ஆண்டாள் கோவிலில், மார்கழி மாத சிறப்பு பூஜைகள்! அதிகாலையே குவிந்த பக்தர்கள்!

andal srivilliputhur

திருவில்லிபுத்தூர் ஸ்ரீஆண்டாள் கோவிலில், மார்கழி மாத சிறப்பு பூஜைகள்… அதிகாலை நேரத்தில் குவிந்த பக்தர்கள்…..

விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூரில் உள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீஆண்டாள் கோவிலில், மார்கழி மாதப் பிறப்பை முன்னிட்டு ஸ்ரீஆண்டாள் அம்பாளுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகின்றன.

‘108’ வைணவ ஸ்தலங்களில் முக்கியமான ஸ்தலமாகவும், ஸ்ரீஆண்டாள் அவதரித்த திருத்தலமாகவும், திருப்பாவை பாடல்கள் அரங்கேறிய புண்ணிய ஸ்தலமாகவும் திருவில்லிபுத்தூர் ஸ்ரீஆண்டாள் கோவில் திகழ்ந்து வருகிறது. ஸ்ரீஆண்டாள், ஸ்ரீரெங்கமன்னார் சுவாமிக்கு பூமாலைகளுடன், திருப்பாவை என்ற பாமாலையும் சூட்டி மகிழ்ந்த மார்கழி மாதத்தின் 30 நாட்களும் இங்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகின்றது.

கோவிலில் உள்ள குரடு மண்டபத்தில் ஸ்ரீஆண்டாள், திருப்பாவை பாடல்களை தங்க இழைகளால் நெய்யப்பட்ட பட்டுப்புடவையுடன் எழுந்தருளி, ஸ்ரீரெங்கமன்னார் சுவாமியுடன் காட்சி கொடுத்தார்.

திருமண வயதை அடைந்துள்ள பெண்கள், தங்களுக்கு சிறப்பான திருமண வாழ்க்கை அமைய வேண்டும் என்று, ஸ்ரீஆண்டாள் கோவிலில் பாவை நோன்பிருந்து அம்பாளை வணங்கினால், அவர்களுக்கு சிறப்பான முறையில் திருமணம் நடைபெறும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக இருந்து வருகிறது.

இதனை முன்னிட்டும், இன்று மார்கழி மாதப் பிறப்பை முன்னிட்டும் ஸ்ரீஆண்டாள் கோவிலில் அதிகாலை நேரத்தில், ஏராளமான பக்தர்கள் திரண்டு வந்து சுவாமி தரிசனம் செய்தனர். மார்கழி மாதம் முழுவதும் திருவில்லிபுத்தூர் ஸ்ரீஆண்டாள் கோவிலில் அதிகாலை 2.30 மணிக்கு நடை திறக்கப்பட்டு சிறப்பு வழிபாடுகள், பூஜைகள் தொடர்ந்து நடைபெற்று வரும்.

மார்கழி மாதத்தின் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படும் வைகுண்ட ஏகாதசி திருவிழா, வரும் 23ம் தேதி (சனி கிழமை) நடைபெறுகிறது. அன்று அதிகாலை, பரமபத வாசல் என்று அழைக்கப்படும் சொர்க்க வாசல் திறப்பு நிகழ்ச்சி, ஸ்ரீஆண்டாள் கோவிலில் வெகு சிறப்பாக நடைபெறும். திருவிழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் சிறப்பாக செய்து வருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் தீவிபத்து..

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே மடத்துப் பட்டியில் இன்று 13 ஏப்ரல்...

ரமாபாய், சவிதா அம்பேத்கர்: இந்திய வரலாற்றில் மறைந்த உருவங்கள்!

ரமாபாயின் வாழ்க்கை வறுமை மற்றும் தனிமை படுத்தப்பட்டதான சூழ்நிலையில் இருந்தது. 1898 இல் மகாராஷ்டிராவில் ஒரு கடலோர கிராமத்தில் அவர் பிறந்தார்

ஆப்கன், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் எல்லையில் புதிய மாவட்டத்தை உருவாக்கும் சீனா!

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் (PoK), ஆப்கானிஸ்தான் எல்லைக்கு அருகில் சீனா புதிய மாவட்டத்தை அமைக்கிறது; இது இந்தியாவிற்கு கவலை அளிக்கும் அம்சம்.

தேசம் தீர்வுகளைத் தேடும்போது, திமுக சர்ச்சைகளை உருவாக்குகிறது: நிர்மலா சீதாராமன்

தேசம் தீர்வுகளைத் தேடும்போது, திமுக சர்ச்சைகளை உருவாக்குகிறது. மத்திய அரசு ஆக்கப்பூர்வமான ஒத்துழைப்பை நல்கும்போது, திமுக அதைத் தேர்தல் அரசியலுக்காகச் சுரண்டப் பார்க்கிறது.

பஞ்சாங்கம் ஏப்ரல் 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் தீவிபத்து..

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே மடத்துப் பட்டியில் இன்று 13 ஏப்ரல்...

ரமாபாய், சவிதா அம்பேத்கர்: இந்திய வரலாற்றில் மறைந்த உருவங்கள்!

ரமாபாயின் வாழ்க்கை வறுமை மற்றும் தனிமை படுத்தப்பட்டதான சூழ்நிலையில் இருந்தது. 1898 இல் மகாராஷ்டிராவில் ஒரு கடலோர கிராமத்தில் அவர் பிறந்தார்

ஆப்கன், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் எல்லையில் புதிய மாவட்டத்தை உருவாக்கும் சீனா!

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் (PoK), ஆப்கானிஸ்தான் எல்லைக்கு அருகில் சீனா புதிய மாவட்டத்தை அமைக்கிறது; இது இந்தியாவிற்கு கவலை அளிக்கும் அம்சம்.

தேசம் தீர்வுகளைத் தேடும்போது, திமுக சர்ச்சைகளை உருவாக்குகிறது: நிர்மலா சீதாராமன்

தேசம் தீர்வுகளைத் தேடும்போது, திமுக சர்ச்சைகளை உருவாக்குகிறது. மத்திய அரசு ஆக்கப்பூர்வமான ஒத்துழைப்பை நல்கும்போது, திமுக அதைத் தேர்தல் அரசியலுக்காகச் சுரண்டப் பார்க்கிறது.

பஞ்சாங்கம் ஏப்ரல் 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

ஈரான் விஷயத்தில் பாரதம் ஏன் தலையிடவில்லை?!

தமிழில் ஒரு பழமொழி சொல்வார்கள். தெரியாத இருவர் அல்லது நமக்கு தொடர்பில்லாத யாரோ இருவர் தெருவில் சண்டை போட்டுக் கொண்டிருக்கும் போது,

பஞ்சாங்கம் ஏப்ரல் 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

ஜனநாயகன் – விளக்கம் கொடுத்த சென்சார் போர்ட்; யார் பார்த்த வேலை இது?

தணிக்கை சான்றிதழ் வேண்டி சமர்ப்பிக்கப்படும் அனைத்து திரைப்படங்களுக்கும் KDM எனப்படும் ஒரு பாதுகாப்பான முறையை திரைப்பட தணிக்கை வாரியம் பின்பற்றுகிறது.

Entertainment News

Popular Categories