மூன்று மாநில வெற்றி: மதுரையில் பாஜக.,வினர் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்!

madurai bjp sweets for three state voctory - 2026
#image_title

மூன்று மாநிலங்களில் பாஜக வெற்றி பெற்றதை மதுரையில் பாஜக.வினர் இனிப்பு வழங்கி கொண்டாடினர்.

சோழவந்தானில் இனிப்பு வழங்கி பாஜக., கொண்டாட்டம் :

சமீபத்தில் நடைபெற்ற மத்திய பிரதேசம் ராஜஸ்தான் சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களின் சட்டமன்ற தேர்தலில் அமோக வெற்றி பெற்ற பாஜகவின் வெற்றியை கொண்டாடும் விதமாகவும் , வெற்றிக்கு காரணமான பாரத பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்தும் சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவில் முன்பு பாஜகவினர் பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதில் ,மாவட்டத் தலைவர் ராஜசிம்மன் கலந்து கொண்டு சிறப்பித்தார். நிர்வாகிகள் கேசவப் பெருமாள் ,மண்டல் தலைவர்கள் திருவேடகம் கதிர்வேல், அழகர்சாமி, முத்துப்பாண்டி, மாவட்டத் துணைத் தலைவர் கோவிந்த மூர்த்தி, மாவட்ட மகளிர் அணி தலைவர் ஜெயமணி, மாவட்ட வர்த்தக அணி ராஜாராம், மாவட்ட மகளிர் அணி தலைவி வசந்தி, மாவட்ட மகளிர் அணி துணைத் தலைவர் செல்வி, மண்டல் பார்வையாளர் சிவராமன், மண்டல் பொருளாளர் பாண்டியன், முத்துப்பாண்டி, தசரத சக்கரவர்த்தி, ராஜ்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

அவனியாபுரத்தில் பாஜக.,வினர் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாட்டம்!

நடந்து முடிந்த ஐந்து மாநில சட்டப்பேரவை தேர்தலில், சத்தீஸ்கர், மத்திய பிரதேசம், மிசோரம், ராஜஸ்தான், தெலுங்கானா ஆகிய ஐந்து மாநிலங்களில் நடைபெற்ற தேர்தலில் நான்கு மாநில தேர்தல் முடிவுகள் வெளியாகியது.

இதில், சத்தீஸ்கர் மத்திய பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய மூன்று மாநிலங்களில் பாஜக அறுதி பெரும்பான்மை பெற்று வெற்றி பெற்றது. தெலங்கானாவில், காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது.

இதனைத் தொடர்ந்து, பாஜகவினர் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வெற்றி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருப்பரங்குன்றம் அவனியாபுரத்தில், பாஜகவினர் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாடினர்.

அவனியாபுரத்தில், நடைபெற்ற விழாவில், பாஜக மாவட்ட முன்னாள் தலைவர் சுந்தர் , அவனியாபுரம் மண்டல் செயலாளர் கருப்பையா, பாரதிராஜா , சுந்தர் ரமேஷ், காளி, மணிகண்டன் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் அவனியாபுரம் மந்தை திடலில் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாடினர்.

திருப்பரங்குன்றம், பகுதியில், நடைபெற்ற விழாவில், பாஜக மாவட்ட ஓபிசி அணி செயலாளர் வேல்முருகன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு இனிப்பு வழங்கினர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

Topics

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

அமெரிக்காவில் 1.7 பில்லியன் ஆண்டுகள் பழமையான விஷ்ணு பாறைகள்

இந்த விஷ்ணு கோவில் அல்லது விஷ்ணுப் பாறைகளுக்கு அருகே மேலு இரண்டு பாறைத் தொடர்களுக்கு ப்ரும்மா பாறை, ராம் பாறை என்றும் பெயரிடப்பட்டிருக்கிறது.

Entertainment News

Popular Categories