April 23, 2025, 4:23 PM
34.3 C
Chennai

219வது நினைவு நாள்; தீரன் சின்னமலை சிலைக்கு அரசியல் கட்சியினர் மரியாதை!

#image_title

தீரன் சின்னமலை 219 வது நினைவு தினத்தை முன்னிட்டு அலங்காநல்லூரில் உள்ள அவரது சிலைக்கு வெங்கடேசன் எம்எல்ஏ., உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே கல்லணை ஊராட்சியில் உள்ள ஏ.எம்.எம். பள்ளி வளாகத்தில் சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலை 219வது நினைவு தினத்தையொட்டி அங்கு அமைந்துள்ள அவரது திருவுருவ சிலைக்கு கவுண்டர் மகாஜன சங்கம் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

சங்க தலைவர் விஜயன், செயலாளர் அழகப்பன் , பொருளாளர் சிதம்பரநாதன், ஆலோசகர்கள் சேகர், ஜெயராமன், உள்ளிட்ட நிர்வாகிகள்இதில் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து திமுக சார்பில் சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

ஒன்றிய செயலாளர்கள் தன்ராஜ், பரந்தாமன், அவைத்தலைவர் பாலசுப்பிரமணியன் பொதுக்குழு உறுப்பினர் முத்தையன், ஒன்றிய துணை சேர்மன் சங்கீத மணிமாறன், நகர செயலாளர்கள் ரகுபதி, மனோகரவேல் பாண்டியன், ஒன்றிய துணை செயலாளர் அருண் விளையாட்டு மேம்பாட்டு அணிய பிரதாப், சமூக ஆர்வலர் சங்கர் கணேஷ் மற்றும் திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

ALSO READ:  சாம்பியன்ஸ் ட்ராபி: நியூஸி.,யை வென்று அரையிறுதியில் ஆஸி.,யை சந்திக்கும் இந்திய அணி!

தமிழ்நாடு கொங்கு இளைஞர்கள் பேரவை சார்பாக அலங்காநல்லூர் பேருந்து நிலையத்தில் உள்ள நினைவு தூனில் வைக்கப்பட்டிருந்த தீரன் சின்னமலை உருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். தொடர்ந்து தீரன் சின்னமலை சிலைக்கு மாவட்ட தலைவர் பார்த்திபன், செயலாளர் தயாளன், இளைஞரணி செயலாளர் பாலகிருஷ்ணன், மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.

பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் தெற்கு மாவட்ட தலைவர் செந்தில்குமார் தலைமையில் மாநில பொருளாளர் திலகபாமா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதில் மாநகர் மாவட்ட செயலாளர் சண்முகநாதன், கிழக்கு மாவட்ட செயலாளர் அழகர்சாமி, கிழக்கு மாவட்ட தலைவர் குரு பாலமுருகன், மாவட்ட செயலாளர் ராஜா, ஒன்றிய தலைவர் விஜயகுமார், உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

நாம் தமிழர் கட்சி சார்பில் மாநில கொள்கை பரப்புச் செயலாளர் அருண் ஜெயசீலன், மதுரை மேற்கு மண்டல செயலாளர் சிவானந்தம், மதுரை மண்டல பொறுப்பாளர்கள் ஹக்கிம், திருநாவுக்கரசு, சோழவந்தான் தொகுதி தலைவர் சங்கிலி முருகன், தொகுதி செயலாளர் சக்கரபாணி, பொருளாளர் சதீஷ், நிர்வாகிகள் மயில்வாகனம், ராணுவ பிரிவு தனபால் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு சிலைக்கு மாலை அணிவித்து வீர வணக்க அஞ்சலி செலுத்தினர். முக்குலத்தோர் உறவின்முறை சங்க நிர்வாகிகள் சார்பாக சார்லஸ் ,செந்தில்குமார் ஆதி முத்துக்குமார் உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்

ALSO READ:  பிரதமர் மோடியால், ராம நவமியில் திறக்கப்படும் ராமேஸ்வரம் பாலம்!

மக்கள் நீதி மய்யம் கட்சியின் சார்பில் மண்டல செயலாளர் அழகர், சோழவந்தான் மாவட்டச் செயலாளர் மெடிக்கல் ரமேஷ் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதில் ஒன்றிய செயலாளர்கள் யோகநாதன், அழகாபுரி ரவி, பேரூர் செயலாளர் செந்தில் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

பாரதிய ஜனதா கட்சி சார்பில் புறநகர் மாவட்ட தலைவர் ராஜசிம்மன் உள்ளிட்ட பாஜக நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

பாலமேடு கவுண்டர்கள் உறவின்முறை சங்கம் சார்பாக பேரூராட்சி துணைத் தலைவர் ராமராஜ் தலைமையில் சங்க நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர் .

15 பி மேட்டுப்பட்டி கிராம கவுண்டர்கள் உறவின்முறை சங்கம் சார்பாக நூற்றுக்கும் மேற்பட்டோர் பால் குடம் எடுத்து வநது தீரன் சின்னமலை சிலைக்கு பால் அபிஷேகம் செய்து அஞ்சலி செலுத்தினர். இந்த நிகழ்ச்சியில் பல்வேறு அரசியல் கட்சியினர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.

ALSO READ:  திமுக., கொடி கட்டிய காரில் வந்து பெண்களைத் துரத்தி மிரட்டிய நபர்கள்; சென்னையில் பயங்கரம்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

TN Raj bhavan condemns intentional media reports

Some misleading media reports regarding the forthcoming annual conference of leaders of higher educational institutions including Central,

மாநில அரசுடன் சிண்டு முடிக்கும் வேலையை ஊடகங்கள் செய்வது தவறு!

இத்தகைய செய்திகள் முற்றிலும் உண்மைக்கு புறம்பானவை மற்றும் தவறான எண்ணத்தை உருவாக்குவதாக உள்ளது.

இயற்கை விவசாயம் மூலம் அதிக மகசூல் சாதனை படைத்த விவசாயிகளுக்கு விருதுகள்!

நெல் வயலில் இனக்கவர்ச்சி பொறி செயல்விளக்கம்!

தேசத்தின் துக்க நாள்: இந்து முன்னணி கண்டனம்!

மோட்ச தீபம் ஏற்றி பலிதானிகள் ஆன்மாவிற்கு வேண்டுதல் வைப்போம். அத்துடன் பயங்கரவாதம் முற்றிலும் ஒழித்திட சபதம் ஏற்க இந்து முன்னணி சார்பில் வேண்டுகோள் விடுக்கிறோம்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 23 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Topics

TN Raj bhavan condemns intentional media reports

Some misleading media reports regarding the forthcoming annual conference of leaders of higher educational institutions including Central,

மாநில அரசுடன் சிண்டு முடிக்கும் வேலையை ஊடகங்கள் செய்வது தவறு!

இத்தகைய செய்திகள் முற்றிலும் உண்மைக்கு புறம்பானவை மற்றும் தவறான எண்ணத்தை உருவாக்குவதாக உள்ளது.

தேசத்தின் துக்க நாள்: இந்து முன்னணி கண்டனம்!

மோட்ச தீபம் ஏற்றி பலிதானிகள் ஆன்மாவிற்கு வேண்டுதல் வைப்போம். அத்துடன் பயங்கரவாதம் முற்றிலும் ஒழித்திட சபதம் ஏற்க இந்து முன்னணி சார்பில் வேண்டுகோள் விடுக்கிறோம்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 23 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

IPL 2025: டெல்லி அணியின் திரில்‌ வெற்றி

ஐ.பி.எல் 2025 - – லக்னோ vs டெல்லி கேபிடல்ஸ் –...

காஷ்மீரில் இஸ்லாமிய பயங்கரவாதிகள் சுட்டதில் சுற்றுலா பயணியர் 26 பேர் உயிரிழப்பு!

பாரத பிரதமர் நரேந்திர மோடி தனது சவுதி சுற்று பயணத்தை பாதியிலேயே முடித்து நாடு திரும்புகிறார். இன்றிரவு இரண்டு மணிக்கு டில்லி திரும்புகிறார்...

மக்கள் உடல்நலத்துடன் விளையாடி, ஹிந்து விரோத மனப்பான்மையை வெளிப்படுத்தும் அமைச்சர் நேரு!

அதுவே கோவில் விழாக்களில் வேற்று மதத்தினர் குளிர்பானங்கள் வழங்குகின்றனர். ஆனால் அதனை மத நல்லிணக்கம் என விளம்பரப் படுத்தி பாராட்டுகிறது இதே அரசு.

Entertainment News

Popular Categories