December 6, 2025, 8:42 AM
23.8 C
Chennai

சட்டப் பேரவையா? திமுக., பொதுக்கூட்ட மேடையா?

kadeswara subramaniam hindu munnani - 2025

சட்டப்பேரவையா? திமுக பொதுக்கூட்ட மேடையா? அரசாங்கம் நடத்தாமல் அரசியல் நடத்தும் கேவலத்திலும் கேவலத்தை அரங்கேற்றிய திமுக என்று இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சி. சுப்பிரமணியம் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்ட அறிக்கை:

நேற்றைய சட்டமன்ற சிறப்புக் கூட்டம் மக்களாட்சியின் மாண்பை சீர்குலைத்துள்ளது. கண்ணியக் குறைவான பேச்சுக்களால் தமிழகத்திற்கு தீராத களங்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

தமிழக அமைமைச்சரவை நிறைவேற்றிய பத்து தீர்மானங்கள் ஏற்புடையது இல்லை என விளக்கம் அளித்து தமிழக ஆளுநர் அவர்கள் திருப்பி அனுப்பியுள்ளார். இதற்கு முன்பே கவர்னர் மீது தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. இந்நிலையில் மீண்டும் அதே தீர்மானங்களை சட்டசபையில் மீண்டும் நிறைவேற்ற சிறப்பு கூட்டத்தை சபாநாயகர் கூட்டினார்.

இந்தக் கூட்டத்தில் தமிழக முதல்வர் முதல் ஆளும்கட்சி ஆளும்கட்சி கூட்டணி உறுப்பினர்களும் கண்ணியக் குறைவாக ஆளுநரை வசைபாடியுள்ளனர்.
ஆனால் ஒருவர்கூட ஆளுநர் குறிப்பிட்டுள்ள விளக்கம் சம்பந்தமாக பேசியதாக தெரியவில்லை. கல்வி பொது பட்டியலில் மத்திய அரசின் கீழ் வருகிறது. எனவே பல்கலைக்கழக வேந்தராக மாநில முதல்வரை நியமிக்க மாநில அரசிற்கு இதில் அதிகாரமில்லை என்பது தெளிவாக தெரிந்தும் திமுகவின் வரட்டு பிடிவாதத்தால் கண்மூடித்தனமாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதற்கு ஆளும் தரப்பில் கூறும் காரணம் சிறுபிள்ளை தனமானது.

இதே போன்ற நாடகத்தை தான் ஆன்லைன் சூதாட்ட விளையாட்டிற்கு தடை செய்து நிறைவேற்றிய தீர்மானத்தில் செய்தது. தற்போது மாநில அரசு விதித்த தடையை நீதிமன்றம் நீக்கிவிட்டது. ஆனால் ஊடகங்கள் இது குறித்து அறிவார்ந்த விவாதம் நடத்தவில்லை. நடத்தியிருந்தால் ஆளும்கட்சி தனது பிடிவாதத்தால் மண்ணை கவ்விய விவகாரம் வெளிச்சத்திற்கு வந்திருக்கும்.

அதேசமயம் தமிழக ஆளுநரை, மத்திய அரசை தரம்தாழ்ந்து சட்டசபையில் தெருமுனையில் நின்று வாய்க்கு வந்தபடி பேசும் நாலாந்தர அரசியல்வாதிகள் போல முதல்வர் உள்பட ஆளும்கட்சி உறுப்பினர்கள் பேசியது கண்டனத்திற்கு உரியது.

எதிர்க்கட்சிகள் பேசும்போது சபாநாயகர் தேவையில்லாமல் குறுக்கிட்டு திமுகவின் ஊதுகுழலாக கருத்தை திணிக்கிறார்.

சட்டசபையில் ஆளும்கட்சி திமுக அரசாங்கம் நடத்தவில்லை, அரசியல் நடத்தி சபையின் கண்ணியத்தை சீர்குலைத்து வருகிறது.

தமிழக முதல்வரும் சபாநாயகரும் இதுபோல் செயல்படுவது அரசியல் சாசனத்திற்கு எதிரானது, தமிழரின் பண்பாடு, கலாச்சாரம், நாகரிகத்திற்கு களங்கத்தை ஏற்படுத்தும் செயல் என்பதை சுட்டிக் காட்டுகிறோம்.

எனவே தமிழக சட்டபேரவை மாண்பை சீர்குலைக்காமல் எல்லா உறுப்பினர்களின் கருத்திற்கும் மதிப்பளித்து சபை நடத்தவும், கண்ணியமுடன் கருத்துக்களை எடுத்து வைக்கவும் சபை முன்னவர் என்ற முறையில் தமிழக முதல்வர் கவனம் கொடுக்க இந்து முன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories