சிவகாசியில் மொய்க்கும் கூட்டம்; பட்டாசு வாங்க ஆர்வம்!

sivakasi crackers stall - 2026
#image_title

இந்துக்கள் கொண்டாடும் புனித பண்டிகை தீபாவளி க்கு இன்னும் சில தினங்களே உள்ள நிலையில் சிவகாசியில், தீபாவளி பட்டாசுகள் வாங்குவதற்காக பட்டாசு பிரியர்கள்‌ ஆயிரக்கணக்கில் கொளுத்தி எடுக்கும் வெயில் கொட்டும் மழையிலும் வந்து செல்கின்றனர்.

இந்தியா முழுவதும் தீபாவளி பண்டிகையை உற்சாகமாக கொண்டாடுவதற்கு தயாராகி வருகிறது. தீபாவளி கொண்டாட்டங்களில் பட்டாசு ரகங்கள் தான் முதன்மையாக இருந்து வருகிறது.

நாடு முழுவதும் பட்டாசுகள் விற்பனையும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் தீபாவளி பண்டிகைக்கான பட்டாசுகள் விற்பனை களைகட்டியுள்ளது. பட்டாசுகள் தயாரிப்பில் முதலிடத்தில் இருக்கும் சிவகாசி, பட்டாசு விற்பனையிலும் முதலிடத்தில் இருந்து வருகிறது. சிவகாசி – சாத்தூர் சாலை, சிவகாசி – விருதுநகர் சாலை, சிவகாசி – சங்கரன்கோவில் சாலைகளில் சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பட்டாசு விற்பனை கடைகள் உள்ளன.

சிவகாசி பகுதியில் உள்ள பட்டாசு கடைகளில் பட்டாசுகள் வாங்கினால் விலை குறைவாக கிடைக்கும் என்பதாலும், விதவிதமான பட்டாசு ரகங்கள் மற்றும் வாணவெடிகளை நேரில் பார்த்து வாங்கலாம் என்பதாலும், பட்டாசு பிரியர்கள் சிவகாசிக்கு வருவார்கள். தீபாவளி பண்டிகைக்கு இன்னும் சில நாட்கள் மட்டுமே இருப்பதால், தங்களது தேவைக்கான பட்டாசுகளை வாங்குவதற்காக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், பல்வேறு வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பட்டாசு பிரியர்கள் சிவகாசியில் குவிந்து வருகின்றனர்.

ALSO READ:  முதலமைச்சர் கனவில் முந்திய விஜய்; வெளியில் இருந்து ஆதரிக்கும் திமுக., கூட்டணிக் கட்சிகள்!

குறிப்பாக சென்னை, கடலூர், கோயம்புத்தூர், ஈரோடு, திருப்பூர், சேலம், நாமக்கல், கரூர், திண்டுக்கல், மதுரை, தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பட்டாசு பிரியர்கள் குவிந்துள்ளனர். இன்று வேலை நாளாக இருந்தாலும் பட்டாசுகள் வாங்குவதற்காக ஏராளமானோர் வந்தனர். இதனால் சிவகாசி பகுதியில் உள்ள அனைத்து பட்டாசு விற்பனை கடைகளிலும் கூட்டம் அலை மோதுகிறது.

தீபாவளி பண்டிகைக்கு ஒரு நாள் முன்பு வரை, சிவகாசி பகுதியில் உள்ள பட்டாசு விற்பனை கடைகளில் பட்டாசு விற்பனை விறுவிறுப்பாக நடைபெற்று வரும். பட்டாசுகள் விற்பனை களைகட்டியிருப்பதால் பட்டாசு விற்பனையாளர்களும், பட்டாசு உற்பத்தியாளர்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இந்த நிலையில் பட்டாசு கடைகளுக்கு தமிழகத்தில் அனுமதி இல்லை. கள்ள சாராயம் விற்பனை நடக்கிறது என முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியுள்ளார்.

எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் விருச்சிக மரம் போல வளர்ந்து உள்ளது.அம்மா மறைவுக்கு பின்னர் அதிமுக உறுப்பினர் எண்ணிக்கை 2 கோடி 1 லட்சமாக உயர்தியவர் . எடப்பாடியை கண்டு திமுக அஞ்சுகிறது.வெற்றி நம்மை நோக்கி வந்துள்ளது. நம்முடைய இலக்கு டெல்லி.அடுத்தது தமிழ்நாடு.

ALSO READ:  எண்ணம் முக்கியம்; எண்ணிக்கையும் முக்கியமே!

பட்டாசு கடைகளுக்கு தமிழகத்தில் அனுமதி இல்லை. கள்ள சாராயம் விற்பனை நடக்கிறது. இந்த அரசு தூங்கிக் கொண்டிருக்கிறது. இந்த அரசுக்கு ஆப்பு வைக்க வேண்டும். தற்போது வரை பட்டாசு கடைகளுக்கு விற்பனை உரிமம் கொடுக்கவில்லை அதிமுக ஆட்சிக்காலத்தில் 15 நாட்களுக்கு முன்னர் உரிமம் வழங்க பட்டது.நாளை உரிமம் கிடைக்க படவில்லை எனில் அதிமுக சார்பில் விருதுநகர் மாவட்டத்தில் போராட்டம் நடத்தப்படும். இந்த ஆட்சியினுடைய கதவுகள் தட்டப்படும். இந்தப் போராட்டத்தில் பல்வேறு அமைப்புகள் கலந்து கொள்ளும்.

இந்தத் தொழில் 10 லட்சம் பேர் ஈடுபட்டுள்ளனர். உரிமம் கிடைப்பதற்கு விற்பனையாளர்கள் அலைக்கழிக்கப்படுகிறார்கள். திமுக ஆட்சியில் எந்த தொழிலும் முன்னேற்றம் இல்லை. அனைத்தும் அழிந்து வருகிறது. திமுக ஆட்சியில் தமிழ்நாட்டுக்கு எந்த விமோசனமும் கிடையாது . இந்த விடிய அரசை வீட்டுக்கு அனுப்பும் பணியை நாம் செய்ய வேண்டும்.

நமது உழைப்பு எடப்பாடியை மீண்டும் முதல்வராக அமர வைப்பது. நாடாளுமன்றத் தேர்தலில் 40 தொகுதிகளிலும் கைப்பற்ற வேண்டும். எடப்பாடி அடையாளம் காட்டுபவர் பிரதமராக வரவேண்டும் அல்லது அவரே பிரதமராக வரவேண்டும்.

ALSO READ:  மத்திய அரசின் தொகுதி மறு வரை தென்னக மாநிலங்களுக்கு லாபமே!

பட்டாசு தொழிலாளர்களும் பட்டாசு தொழிலதிபர்களும் இந்த அரசின் மீது கடும் கோபத்தில் உள்ளனர். ஏன் பட்டாசு தொழிலை தடுக்கிறீர்கள் இந்த தொழிலை ஒழிக்க நினைக்கிறீர்கள். பட்டாசு தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை கெடுக்கின்ற பணியை திமுக செய்தால் அதை தடுக்கின்ற பணியை அதிமுக செய்யும்.

சாலையில் விபத்து நடக்கிறது அதற்காக சாலையை மூடி விடுகிறோமா. வெடி விபத்து நடப்பது என்பதற்காக தொழிலையும் முடக்க நினைப்பதால் இதற்கு கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறோம் என கூறியுள்ளார்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – ஜூன் 17 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 16 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

ஆனி மாத பூஜை; சபரிமலை கோயில் நடை திறப்பு!

கேரளாவில் தென்மேற்கு பருவமழை துவங்கி பெய்து வருகிறது பத்தனம்திட்டா மாவட்டம் கோட்டை மாவட்டத்தில் வனப்பகுதிகளில் கனமழையில் பெய்து வருகிறது இதனால் பம்பை நதியில் தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது பம்பை நதியில் பக்தர்கள் கவனமாக நீராட

பஞ்சாங்கம் ஜூன் 15 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அதிர்ச்சி… அபாயம்..! பெண்களின் பயங்கரவாதப் படை!

ஹாரிஸ் 2016 ல் காஷ்மீருக்குள் நுழைந்தான் . ஆயுத வன்முறை செயல்களால் தன்னை தற்கொலை படையென அறிவித்துக் கொண்டான். ஆனால் மறைமுகமாக ஒரு வலை பின்னலை ஏற்படுத்தினான் .

Topics

பஞ்சாங்கம் – ஜூன் 17 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 16 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

ஆனி மாத பூஜை; சபரிமலை கோயில் நடை திறப்பு!

கேரளாவில் தென்மேற்கு பருவமழை துவங்கி பெய்து வருகிறது பத்தனம்திட்டா மாவட்டம் கோட்டை மாவட்டத்தில் வனப்பகுதிகளில் கனமழையில் பெய்து வருகிறது இதனால் பம்பை நதியில் தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது பம்பை நதியில் பக்தர்கள் கவனமாக நீராட

பஞ்சாங்கம் ஜூன் 15 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அதிர்ச்சி… அபாயம்..! பெண்களின் பயங்கரவாதப் படை!

ஹாரிஸ் 2016 ல் காஷ்மீருக்குள் நுழைந்தான் . ஆயுத வன்முறை செயல்களால் தன்னை தற்கொலை படையென அறிவித்துக் கொண்டான். ஆனால் மறைமுகமாக ஒரு வலை பின்னலை ஏற்படுத்தினான் .

பஞ்சாங்கம் ஜூன் 14 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

FIFA உலகக்கோப்பை 2026 சிறப்புகள்!

          ஜூன் 11, 2026 அன்று முதலிரண்டு போட்டிகள் மெக்சிகோவில் நடைபெற்றன. முதல் பொட்டியில் நெக்சிகோ தெ ஆப்பிரிக்கா அணியை 2-0 என்ற கோல் கணக்கில் வென்றது. இரண்டாவது போட்டியில் தென் கொரிய அனி செக் குடியரசு அணியை 2-1 என்ற கோல் கணக்கில் வென்றது.

பஞ்சாங்கம் ஜூன் 13 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Entertainment News

Popular Categories