தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவராக கே.எஸ்.அழகிரிக்கு பதிலாக செல்வப் பெருந்தகை நியமனம்!

selvaperunthagai ks alagiri - 2026
#image_title

தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவராக எம்.எல்.ஏ., செல்வப்பெருந்தகை நியமிக்கப்பட்டுள்ளார். தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவராக இருந்த கே.எஸ். அழகரிக்கு பதிலாக செல்வப்பெருந்தகையை கட்சி மேலிடம் நியமித்துள்ளது.

இது குறித்து காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி. வேணுகோபால் பிப்.17 இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பு:

தமிழக காங்கிரஸ் தவைராக செல்வப்பெருந்தகை, காங்கிரஸ் கட்சித் தலைவரால் நியமிக்கப்படுகிறார். இந்த நியமனம் உடனடியாக அமலுக்கு வருகிறது. இதுவரை தலைவராக இருந்த கே.எஸ். அழகிரியின் பங்களிப்பு பாராட்டுதலுக்குரியது. மேலும், தமிழக சட்டசபை குழுத் தலைவராக ராஜேஷ் குமார் நியமனத்துக்கு காங்கிரஸ் தலைவர் ஒப்புதல் அளித்துள்ளார் – இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டது.

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தமிழக காங்கிரஸ் நிர்வாகத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது, தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கெனவே சில மாதங்களாகவே காங்கிரஸ் தலைவர் மாற்றம் குறித்து தகவல்கள் கசிந்து வந்தன. செல்வப்பெருந்தகையுடன், கரூர் எம்.பி ஜோதிமணி, எம்.எல்.ஏ., விஜயதாரணி உள்ளிட்டோரும் தலைவருக்கான போட்டியில் இருந்ததாகவும், ராகுலுக்கு நெருக்கமாக இருப்பவர்க்கே கிடைக்கும் என்பதால், இவர்களில் ஒருவருக்கு தலைவர் பதவி கிடைக்கும் என்றும் செய்திகள் உலா வந்தன.

இந்த நிலையில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக நியமனம் செய்யப்பெற்றுள்ள செல்வபெருந்தகை இதுகுறித்துக் கூறியபோது, என்னை தமிழக காங்கிரஸ் தலைவராக நியமித்துள்ளது ஆச்சரியம் தந்துள்ளது. தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, ராகுல் ஆகியோருக்கு நம்பிக்கைக்குரியவனாக இருப்பேன். தலைமையின் நம்பிக்கை வீண்போகாமல் பணியாற்றுவேன். வரும் மக்களவைத் தேர்தலில் 40 தொகுதிகளிலும் வெற்றி பெற உழைப்போம் என்று கூறினார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories