அந்த அமைப்பினர் எழுப்பியுள்ளனர். அதன் மூலம் இது தமிழ்நாடா அல்லது தாலிபான் நாடா என்ற கேள்வியையும் முன்வைத்துள்ளனர்.

இதுகுறித்து அந்த அமைப்பினர் தெரிவித்த போது…

VHP யாத்திரை மற்றும் பொதுக்கூட்டத்திற்கு தமிழகத்தில் தடை ஏன்? பாரதம் முழுவதும் விஷ்வ ஹிந்து பரிஷத்தின் 60 வது ஆண்டு துவக்க விழா மற்றும் தேசம் காப்போம் தெய்வீகம் காப்போம் என்று ஹிந்து இளைஞர்களின் பஜ்ரங்தள் யாத்திரை செப்டம்பர் 29ஆம் தேதி முதல் அக்டோபர் 15 வரை பாரத முழுவதும் நடத்த திட்டமிடப்பட்டது. பிற மாநிலங்களில் மிகச் சிறப்பாக எந்தவித பிரச்சனைகளும் இல்லாமல் விமர்சியாக நடந்து வருகிறது ஹிந்துக்களின் ஆதரவுடன்.

தமிழகத்தில் இந்து விரோத திராவிட அரசு
வேண்டுமென்றே VHP யின் 60 வது ஆண்டு துவக்க விழா பொதுக்கூட்டங்கள் மற்றும் இளைஞர்கள் பஜ்ரங்தள் யாத்திரையையும் நடத்த தடை விதித்துள்ளது.

கடந்த செப். 30 ம் தேதி கன்னியாகுமரியில் பாரத மாதா பூஜை உடன் விஎச்பி., பஜ்ரங்தள் இளைஞர்கள் தேசபக்த சுதந்திர போராட்ட வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வாக செல்ல இருந்தனர். அவர்களை பாரதமாதா பூஜை செய்ய விடாமல் தடுத்தும் கைதும் செய்தனர். மீண்டும் அதே இடத்தில் பாரத மாதா பூஜை செய்ய வேண்டும் என்று உணவு உண்ணாமல் தர்ணா செய்தனர். இரவு விடுவிக்கப்பட்டு அதே இடத்தில் பாரதமா பூஜை நடைபெற்றது.

அதே நாளில் விஎச்பி.,யின் 60வது ஆண்டு தொடக்க நிகழ்ச்சி பொதுக்கூட்டம் நாகர்கோவிலில் சிறப்பாக நடைபெற்றது. அகில பாரத இணைச் செயலாளர் ஸ்தானுமாலயன் அவர்கள் கலந்துகொண்டு சிறப்புரை நிகழ்த்தினார்கள். காவல் துறை அனுமதி உடன்.

அக்.1 -தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் விஎச்பி., யின் 60 வது ஆண்டு துவக்க நிகழ்ச்சி பொதுக்கூட்டம் நடைபெற்றது, காவல் துறையின் அனுமதி உடன்.

அக். 3 தேதி விஎச்பி., பஜ்ரங்தள் இளைஞர்கள் சுதந்திரப் போராட்ட வீரர்களை நினைவு செலுத்தும் விதமாக சிவகாசி சென்றபோது அங்கே காவல் துறை நோட்டீஸ் கூட விநியோகம் செய்ய அனுமதிக்க வில்லை. கடுமையான நெருக்கடியை கொடுத்து வந்தனர்.

அக். 4 ம் தேதி மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் மாலை நடைபெற இருந்த விஎச்பி 60ம் ஆண்டு துவக்க நிகழ்ச்சி பொதுக்கூட்டம் அனுமதி இல்லை என்று அன்று காலை நோட்டீஸ் கொடுக்கின்றனர் காவல்துறையினர்.

மாநில மாவட்ட நிர்வாகிகள் அன்று மாலை உசிலம்பட்டியில் உள்ள பசும்பொன் முத்துராமலிங்க தேவர் ஐயா சிலை முன்பு இந்து விரோத அரசின் இந்த செயலை கண்டித்து மனம்முருகி வேண்டி முறையிட்டனர், அனைவரும் கைது செய்யப்பட்டனர்.

அக். 6ம் தேதி சிவகங்கை மாவட்டம் சிங்கப்பூனேரி பகுதியில் நடைபெற இருந்த விஎச்பி 60ம் ஆண்டு துவக்க நிகழ்ச்சி பொதுக்கூட்டம் அனுமதி மறுப்பு என்கிற உத்தரவை பிறப்பிக்கின்றனர் காவல்துறையினர்.

அக்.8ம் தேதி நாளை திருச்சியில் நடைபெற இருக்கிற விஎச்பி 60ம் ஆண்டு துவக்கநிகழ்ச்சி பொதுக்கூட்டம் அனுமதி மறுத்து இருக்கிறது காவல்துறை.

ஆக, இது தமிழ்நாடா அல்லது தாலிபான்நாடா? ஹிந்துக்களின் ஒற்றுமைக்காக உலகம் முழுவதும் ஆன்மீக தொண்டாற்றி வரும் விஷ்வ ஹிந்து பரிஷத்தின் நிகழ்ச்சிகளுக்கு தமிழகத்தில் மட்டுமே தடை! தமிழகத்தின் இந்து விரோத போக்கை மக்கள் மத்தியில் தொடர்ந்து சொல்லுவோம். ஆட்சிகள் மாறும் காட்சிகளும் மாறும் – என்று தெரிவித்தனர் விஎச்பி நிர்வாகிகள்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories