வெள்ளக்காடான நெல்லை ஜங்ஷன்: ரயில்கள் ரத்து

nellai junction - 2026
#image_title

தென் தமிழகத்தில் தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய தென்மாவட்டங்களில் பெய்து வரும் பலத்த மழையின் காரணமாக, நெல்லை சந்திப்பு ரயில் நிலையம் நீரில் தத்தளிப்பதால், 6 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

சென்னை – நெல்லை, நெல்லை – சென்னை வந்தே பாரத் ரயில் இரு மார்க்கங்களிலும் ரத்து செய்யப்பட்டுள்ளது. சென்னை எழும்பூர் – குருவாயூர் விரைவு ரயில், திருச்சி – திருவனந்தபுரம் விரைவு ரயில், திருச்செந்தூர் – பாலக்காடு விரைவு ரயில், நெல்லை – ஜாம்நகர் விரைவு ரயில் சேவைகள் டிச.18 இன்று ரத்து செய்யப்படுவதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

திருநெல்வேலி – செங்கோட்டை வழித்தடத்தில் இயக்கப்படும்
1) 06685 திருநெல்வேலி – செங்கோட்டை – காலை 7 மணி
2) 06682 செங்கோட்டை – திருநெல்வேலி – காலை – 6:40
3) 06681 திருநெல்வேலி – செங்கோட்டை – காலை – 9:45
4) 06684 செங்கோட்டை – திருநெல்வேலி – காலை 10:00
5) 06687 திருநெல்வேலி – செங்கோட்டை – மதியம் 1:50 ஆகிய ரயில்கள் அனைத்தும் முழுவதுமாக ரத்து செய்யப்பட்டுள்ளன.

ALSO READ:  தேர்தலில் வாக்களிக்க... சிறப்பு ரயில்கள் இயக்கம்; விவரம் இதோ!

இதனிடையே செங்கோட்டை ரயில் பயணிகள் நலச் சங்கத்தின் சார்பில் அதன் செயலர் கே.எச். கிருஷ்ணன் தென்னக ரயில்வே பொது மேலாளருக்கு எழுதிய மின்னஞ்சல் கடிதத்தில், செங்கோட்டை – புனலூர் இடையிலான வழித் தடத்தில் 24 பெட்டிகளுடன் ரயில்கள் செல்ல ஏதுவாக பாதையை மேம்படுத்தக் கோரியுள்ளார்.

அவர் எழுதிய கடிதத்தில், எங்களுக்கு ஒரு பணிவான வேண்டுகோள். தயவுசெய்து சாதகமாக ஏற்பாடு செய்யுங்கள். கொல்லம்- புனலூர் – செங்கோட்டை அகலப்பாதை வழித்தடம் மேம்படுத்தப்பட வேண்டும்.

உலகத் தரம் வாய்ந்த தொழில்நுட்ப நிபுணத்துவம் மற்றும் சிறந்த பொறியாளர்களைக் கொண்ட இந்திய ரயில்வே 24 பெட்டிகள் கொண்ட பயணிகள் ரயில்கள் மற்றும் சரக்கு ரயில்களை கொங்கன் மற்றும் பிற மண்டல ரயில்வேயின் மலைப்பகுதிகள் வழியாக இயக்கும் போது, அழகான கொல்லம் – புனலூர் – செங்கோட்டை மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியை நோக்கி அதிக கவனம் செலுத்தவில்லை. மிகவும் தேவையான அபிவிருத்திகளுடன் கூடிய ரயில் பாதை இது.

ALSO READ:  ஆப்கன், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் எல்லையில் புதிய மாவட்டத்தை உருவாக்கும் சீனா!

திருவனந்தபுரம் – நாகர்கோவில் – திருநெல்வேலி – விருதுநகர் வழித்தடத்துக்கு மாற்று வழித்தடமாகத் திகழ்கிறது, திருவனந்தபுரம் – கொல்லம் – புனலூர் – செங்கோட்டை – தென்காசி – ராஜபாளையம் – சிவகாசி – விருதுநகர் அகலப்பாதை வழித்தடம். இது, இன்றுவரை 98% மின்மயமாக்கப்பட்ட பிரிவாக உள்ளது.

கொல்லம் – செங்கோட்டை – தென்காசி- ராஜபாளையம் – சிவகாசி – விருதுநகர் வழித்தடம் மற்றும் தென்காசி – திருநெல்வேலி வழித்தடம் ஆகியவற்றை இந்திய அரசு கோடிக்கணக்கான ரூபாய் செலவழித்து அகலப்பாதை மற்றும் மின்மயமாக்கல் பணிகளை நடத்தி தடத்தை மாற்றியமைத்துள்ளது.

மார்ச் 2024க்குள் புனலூர் – செங்கோட்டை வழியும் மின்மயமாக்கப்படும். ஏற்கெனவே கொல்லத்தில் இருந்து புனலூர் வரையிலும், செங்கோட்டையிலிருந்து விருதுநகர் வரையிலும், தென்காசியிலிருந்து திருநெல்வேலி வரையிலும் மின்மயமாக்கல் முடிந்துவிட்டது.

திருநெல்வேலி பகுதியில் நேற்று 17.12.23 கனமழை பெய்து வருவதால், திருநெல்வேலி வழியாக கேரளா/ தமிழகம் செல்லும் பல ரயில்களை தெற்கு ரயில்வே ரத்து செய்துள்ளது. இந்நிலையில், திருவனந்தபுரம் – கொல்லம் – புனலூர் – செங்கோட்டை வழித்தடத்தை 24 பெட்டிகள் கொண்ட பயணிகள் ரயில்கள் மற்றும் சரக்கு ரயில்களை ஆர்.டி.எஸ்.ஓ.வின் விரைவான பரிந்துரைகளுடன் இயக்குவதற்கு போதுமானதாக ரயில்வே அமைத்தால் அது அனைவருக்கும் குறிப்பிடத்தக்க சாதனையாக இருக்கும். இது போன்ற நெருக்கடியான நேரங்களில் மாற்று ரயில்பாதையாக இயக்க சாத்தியமானதாகவும் இருக்கும் என்று குறிப்பிட்டிருக்கிறார்.

ALSO READ:  தமிழகத்தின் 13வது முதல் அமைச்சராகப் பதவியேற்றார் ஜோசப் விஜய்!  

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

பஞ்சாங்கம் ஜூன் 1 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

ராஜபாளையம் வழியே திருவனந்தபுரம் – கோவை சிறப்பு ரயில் அறிவிப்பு

கோடைகால சிறப்பு ரயிலாக திருவனந்தபுரம் வடக்கு - போத்தனூர் மற்றும் போத்தனூர் - திருவனந்தபுரம் சென்ட்ரல் இடையே தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

Topics

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

பஞ்சாங்கம் ஜூன் 1 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

ராஜபாளையம் வழியே திருவனந்தபுரம் – கோவை சிறப்பு ரயில் அறிவிப்பு

கோடைகால சிறப்பு ரயிலாக திருவனந்தபுரம் வடக்கு - போத்தனூர் மற்றும் போத்தனூர் - திருவனந்தபுரம் சென்ட்ரல் இடையே தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

பஞ்சாங்கம் மே 31- ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

டெட் மறு ஆய்வு மனு மீதான தீர்ப்பில் உடனடி சட்ட நிவாரணம் தேவை!

ஆசிரியர் சமூகத்தின் கவலைகளுக்கு மதிப்பளித்து, அரசாங்கம் இந்த விஷயத்தில் இரக்கத்துடனும் உறுதியுடனும் செயல்படும் என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம்.

Entertainment News

Popular Categories