IPL 2024: சன் ரைசர்ஸ் அணியிடம் தோற்ற தோனி அணி!

ipl 2024 - 2026

பதினைந்தாம் நாள்
ஐபிஎல் 2024 – 05.04.2024 – ஹைதராபாத்
சென்னை சூப்பர் கிங்ஸ் vs சன்ரைசர்ஸ் ஹைதராபாத்

  • முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்

சென்னை அணியை (166/5, ஷிவம் துபே 45, அஜிங்க்யா ரஹானே 35, ரவீந்த்ர ஜதேஜா 31*) ஹதராபாத் அணி (18.1 ஓவரில் 166/4, எய்டன் மர்க்ரம் 50, அபிஷேக் ஷர்மா 37, ட்ராவிஸ் ஹெட் 31) 6 விக்கட்டுகள் வித்தியாசத்தில் வென்றது.

இன்று ஹைதராபாத்தில் சன்ரைசர்ஸ் அணிக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும் இடையே ஆட்டம் நடைபெற்றது. பூவாதலையா வென்ற ஹைதராபாத் அணி முதலில் பந்துவீசத் தீர்மானித்தது.

சென்னை அணியின் தொடக்க வீரர்கள் ரச்சின் ரவீந்த்ரா (12 ரன்) மற்றும் ருதுராஜ் கெய்க்வாட் (26 ரன்) 8 ஓவருக்குள்ளே ஆட்டமிழந்தனர். அதன் பின்னர் அஜிங்க்யா ரஹானே (35 ரன்), ஷிவம் துபே (24 பந்துகளில் 45 ரன்), ஜதேஜா (31 ரன்) ஆகியோர் சிறப்பாக வீளையாடியும் அதிரடியாக ரன் சேர்க்க முடியவில்லை.

ALSO READ:  நாடு திரும்புங்க; அமெரிக்க வாழ் இந்தியர்களுக்கு ஸோஹோ ஸ்ரீதர் வேம்புவின் மடல்!

சன்ரைசர்ஸ் அணியின் அனைத்து பந்துவீச்சாளர்களும் நன்றாக பந்துவீசினர். சென்னை அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கட் இழப்பிற்கு 165 ரன் எடுத்தது.

166 ரன் என்ற இலக்கை அடைய இரண்டாவதாக ஆட வந்த சன்ரைசர்ஸ் அணியின் தொடக்க வீரர் அபிஷேக் ஷர்மா அதிரடி ஆட்டம் ஆடினார். அவர் 12 பந்துகளில் 37 ரன் எடுத்து ஆட்டமிழந்தார். ட்ராவிஸ் ஹெட் (24 பந்துகளில் 31 ரன்), மர்க்ரம் (36 பந்துகளில் 50 ரன்) என அனைவரும் நன்றாக ஆடினர். இதனால் சன்ரைசர்ஸ் அணியின் ஸ்கோர் ரேட் சென்னை அணியின் ரன் ரேட்டைவிட எப்பொதும் அதிகமாகவே இருந்தது.

எனவே எந்தவிதப் பதற்றமும் இன்றி 18.1 ஓவர்களில் 4 விக்கட் இழப்பிற்கு 166 ரன் எடுத்து சன்ரைசர்ஸ் அணி வெற்றி பெற்றது. சன்ரைசர்ஸ் அணியின் கிளாசனும் சிக்ஸ் அடிக்கவில்லை; சென்னை அணியின் தோனியும் சிக்ஸ் அடிக்கவில்லை.

சன்ரைசர்ஸ் அணியின் அபிஷேக் ஷர்மா தன்னுடைய சிறப்பான பேட்டிங்கிற்காக ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார். நாளை ஜெய்ப்பூரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கும் இடையே ஆட்டம் நடைபெறும்.

ALSO READ:  தேர்தலில் வாக்களிக்க... சிறப்பு ரயில்கள் இயக்கம்; விவரம் இதோ!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 14 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

IND Vs ENG T20: தொடர் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி!

இதன் மூலம் இங்கிலாந்து அணி தொடரை 4-0 என்ற கணக்கில் வென்றது.

அன்புத் தம்பி அண்ணா மலைக்கு…

உயர்திரு. அண்ணாமலை அவர்களுக்கு, மனமுவந்த ஆசிகள். எனக்கு வயது 81. அந்த வயதின் உரிமையிலும் தைரியத்திலும் உங்களை வாழ்த்தி ஆசீர்வதிக்கிறேன்!

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

பஞ்சாங்கம் ஜூலை 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் ஜூலை 14 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

IND Vs ENG T20: தொடர் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி!

இதன் மூலம் இங்கிலாந்து அணி தொடரை 4-0 என்ற கணக்கில் வென்றது.

அன்புத் தம்பி அண்ணா மலைக்கு…

உயர்திரு. அண்ணாமலை அவர்களுக்கு, மனமுவந்த ஆசிகள். எனக்கு வயது 81. அந்த வயதின் உரிமையிலும் தைரியத்திலும் உங்களை வாழ்த்தி ஆசீர்வதிக்கிறேன்!

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

பஞ்சாங்கம் ஜூலை 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

Entertainment News

Popular Categories