January 19, 2025, 2:51 PM
27.8 C
Chennai

மூன்றாவது முறையாக… பிரதமராக பதவி ஏற்றார் நரேந்திர மோடி!

நரேந்திர மோடி, மூன்றாவது முறையாக ஜூன் 9 ஞாயிற்றுக் கிழமை இன்று பதவி ஏற்றுக் கொண்டார். அவருக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

மக்களவைத் தேர்தலில் பாஜக., தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 292 இடங்களில் வென்று, கூட்டணிக் கட்சிகள் ஆதரவுடன் ஆட்சியைத் தக்க வைத்துக் கொண்டது.

இதை அடுத்து, இன்று மாலை புதிய அமைச்சரவைக்கான பதவிப் பிரமாணம், தில்லி குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்றது. இந்த விழாவில் தொடர்ந்து முன்றாவது முறையாக இந்தியாவின் பிரதமராக நரேந்திர மோடி இன்று பதவியேற்றார். மிகச் சரியாக 7.25க்கு அவர் பதவி ஏற்பு உறுதிமொழியும் ரகசியக் காப்புப் பிரமாணமும் எடுத்துக் கொண்டு, கையெழுத்திட்டார்.

அவரைத் தொடர்ந்து ராஜ்நாத் சிங், அமித் ஷா, நிதின் கட்கரி, ஜே.பி.நட்டா, சிவராஜ் சிங் சவுகான், நிர்மலா சீதாராமன், ஜெய்சங்கர், மனோஹர் லால், தர்மேந்திர பிரதான், ஹெச்டி குமாரசாமி, ஜிதன் ராம் மாஞ்சி உள்பட பாஜக.,வினர் மற்றும் கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்தவர்கள் மத்திய அமைச்சர்களாக பதவி ஏற்றுக் கொண்டனர்.

அவர்களுக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் வெளிநாட்டு தலைவர்கள் உள்பட பாரதத்தின் முக்கியத் தலைவர்கள், கட்சியினர், பொதுமக்கள் என சுமார் 8000 பேர் கலந்து கொண்டுள்ளனர்.

ALSO READ:  IND Vs AUS Test: முதல் நாளிலேயே படபடவென சரிந்த விக்கெட்டுகள்!

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜன.19 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சபரிமலை படிபூஜை நிறைவு; ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு!

சபரிமலை ஐய்யப்பன் கோவிலில் தற்போது மண்டல, மகர விளக்கு பூஜை வழிபாடுகள் விழாக்கள் முடிந்து மகரம் மாதபூஜை வழிபாடுகள் ஐயப்பனுக்கு நடந்து வருகிறது

சபரிமலை பெருவழிப்பாதை மூடல்!

கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தையாய் நினைத்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தினமும் பயணித்து வந்த சபரிமலை பெருவழிப் பாதை நடை தற்போது மூடப்பட்டதால்

இன்று நெய் அபிஷேகம், நாளை தரிசனத்துடன் மகரவிளக்கு கால வழிபாடு நிறைவு!

பக்தர்கள் சுவாமி ஐயப்பனை தரிசனம் செய்யலாம் என்ற நிலையில், இன்று காலை நெய்யபிஷேகத்துக்காக பக்தர்கள் கூட்டம் மிக அதிகமாகவே இருந்தது

பஞ்சாங்கம் ஜன.18 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.