ஐப்பசி மாத பூஜைகளுக்கு இன்று சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு..

FB IMG 1697547306707 - 2026
#image_title

ஐப்பசி மாத பூஜைகளுக்கு இன்று உலக பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறக்கப்பட்டது.நாளை புதன் கிழமை ஐப்பசி மாத பூஜைகள் துவங்கி அக்22 வரை ஐந்து நாட்கள் கோயில் நடை திறக்கப்பட்டு பூஜை வழிபாடு நடைபெறுகிறது . ஆன்லைன் மூலம் முன் பதிவு செய்து பக்தர்கள் தரிசனம் செய்யலாம்.நாளை சபரிமலை ஐயப்பன் கோவில் வளாகத்தில் ஐயப்பன் கோயில் மளிகை புறம் கோயில் புதிய மேல் சாந்தி தேர்வு நடைபெறும்.

FB IMG 1697547145170 - 2026
#image_title

ஐப்பசி மாத பூஜைக்காகச் சபரிமலை ஐயப்பன் கோயில் இன்று மாலை நடை திறக்கப்பட்டது. வரும் அக். 22ஆம் தேதி வரை பக்தர்கள் தரிசனத்திற்காக அனுமதிக்கப்படுகிறார்கள்.

உலகப் புகழ் பெற்ற ஐயப்பன் கோவிலாக உள்ளது சபரிமலை ஐயப்பன் கோயில். கேரளாவில் அமைந்துள்ள இந்த கோயிலுக்குத் தமிழகம், ஆந்திரா, கர்நாடகா மட்டுமின்றி நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஒவ்வொரு ஆண்டும் பல லட்சம் பக்தர்கள் தரிசனத்திற்கு வருகிறார்கள்.

சபரி மலையில் கார்த்திகை, மார்கழி மாதங்களில் மண்டல பூஜை நடைபெறும் அதைத்தொடர்ந்து தை மாதம் அங்கே மகரவிளக்கு பூஜை நடைபெறும். மேலும், ஒவ்வொரு மாதமும் தமிழ், மலையாள மாதப் பிறப்பை ஒட்டி ஐயப்பன் கோவில் நடை திறக்கப்பட்டு 5 நாட்கள் சிறப்புப் பூஜைகளும் நடைபெறும்.

அதன்படி ஐப்பசி மாத பூஜைக்காக இன்று மாலை தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு முன்னிலையில் மேல்சாந்தி ஜெயராமன் நம்பூதிரி நடையைத் திறந்து வைத்து குத்துவிளக்கு ஏற்றி தீபாராதனை நடத்துகிறார். தொடர்ந்து நாளை அக். 18 முதல் 22ஆம் தேதி வரை 5 நாள்கள் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதி அளிக்கப்படும்.

முதல் நாளான இன்று எந்தவொரு சிறப்புப் பூஜைகளும் நடக்காது. நாளை முதல் வழக்கான பூஜைகளுடன், நிர்மால்ய தரிசனம், கணபதி ஹோமம், நெய் அபிஷேகம், உஷ பூஜை, உச்ச பூஜை, தீபாராதனை, புஷ்பாபிஷேகம், களசாபிஷேகம், சகஸ்ர காசாபிஷேகம், படி பூஜை, உதயாஸ்தமன பூஜை நடைபெறும்.

ஐப்பசி மாத பூஜையின் போது வரும் ஆண்டிற்கான மண்டல, மகர விளக்குப் பூஜைக்காக ஐயப்பன் கோவில், மாளிகைப்புறத்து அம்மன் கோவிலில் பணியாற்றும் மேல் சாந்தி தேர்வு நடைபெற உள்ளது. தொடர்ந்து அவர் 22ஆம் தேதி இரவு 10 மணியளவில் ஐயப்பன் கோவிலின் நடை அடைக்கப்படும்.

தரிசனத்திற்கான முன்பதிவு இணையதளம் மூலம் நடைபெற்று வருகிறது. மேலும், பக்தர்களின் வசதிக்காக நிலக்கல் பகுதியில் தற்காலிக முன்பதிவு மையமும் அமைக்கப்பட்டுள்ளது.

இந்தாண்டு ஐப்பசி மாதத்தில் ஸ்ரீ சித்ர ஆட்ட திருநாள் பூஜைக்காக நவம்பர் 10, மாலை நடை திறந்து வரும் 11 ஆம் தேதி பூஜைகள் நடைபெறும். அதேபோல மண்டல பூஜைக்காக வரும் நவ. 16 முதல் டிசம்பர் 27 வரை நடைதிறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


சபரிமலை மற்றும் மாளிகப்புரம் புதிய மேல்சாந்தி தேர்வு நாளை சன்னிதானத்தில் நடக்கிறது.சீட்டு மூலம் மேல்சாந்தி தேர்வு செய்ய பந்தளம் அரண்மனையை சேர்ந்த வைதே மற்றும் நிருபமா ஜி. வர்மாவும் பந்தளம் கைப்புழா ஸ்ரீகிருஷ்ண சுவாமி கோயிலில் இருந்து புறப்பட்டு இன்று சபரிமலை வந்தடைந்தனர் .

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

Entertainment News

Popular Categories