ஆண்டாள் கோவிலில், மார்கழி மாத சிறப்பு பூஜைகள்! அதிகாலையே குவிந்த பக்தர்கள்!

andal srivilliputhur

திருவில்லிபுத்தூர் ஸ்ரீஆண்டாள் கோவிலில், மார்கழி மாத சிறப்பு பூஜைகள்… அதிகாலை நேரத்தில் குவிந்த பக்தர்கள்…..

விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூரில் உள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீஆண்டாள் கோவிலில், மார்கழி மாதப் பிறப்பை முன்னிட்டு ஸ்ரீஆண்டாள் அம்பாளுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகின்றன.

‘108’ வைணவ ஸ்தலங்களில் முக்கியமான ஸ்தலமாகவும், ஸ்ரீஆண்டாள் அவதரித்த திருத்தலமாகவும், திருப்பாவை பாடல்கள் அரங்கேறிய புண்ணிய ஸ்தலமாகவும் திருவில்லிபுத்தூர் ஸ்ரீஆண்டாள் கோவில் திகழ்ந்து வருகிறது. ஸ்ரீஆண்டாள், ஸ்ரீரெங்கமன்னார் சுவாமிக்கு பூமாலைகளுடன், திருப்பாவை என்ற பாமாலையும் சூட்டி மகிழ்ந்த மார்கழி மாதத்தின் 30 நாட்களும் இங்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகின்றது.

கோவிலில் உள்ள குரடு மண்டபத்தில் ஸ்ரீஆண்டாள், திருப்பாவை பாடல்களை தங்க இழைகளால் நெய்யப்பட்ட பட்டுப்புடவையுடன் எழுந்தருளி, ஸ்ரீரெங்கமன்னார் சுவாமியுடன் காட்சி கொடுத்தார்.

திருமண வயதை அடைந்துள்ள பெண்கள், தங்களுக்கு சிறப்பான திருமண வாழ்க்கை அமைய வேண்டும் என்று, ஸ்ரீஆண்டாள் கோவிலில் பாவை நோன்பிருந்து அம்பாளை வணங்கினால், அவர்களுக்கு சிறப்பான முறையில் திருமணம் நடைபெறும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக இருந்து வருகிறது.

இதனை முன்னிட்டும், இன்று மார்கழி மாதப் பிறப்பை முன்னிட்டும் ஸ்ரீஆண்டாள் கோவிலில் அதிகாலை நேரத்தில், ஏராளமான பக்தர்கள் திரண்டு வந்து சுவாமி தரிசனம் செய்தனர். மார்கழி மாதம் முழுவதும் திருவில்லிபுத்தூர் ஸ்ரீஆண்டாள் கோவிலில் அதிகாலை 2.30 மணிக்கு நடை திறக்கப்பட்டு சிறப்பு வழிபாடுகள், பூஜைகள் தொடர்ந்து நடைபெற்று வரும்.

மார்கழி மாதத்தின் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படும் வைகுண்ட ஏகாதசி திருவிழா, வரும் 23ம் தேதி (சனி கிழமை) நடைபெறுகிறது. அன்று அதிகாலை, பரமபத வாசல் என்று அழைக்கப்படும் சொர்க்க வாசல் திறப்பு நிகழ்ச்சி, ஸ்ரீஆண்டாள் கோவிலில் வெகு சிறப்பாக நடைபெறும். திருவிழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் சிறப்பாக செய்து வருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories