குடியுரிமை வழங்குவது என்பது முழுக்க முழுக்க மத்திய அரசின் உரிமை!

BJP Narayanan Thiruppathi - 2026
#image_title

குடியுரிமை வழங்குவது என்பது முழுக்க முழுக்க மத்திய அரசின் உரிமை என்று, தமிழக பாஜக., துணைத்தலைவர் திருப்பதி நாராயணன் கூறியுள்ளார்.

“தமிழ்நாட்டில் குடியுரிமைத் திருத்தச் சட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதைத் தி.மு.க அரசு ஒருபோதும் அனுமதிக்காது. உறுதியாக சொல்கிறேன். தமிழ்நாட்டில் CAA கால் வைக்க விட மாட்டோம்” என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறிய கருத்துக்கு பதிலளிக்கும் விதமாக திருப்பதி நாராயணன் இவ்வாறு கூறியுள்ளார். அவர் இதுகுறித்துத் தெரிவித்ததாவது…

இது போன்று சொல்வதே சட்ட விரோதம். தமிழகத்தில் யாரும் இந்த சட்டதிருத்தத்தின் கீழ் குடியுரிமை கேட்டு விண்ணப்பித்திருக்க மாட்டார்கள் என்று கருதுகிறேன். அப்படியே யாராவது விண்ணப்பித்தாலும் மத்திய அரசாங்கத்தை தான் அணுக வேண்டுமேயன்றி மாநில அரசுக்கு இதில் எந்த பணியும், தொடர்பும் இல்லை.

அதாவது பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் வங்காளதேச நாடுகளில் மத ரீதியாக துன்புறுத்தப்பட்ட ஹிந்துக்கள், சீக்கியர்கள்,பௌத்தர்கள், ஜைனர்கள், பார்சிக்கள் அல்லது கிறிஸ்துவர்கள் டிசம்பர் 2014க்கு முன்பு இந்தியாவிற்கு வந்திருந்து, இந்திய குடியுரிமைக்கு விண்ணப்பித்திருந்தால் அவர்களுக்கு குடியுரிமை வழங்கப்படும் என்பதே சட்டத் திருத்தம்.

ஆகவே, இந்த சட்டத்தை அமல்படுத்துவதற்கோ, நடைமுறைப்படுத்துவதற்கோ மாநில அரசுக்கு எந்த பங்கும் நிலையில், இதை அறிக்கை வெறும் அரசியல் பேச்சு மட்டுமே என்பதை முதல்வர் உணர்ந்திருக்கிறாரா என்பதே கேள்விக்குறியாகிறது. இந்த சட்டமானது இந்திய குடிமக்களுக்கானதே இல்லை என்பதை முதல்வர் அறிவாரா? இதை விமர்சிக்கலாம் அல்லது எதிர்க்கலாம், ஆனால் நடைமுறைப்படுத்த மாட்டோம் என்றோ CAA கால் அல்லது கை பதிக்க விட மாட்டோம் என்று சொல்வது வெறும் வெற்று பேச்சே. குடியுரிமை வழங்குவது என்பது முழுக்க முழுக்க மத்திய அரசின் உரிமை… என்றார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories