சேத்தூர் அருகே சாலை துண்டிப்பு; சபரிமலை பயணிகள் கவனத்துக்கு!

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் – செங்கோட்டை – கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் சேத்தூரில் மேற்கு தொடர்ச்சி மலையில் பெயத பலத்த மழையின் காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு அணை மற்றும் குளங்களில் நீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால் வெள்ள நீர் அதிகரித்து சாலையில் செல்வதால், வாகனங்கள் சாலையைக் கடக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

எனவே மழை ஓயும் வரை ராஜபாளையம் – சேத்தூர் வழி சபரிமலை ஐயப்பன் கோயில் மற்றும் செங்கோட்டை கொல்லம் வழித்தடத்தில் செல்லும் வாகனங்கள் இந்த வழியைத் தவிர்ப்பது நல்லது.

ஐயப்பன் கோவில் செல்லும் பக்தர்கள் மதுரையில் இருந்து வரும் வழியில் ராஜபாளையம் – சங்கரன்கோவில் வழியாக செல்லலாம். தென்காசியில் இருந்து வரும் வாகனங்கள் புளியங்குடி – சங்கரன்கோவில் வழியாக ராஜபாளையம், மதுரை செல்லலாம்.

இதுபோல் தேனி மாவட்டத்தில் இருந்து குமுளி வழியாக சபரிமலை செல்லும் வழியில் பல்வேறு இடங்களில் கன மழை பெய்ததின் காரணமாக நிலச்சரிவு ஏற்பட்டு சாலைகளில் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. இந்த வழியாக செல்லும் ஐயப்ப பக்தர்கள் சாலையில் வாகனங்கள் செல்ல முடியுமா என்பதைக் கேட்டுத் தெரிந்துகொண்டு, குமுளி கம்பம் வண்டிப்பெரியார் வழியாக சபரிமலைக்குச் செல்ல வேண்டும்.

இந்த நிலையில் இன்றும் தென்காசி – நெல்லை – குமரி – தூத்துக்குடி மாவட்டங்களுக்கு மீண்டும் 24 மணி நேரத்திற்கு சிகப்பு வண்ண எச்சரிக்கையை இந்திய வானிலை மையம் விடுத்து உள்ளது. எனவே இந்தப் பகுதிகளில் வாகனங்களில் செல்பவர்கள் கூடுதல் கவனத்துடன் செயல்படுவது நல்லது.

ALSO READ:  ஆண்டாள் சூடிய மாலை கள்ளழகருக்குச் சாற்ற, புறப்பாடு!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

பஞ்சாங்கம் ஜூலை 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

Topics

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

பஞ்சாங்கம் ஜூலை 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

பல ஆயிரக்கணக்கான பாடல்களால் ரசிகர்களைக் கவர்ந்து இழுத்த பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி தமது 88வது வயதில் மைசூரில் இன்று காலமானார்.

முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

ஆக்கிரமிப்பாளர்களுக்கே கோயில் சொத்துகளை பட்டா போடுவதா? தவெக., அரசுக்கு வலுக்கும் கண்டனங்கள்!

அரசு நிலத்தை ஆக்கிரமிப்பது சட்டவிரோதம் என்றால் கோவில் நிலத்தை ஆக்கிரமித்து அபகரிப்பதை தமிழக அரசு அனுமதிக்கலாமா?

Entertainment News

Popular Categories