January 18, 2025, 6:58 AM
23.7 C
Chennai

ஆடி அமாவாசை : சதுரகிரியில் லட்சக் கணக்கில் பக்தர்கள் தரிசனம்!

#image_title

மதுரை விருதுநகர் மாவட்டங்களை இணைத்திருக்கும் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் அமைந்துள்ளது பிரசித்தி பெற்ற சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவில். கடல் மட்டத்திலிருந்து சுமார் 4500 அடி உயரத்தில் அமைந்துள்ள இக்கோயிலில் ஆடி அமாவாசை திருவிழா மிக முக்கிய திருவிழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்த கோவிலில் தற்பொழுதும் சித்தர்கள் வாழ்ந்து வழிபட்டு வருவதாக கூறப்படுவதால் இது சித்தர்களின் சொர்க பூமி என அழைக்கப்படுகிறது

தமிழகம் மட்டுமல்லாது இந்தியாவின் பல்வேறு பகுதியில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருவது வழக்கமாகும்.

இந்த ஆண்டு திருவிழாவை முன்னிட்டு ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் 5ஆம் தேதி வரை மொத்தம் ஐந்து நாட்களுக்கு பக்தர்கள் மலை ஏறி செல்ல அனுமதி வழங்கப்பட்டது.

இந்நிலையில் நேற்று ஆடி அமாவாசையை முன்னிட்டு விருதுநகர் , மதுரை ,சென்னை ,திருச்சி ,கோவை , நெல்லை, கன்னியாகுமரி உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும் அதிகாலை முதலிலே பக்தர்கள் கோவில் அடிவாரப் பகுதியில் குவிந்து மலையேறி சென்று சாமி தரிசனம் செய்தனர்.

ALSO READ:  திருப்பதி கோயில் பட்டு வஸ்திரம் சாற்றி ஸ்ரீவி., ஸ்ரீ ஆண்டாள் காட்சி!

விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெரோஸ் கான் அப்துல்லா தலைமையில் 3 கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள்,11 காவல் துணை கண்காணிப்பாளர்கள் ,25 காவல் ஆய்வாளர்கள்,சார்பு ஆய்வாளர்கள் உட்பட 1420 காவல்துறையினர் 24 மணி நேரமும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் குற்றச்சம்பங் வகளை கண்காணிக்க சிசிடிவி கேமராக்களும் பொருத்தப்பட்டு 24 மணி நேரமும் அடிவாரப் பகுதியில் காவல் கட்டுப்பாட்டு அறையும் செயல்படுத்தப்பட்டது.

தீயணைப்பு வீரர்களும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். சென்னையில் இருந்து 60 பேரிடர் மீட்பு படை வீரர்களும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

மலையில் எழுந்தருளிய சுந்தர மகாலிங்க சுவாமிக்கும் சந்தன மகாலிங்க சுவாமிக்கும் சுந்தரமூர்த்தி மற்றும் பிலாவடி கருப்பசாமி ஆகியோருக்கு அமாவாசை பூஜைகள் மாலை 6:00 மணி முதல் மறுநாள் அதிகாலை 4 மணி வரை தொடர்ந்து நடந்தது. பக்தர்கள் விடிய விடிய நீண்ட வரிசையில் பல மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர்.

ALSO READ:  தென்காசி மாவட்ட முருகன் கோயில்களில் நாளை சூரசம்ஹாரம்!

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜன.18 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

செகந்திராபாத் – கொல்லம் ரயில் மேலும் ஒரு சேவை நீட்டிப்பு!

முன்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. விரைவில் உங்கள் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யவும். தென்காசி, விருதுநகர் மாவட்ட பயணிகளுக்கு இந்த சேவை மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

ஹிந்துத்துவமே ஒரே தீர்வு!

ரஷ்யாவில் 15 தனி அடையாளங்கள், 15 தனி நாடுகளாக உருவாகின. ஆனால் இங்கோ வாய்ப்பு கிடைத்த போதிலும் 565 சமஸ்தானங்களும் ஒரே நாடாக ஆகின.

ஆன்மீகம் – வாழ்வின் நோக்கம்

வாழ்க்கையின் நோக்கம் என்ன ? இது மகத்தான கேள்வி. நீங்கள் விழிப்புணர்வுடனோ அல்லது தெரியாமலோ இதை கேட்டிருக்கலாம். நம் அனுபவத்தின் அடித்தளமாக இந்த கேள்வி உள்ளது.

பஞ்சாங்கம் ஜன.17 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை