தஞ்சை பெருவுடையாருக்கு 1,000 கிலோ அரிசியில் அன்னாபிஷேகம்!

Published:

tanjore big temple annabhishekam - 2026
#image_title

தஞ்சாவூர் பெரிய கோவிலில் பெருவுடையாருக்கு 1000கிலோ அரிசியில் அன்னாபிஷேகம்; 900 கிலோ காய், கனியில் அலங்காரம் செய்விக்கப்பட்டது.

உலக பிரசித்தி பெற்ற தஞ்சாவூர் பெரியகோவிலில், லிங்கம் 12 அடி உயரமும், ஆவுடையார் 54 அடி சுற்றளவும் கொண்ட ஒரே கல்லால் உருவாக்கப்பட்ட பிரமாண்டத் திருமேனியாகத் மூலவரான பெருவுடையார் திகழ்கிறார்.

பெருவுடையாருக்கு ஐப்பசி பெளர்ணமி தினத்தில் அன்னாபிஷேகம் நடைபெறும். இந்தாண்டு பக்தர்களால், 1,000 கிலோ பச்சரிசி, 900 கிலோ காய்,கனி வழங்கப்பட்டன. பக்தர்கள் வழங்கிய அரிசியை சாதமாக தயார் செய்து, பெருவுடையார் திருமேனி முழுவதும் சாத்தப்பட்டு, காய்கறிகள், பழங்கள், வகைகளால் அலங்காரம் செய்யப்பட்டு, அன்னாபிஷேகம் நடந்தது.

தொடர்ந்து, லிங்கத்திலிருந்து பிரித்தெடுக்கப்பட்ட அன்னம் பக்தர்களுக்கும், கால்நடைகளுக்கும் பிரசாதமாக வழங்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.

இதற்கான ஏற்பாடுகளை அரண்மனை தேவஸ்தானம், ஹிந்து சமய அறநிலையத்துறையினர் செய்து இருந்தனர். மேலும், இரவு சந்திரகிரஹனம் என்பதால், இரவு 7:00 மணி வரை பக்தர்களுக்கு தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டு, பின்னர் இரவு 8:00 மணிக்கு நடை சாத்தப்பட்டது.

ALSO READ:  100 கோடி மக்களுக்கு சமூகப் பாதுகாப்புக் கவசம்: பிரதமர் மோடி பெருமிதம்!

Related articles

Recent articles

spot_img