மதுரையில் இருந்து பாதுகாப்பாக பசும்பொன் சென்ற தங்க கவசம்!

pasumpon thangakavasam - 2026
#image_title

மதுரையிலிருந்து பாதுகாப்பாக தங்க கவசம் பசும்பொன் சென்றது!

மதுரை அண்ணாநகரில், அரசு வங்கியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த தேவரின் முழு உருவ தங்கக் கவசம் பசும்பொன் கிராமத்திற்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சென்றது.

ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்கத் தேவர் சமாதியில் உள்ள அவருடைய முழு உருவச் சிலைக்கு, ஆண்டுதோறும் அவருடைய ஜெயந்தி அன்று தங்க முழு உருவக் கவசம் அணிவிக்கப்படும். தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவால், இந்த தங்கக் கவசம் வழங்கப்பட்டது.
இது கடந்த சில வருடங்களாக தேவரின் சிலைக்கு அணிவிக்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு பாதுகாப்பாக வைக்கப்படும் தேவருடைய தங்க முழு உருவ கவசம், மதுரை அண்ணா நகரில் உள்ள அரசு வணிக வங்கியில் பாதுகாப்பு பெட்டகத்தில் வைக்கப் படுகிறது. இதை, அதிமுக கட்சி பொருளாளர், ஆண்டுதோறும் பெற்று, அதை முத்துராமலிங்க தேவர் வாரிதாரர்களிடம் ஒப்படைப்பார்.

அவ்வாறு ஒப்படைக்கப்படும் தங்க முழு தங்க கவசம் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் மதுரையிலிருந்து பசும்பொன் கிராமத்தில் கொண்டு செல்லப்பட்டு, அங்கு பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் உருவ சிலைக்கு அணிவிக்கப் படுவது வழக்கமாக உள்ளது.

தேவர் ஜெயந்தி முன்னிட்டு, இம்மாதம் 30 -ஆம் தேதி, தமிழக முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள், முன்னாள் அமைச்சர்கள், அரசியல் கட்சி பிரமுகர்கள் மற்றும் தொழில் அதிபர்கள் ஆகியோர்கள் தேவர் உருவச் சிலைக்கு மாலை அணிவித்து வழி படுவர். அன்றைய தினம் பசும்பொன்னில் விழாக்கோலம் காணும்.

மேலும், தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து கார்கள், மற்றும் பஸ்கள் வேண்களில் பலர் தேவர் சமாதிக்கு சென்று மலர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்துவர். அன்றைய தினம் அன்னதானம் நடைபெறும்.

இதற்காக, மதுரையிலிருந்து ராமநாதபுரம் மாவட்டம் வரை பலத்த போலீஸ் பாதுகாப்பும், போலீசார் ரோந்து பணியும் ஈடுபடுவர். மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள தேவர் சிலைக்கு, தமிழக முதல்வர், எதிர்கட்சித் தலைவர், பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் மாலை அணிவித்தும், பலர் முளைப்பாரி ஊர்வலம், பாலாபிஷேகம் செய்து வழிபடுவர். இது ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – ஏப்ரல் 29 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தென்காசி மாவட்ட U-16 கூடைபந்தாட்ட வீரர்கள் மற்றும் வீராங்கணைகள் தேர்வு!

தென்காசி மாவட்ட U-16 கூடைபந்தாட்ட வீரர்கள் மற்றும் வீராங்கணைகள் தேர்வு!

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் கோலாகலம்..

உலகப் பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் சித்திரை திருவிழா...

திமுக வேட்பாளர் வீட்டில் நகை கொள்ளை – வேட்பாளரின் மருமகள் உள்ளிட்ட 3 பேர் கைது…

விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் திமுக வேட்பாளர் வீட்டில் 122 சவரன் கொள்ளையடிக்கப்பட்ட...

பஞ்சாங்கம் ஏப்ரல் 28 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் – ஏப்ரல் 29 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தென்காசி மாவட்ட U-16 கூடைபந்தாட்ட வீரர்கள் மற்றும் வீராங்கணைகள் தேர்வு!

தென்காசி மாவட்ட U-16 கூடைபந்தாட்ட வீரர்கள் மற்றும் வீராங்கணைகள் தேர்வு!

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் கோலாகலம்..

உலகப் பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் சித்திரை திருவிழா...

திமுக வேட்பாளர் வீட்டில் நகை கொள்ளை – வேட்பாளரின் மருமகள் உள்ளிட்ட 3 பேர் கைது…

விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் திமுக வேட்பாளர் வீட்டில் 122 சவரன் கொள்ளையடிக்கப்பட்ட...

பஞ்சாங்கம் ஏப்ரல் 28 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

யானைகள் அணிவகுப்புடன், திருச்சூர் பூரம் விழா கொண்டாட்டம்!

யானைகளின் அணிவகுப்பு.. இலஞ்சித்தார மேளம்.. திருச்சூர் பூரம் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

நாடு திரும்புங்க; அமெரிக்க வாழ் இந்தியர்களுக்கு ஸோஹோ ஸ்ரீதர் வேம்புவின் மடல்!

37 ஆண்டுகளுக்கு முன்பு நான் வந்தது போலவே, நீங்களும் பணமின்றி, ஆனால் பாரதத்தின் நல்ல கல்வி மற்றும் கலாச்சாரப் பாரம்பரியத்துடன் அமெரிக்காவிற்கு வந்தீர்கள்.

ஆண் நாடாளுமன்ற உறுப்பினர்களின் கோர முகம்!

பெண்கள் தங்களுக்காக போராட முடியாதவர்கள் என்றல்ல. அவர்கள் கடந்த மூன்று தசாப்தங்களாக போராடிக் கொண்டுதான் இருக்கிறார்கள். ஆனால் அவையில் 85 சதவீதத்தினர் ஆண்களாக இருப்பதால் அவர்களின் யாராவது கதவைத் திறந்து வழிவிட வேண்டும்.

Entertainment News

Popular Categories