மதுரை அருகே ஸ்டாலின் தொடங்கி வைத்த ஏறுதழுவுதல் அரங்கம்! கடும் இன்னலில் மக்கள்!

jallikattu ground - 2026
#image_title

மதுரை வாடிப்பட்டி : மதுரை அலங்காநல்லூர் அருகே கீழக்கரையில் முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைக்கப்பட்ட ஏறு தழுவுதல் அரங்கம் நிகழ்ச்சியால் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாக்கப்பட்ட பொதுமக்கள்!

முதல்வர் ஸ்டாலின் படங்கள் கீழே கிடப்பது தெரியாமல் படங்களை மிதித்துக் கொண்டேகரும்பு கட்டுகள் வாழைக் காய்களை எடுத்துச் சென்ற தொண்டர்கள்

முதல்வர் வரும் வழியில் போக்குவரத்தை நீண்ட நேரம் நிறுத்தி வைத்து வாட்டி வதைத்தால் பொதுமக்கள்
எரிச்சல்

முதல்வர் வருவதற்கு முன்பே சாரை சாரையாக கரும்பு மற்றும் வாழை காய்களுடன் மைதானத்தை விட்டு வெளியேறி சென்ற பொதுமக்கள்

பாதுகாப்பாற்ற முறையில் லாரி வேன் டாட்டா ஏசி போன்ற வண்டிகளில் அளவுக்கு அதிகமாக ஆட்களை ஏற்றி வந்ததால் உயிர் பயத்தில் பொதுமக்கள்

தொடரும் திமுக அரசின் அவல நிலை

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே கீழக்கரை பகுதியில் சுமார் 63 கோடி மதிப்பீட்டில் கலைஞர் நூற்றாண்டு ஏறு தழுவுதல் அரங்கம் அமைக்கப்பட்டு அதன் தொடக்க விழா முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது இந்த நிகழ்ச்சிக்காக மதுரை மட்டுமன்றி பல்வேறு மாவட்டங்களில் இருந்து அரசு பேருந்துகள் மற்றும் லாரிகள் டாட்டா ஏசி வண்டிகள் தனியார் மினி வேன்கள் போன்றவைகளில் பொதுமக்கள் மற்றும் திமுக தொண்டர்களை காலை 6:00 மணிக்கே அழைத்து வந்து கீழக்கரை ஏறு தழுவுதல் அரங்கத்திற்குள் அமர வைத்தனர்

காலை 10 மணிக்கு முதல்வர் ஸ்டாலின் வந்து ஜல்லிக்கட்டு போட்டியை தொடங்கி வைப்பார் என்று கூறப்பட்ட நிலையில் அதிகாலை 6:00 மணிக்கே பொதுமக்களை திரட்டி வந்து மைதானத்திற்குள் அமர வைக்கப்பட்டது பொது மக்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது

ALSO READ:  முதலமைச்சர் கனவில் முந்திய விஜய்; வெளியில் இருந்து ஆதரிக்கும் திமுக., கூட்டணிக் கட்சிகள்!

மேலும் நேரம் செல்ல செல்ல வெயிலின் தாக்கம் அதிகரித்துக் கொண்டே இருந்தது ஏனென்றால் கீழக்கரை ஏறு தழுவுதல் அரங்கம் அமைந்துள்ள பகுதி மலை சார்ந்த பகுதியாக இருப்பதால் மரங்கள் இல்லாமல் வெயிலின் தாக்கம் அதிகரித்துக் கொண்டே சென்றது

இதனால் சுமார் 9 மணி அளவில் பொதுமக்கள் வெயிலின் தாக்கம் பொறுக்காமல் மைதானத்தை விட்டு வெளியேற கிளம்பினர் இதனைத் தொடர்ந்து முதல்வர் ஸ்டாலினை வரவேற்பதற்காக வைக்கப்பட்டிருந்த அலங்கார வளைவுகளில் இருந்த கரும்பு வாழைக்காய் போன்ற பொருட்களை கிளம்பிச் சென்றவர்கள் கையில் கிடைத்ததை எடுத்துக் கொண்டு சென்றனர்

மேலும் பத்து மணி ஆகியும் முதல்வர் ஸ்டாலின் விழா நடக்கும் இடத்திற்கு வராத காரணத்தால் மதுரை திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் சமயநல்லூர் அருகே அணுக சாலையில் போக்குவரத்தை நிறுத்தி பொதுமக்களை வாட்டி வதைத்தது மேலும் எரிச்சல் அடையச் செய்தது

அதாவது மதுரை விமான நிலையத்திலிருந்து முதல்வர் வரும் வழிஎன கூறி அந்த பகுதியில் போக்குவரத்தை நிறுத்தி இருந்ததாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது

மேலும் அந்த சாலையானது மதுரை திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையாகவும் கோவை சேலம் திருப்பூர் போன்ற மேற்கு மாவட்டங்களுக்கு செல்வதற்கு முக்கியசாலையாகவும் இருப்பதால் மதுரை ஆரப்பாளையத்தில் இருந்து மேற்கு மாவட்டங்களுக்கு செல்லக்கூடிய வாகனங்கள் எண்ணிக்கை நேரம் செல்ல செல்ல அதிகரிக்க தொடங்கியது

இதனால் அந்தப் பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது மேலும் அதே நேரத்தில் மைதானத்தில் முதல்வருக்காக காத்திருந்த பொதுமக்களும் முதல்வர் வர தாமதமானதால் தாங்கள் மைதானத்தை விட்டு வெளியேறி கிளம்ப தொடங்கினர் இதனால் அங்கிருந்த காவல்துறையினர் என்ன செய்வது என்று தெரியாமல்
விழி பிதுங்கி நின்றனர்

ALSO READ:  திருச்சூரில் கோலாகலமாக நடைபெற்ற ‘ஆனையூட்டு’ நிகழ்வு!

மேலும்முதல்வர் வருவதற்கு முன்பாகவே முதல்வரை வரவேற்று வைக்கப்பட்டிருந்த தோரண வாயிலில் இருந்த கரும்பு வாழை மரங்களை பொதுமக்கள் அங்கிருந்து எடுத்துச் சென்றனர் இதனால் மீதி உள்ள பொருட்களை பாதுகாப்பதற்காக அவசர அவசரமாக காவல்துறையினர் இரண்டு பேர் அங்கு காவலுக்கு நிற்கவைக்கப்பட்டனர்

இதில் அவமானத்தின் உச்சமாக கரும்பு வாழைக்காயை எடுத்துச் செல்ல வந்த திமுக தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் கரும்புக்கு கீழே கிடந்த முதல்வரின் படம் மற்றும் அமைச்சரின் படத்தை கண்டு கொள்ளாமல் காலால் மிதித்து கரும்புகளை எடுத்துச் சென்றது விடியா அரசு தொண்டர்களின் அவமானத்தின் உச்சமாக இருந்தது சிலர் அந்த படங்களை மிதித்தவாரே கரும்புகளை ஒடித்து சென்றனர்

இந்த நிலையில் முதல்வரின் கான்வாய் வர இருந்த நிலையில் கான்வாய் வரும் பகுதியில் இருந்த கரும்பு கட்டுகள் மற்றும் வாழைக்காய்களை பாதுகாக்க வேண்டும் என்ற அக்கறையில் போலீசார் அந்த பகுதியில் குவித்து வைக்கப்பட்டனர்

இவ்வளவு களேபரங்களுக்கு மத்தியில் 11 மணி அளவில் முதல்வர் ஸ்டாலின் விழா மேடைக்கு வந்து ஏறு தழுவுதல் அரங்கத்தை துவக்கி வைத்து ஜல்லிக்கட்டு போட்டியை துவக்கி வைத்தார் முதல்வர் ஸ்டாலின் ஜல்லிக்கட்டு மைதான அரங்கிற்குள் இருந்த பொழுது வெளியில் பொதுமக்கள் சாரை சாரையாக தாங்கள் வந்த வண்டியை தேடி கரும்பு கட்டுகள் மற்றும் வாழைக் காய்களுடன் கிளம்பி சென்றது காண்போரை நகைப்பிற்க்கு உள்ளாக்கியது

இந்த நிலையில் முதல்வர் ஸ்டாலின் நிகழ்ச்சியை 10 நிமிடத்தில் முடித்து கிளம்பி சென்று விட்டதால் நிகழ்ச்சிக்கு வந்திருந்த பொதுமக்கள் மற்றும் திமுக தொண்டர்கள் மிகுந்த ஏமாற்றம் அடைந்தனர்

ALSO READ:  இலவச உயர்தரப் பள்ளிகளை ஏன் தடுக்க வேண்டும்?

பின்னர்அங்கிருந்து கிளம்பிய தொண்டர்கள் இதற்காகவா காலை 6 மணி முதல் காத்திருந்தோம் இதை வீட்டிலிருந்து டிவியில் பார்த்திருக்கலாமே என்று ஒருவரை ஒருவர் பேசி சென்றனர்

இந்த நிலையில் பொதுமக்களை வரவழைப்பதற்காக தமிழக அரசு பேருந்துகளை மொத்தமாக வரவழைத்து திமுகவினருக்காக அழைத்து வந்ததில்

அலங்காநல்லூர் வாடிப்பட்டி சமயநல்லூர் போன்ற பல்வேறு இடங்களில் பயணிகளுக்கு போதிய போக்குவரத்து வசதி இல்லாமல் சிரமப்பட்டதாகவும் தெரிவித்தனர்

இந்த நிலையில் விழாவிற்கு வந்த பொதுமக்களும் பாதுகாப்பான வாகனத்தில் வராமல் லாரி தனியார் வேன் டாட்டா ஏசி வண்டி போன்ற ஆபத்தான வண்டிகளில் அளவுக்கு அதிகமாக ஆட்களை ஏற்றி சென்றது பொதுமக்களை மிகுந்த எரிச்சலடைய செய்தது

பாரம்பரியமிக்க அவனியாபுரம் பாலமேடு அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிகளை கண்டு களித்த பொது மக்களுக்கு கீழக்கரை ஜல்லிக்கட்டு ஆனது மிகுந்த ஏமாற்றமாகவே இருப்பதாகவும் இது முழுக்க முழுக்க திமுக அரசின் கட்சியினருக்காக மட்டும் நடத்தப்படுவதாகவும் பொதுமக்கள் தெரிவித்தனர்

இனிவரும் காலங்களிலாவது பாரம்பரியமிக்க அலங்காநல்லூர் பாலமேடு அவனியாபுரம் போன்ற ஜல்லிக்கட்டுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து அந்த ஜல்லிக்கட்டுகளை மேம்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 21 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 20 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 19 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

ஆடிப் பூர நாளில் நந்தவனத்தில் எழுந்தருளிய ஆண்டாள்!

ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் கோவில் ஆடி மாதம் பூரம் நட்சத்திரத்தை முன்னிட்டு ஆண்டாள் திரு ஆடி பூர நந்தவனத்தில் எழுந்தருளல் நிகழ்வு இன்று சனிக்கிழமை விமர்சையாக நடைபெற்றது.

விளையாட்டுக்கு முன்னுரிமை கொடுக்கும் மத்திய பாஜக அரசு: நிதியமைச்சர் நிர்மலா சீத்தாரமன்!

விளையாட்டுக்கு முன்னுரிமை கொடுக்கும் கட்சி மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசு-மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாரமன் பேசினார்.

Topics

பஞ்சாங்கம் ஜூலை 21 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 20 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 19 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

ஆடிப் பூர நாளில் நந்தவனத்தில் எழுந்தருளிய ஆண்டாள்!

ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் கோவில் ஆடி மாதம் பூரம் நட்சத்திரத்தை முன்னிட்டு ஆண்டாள் திரு ஆடி பூர நந்தவனத்தில் எழுந்தருளல் நிகழ்வு இன்று சனிக்கிழமை விமர்சையாக நடைபெற்றது.

விளையாட்டுக்கு முன்னுரிமை கொடுக்கும் மத்திய பாஜக அரசு: நிதியமைச்சர் நிர்மலா சீத்தாரமன்!

விளையாட்டுக்கு முன்னுரிமை கொடுக்கும் கட்சி மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசு-மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாரமன் பேசினார்.

உணவுப் பொருட்களை நஞ்சில்லாமல் உற்பத்தி செய்யும் விவசாயிகள் கடவுளுக்கு நிகரானவர்கள்!

உணவுப்பொருட்களை நஞ்சில்லாமல் உற்பத்தி செய்யும் விவசாயிகள் கடவுளுக்கு நிகரானவர்கள் உங்களை வணங்குகிறேன்-சம்பா மிளகாய் மதிப்புக்கு கூட்டப்பட்ட உற்பத்தி நிறுவனமான குளோபல் சில்லி அக்ரோ பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்தை திறந்து வைத்து

பஞ்சாங்கம் ஜூலை 18 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

திருச்சூரில் கோலாகலமாக நடைபெற்ற ‘ஆனையூட்டு’ நிகழ்வு!

திருச்சூரில் உள்ள ஸ்ரீ வடக்குநாதர் கோயிலில் ஆண்டுதோறும் ஆடி கர்கடகம் முதல் நாள் நடைபெறும் 'ஆனையூட்டு' விழா மிக பிரபலமான சமூக விழாவாகும்.

Entertainment News

Popular Categories