January 17, 2025, 7:51 AM
24 C
Chennai

மக்களுடன் முதல்வர் வெறும் கண் துடைப்பு திட்டம்; அலைக்கழிக்கப் பட்ட மக்கள் குற்றச்சாட்டு!

#image_title
  • மதுரை அலங்காநல்லூர் அருகே கண் துடைப்பிற்காக நடத்தப்பட்ட மக்களுடன் முதல்வர் திட்டம்
  • முகாமில் துறை சார்ந்த அதிகாரிகள் வராததால், மக்கள் மற்றும் விவசாயிகள் அதிருப்தி
  • மனுக்களை எங்கே கொடுப்பது என, தெரியாமல் அங்கும் இங்குமாக அலைந்த பொதுமக்கள் !

சோழவந்தான்: மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே, கொண்டையம்பட்டி கிராமத்தில், மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் நடைபெற்றது .

இத்திட்டத்தில், கொண்டையம்பட்டி, அழகாபுரி , சின்ன இலந்தைகுளம், கல்வேலிபட்டி மேல சின்னனம்பட்டி, அய்யங்கோட்டை ஆகிய ஊராட்சிகளில் இருந்து பொதுமக்கள் கலந்து கொண்டனர் .

இந்த முகாமின் நோக்கமானது அரசின் பல்வேறு துறை சார்ந்த அதிகாரிகள் நேரில் வந்து பொதுமக்களிடம் மனுக்களை பெற்று அந்த மனுக்களுக்காக உடனடி தீர்வு காண்பதே மக்களுடன் முதல்வர் திட்டம் ஆகும்.

ஆனால், மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே கொண்டையம்பட்டி கிராமத்தில், இன்று நடைபெற்ற முகாமில் , பல அரசு துறைகளில் அதிகாரிகள் வராததால், பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மனுக்களை கையில் வைத்துக் கொண்டு அங்கும் இங்குமாக அலைந்தது பரிதாபமாக இருந்தது.

மனுக்களை வாங்க உரிய அதிகாரிகள் இல்லாததால், நேரம் ஆக ஆக மனுக்கள் கொடுக்க வந்த பொதுமக்கள் கூட்டம் அதிகரித்ததால் குழந்தையுடன் வந்த பெண்கள் மிகவும் அவதிப்பட்டனர்.

ALSO READ:  பொதுவெளியில் இறைச்சிக் கழிவுகளைக் கொட்டிய கடை உரிமையாளர்களுக்கு அபராதம்!

குறிப்பாக, இந்த முகாமில், பொதுப்பணித்துறை , மாசுக்
கட்டுப்பாட்டு வாரியம், கனிமவளத்துறை போன் துறை சார்ந்த அதிகாரிகள் வராததால், அது சம்பந்தப்பட்ட பிரச்சனைகளுக்காண மனுவை எழுதி கையில் வைத்துக் கொண்டிருக்கிறோம்.

இதை யாரிடம் வழங்க வேண்டும் என்று தெரியாமல், மனுவுடன் காத்துக் கொண்டிருக்கிறோம் என, பொதுமக்களும் விவசாயிகளும் கூறினர்.

மக்களை தேடி மருத்துவம் எல்லாம் தேடி கல்வி போன்ற அரசின் எந்த ஒரு திட்டங்களும் பொதுமக்களுக்கு முறையாக பயனளிக்காத நிலையில், மக்களுடன் முதல்வர் திட்டமும் வெறும் கண்துடைப்புக்காக நடத்தப்பட்டது, மிகுந்த வேதனையையும், எரிச்சலையும் உண்டாக்கியதாக, அங்கிருந்த பொதுமக்கள் பேசிச் சென்றனர்.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜன.17 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

கோயிலுக்கு பாதை விட மறுக்கும் தனியார் நிறுவனம்; அரசு தலையிட கோரிக்கை!

மதுரை சோளங்குருணியில் 500 ஆண்டு பழமை வாய்ந்த கோவிலுக்கு பாதை விட மறுக்கும் தனியார் நிறுவனம் தொடர்பில் பிரச்னை ஏற்பட்டது.

அதானியைக் குறிவைத்த அமெரிக்க ஹிண்டன்பெர்க் – இழுத்து மூடல்!

பாரதத்தை - குறிப்பாக அதானியை - குறி வைத்த ஹிண்டன்பர்க் பயல் கடையை மூடி ஓட்டம்.... டிரம்ப் வருவதற்குள் டீப் ஸ்டேட் கூட்டங்கள் ஓடத் துவங்கியிருக்கின்றன.

பிப்.9ல் நெட்டாங்கோடு பத்ரகாளி அம்மன் கோயில் பொங்கல் விழா பஜனாம்ருதம் போட்டிகள்!

கன்யாகுமரி மாவட்டம் நெட்டாங்கோடு அருள்மிகு பத்திரகாளி அம்மன் திருக்கோயில் பொங்கல் விழா-2025

பெரியாரைத் துணைக் கொள்! அரசியலில் புது அர்த்தங்கள்!

ஈ.வெ.ரா-வைத் திமுக ஆதரித்தால் என்ன, சீமான் கட்சி எதிர்த்தால் என்ன? இரண்டு கட்சிகளும் கோணலான அர்த்தத்தில் ஒளவையாரின் ஆத்திசூடி சொற்களை ஏற்கின்றன: பெரியாரைத் துணைக் கொள்!