January 25, 2025, 5:05 AM
24 C
Chennai

பாவார்ப்பணம்: குரு மாங்குடி துரைராஜ ஐயருக்கு கலை வடிவில் அஞ்சலி!

#image_title

பாவார்ப்பணம்: குரு மாங்குடி துரைராஜ ஐயர் அவர்களுக்கு கலை வடிவில் அஞ்சலி

குரு மாங்குடி துரைராஜ ஐயர் சித்தயடைந்த தினத்தில், அவரது சிஷ்யை குரு ரேவதி ராமசந்திரன் கடந்த 25 வருட காலமாக கலை வடிவமாக பாவார்ப்பணம் என்ற பெயரில் அஞ்சலி செலுத்தி வருகிறார்.

இதில் இளம் கலைஞர்களுக்கு வாய்ப்பு அளித்தும் , மூத்த கலைஞர்களை கெளரவித்தும் வருகிறார்கள். அந்த வகையில் இந்த வருடம் ஆகஸ்ட் 28 மற்றும் 29 ஆம் தேதிகளில் சென்னை மயிலாப்பூர் ரசிக ரஞ்ஜனி சபாவில் இரண்டு நாள் விழாவாக இந்த பவார்ப்பணம் நிகழ்ச்சி கொண்டாடப்பட்டது.

முதல் நாளான 28 ஆம் தேதி குரு ரேவதி ராமசந்திரனின் மகள் மற்றும் சிஷ்யையான மனஸ்வினி நாட்டியக் கோர்வை செய்தார். லால்குடி கிருஷ்ணன் அவர்கள் இசையமைப்பில் ப்ளுதி என்ற தலைப்பில் அமைந்திருந்த மிக நேர்த்தியான நாட்டிய நாடகம் ரசிகர்களின் உள்ளத்தை கொள்ளை கொண்டது.

தொடர்நது கலா சாதனாலயா மாணவிகளின் ஆயர் குல திலகம் நாட்டிய நாடகம் கண்ணணின் பெருமையை வெளிகாட்டும் விதமாக அமைந்தது.

ALSO READ:  தீபாவளி அன்று ‘கங்கா ஸ்நானம் ஆச்சா’ என ஏன் கேட்கிறோம்?

நிகழ்ச்சியில் முன்னணிக் கலைஞர் திருமதி பத்மா சுப்பிரமணியன், நல்லி குப்புசாமி செட்டியார், பாரதி வித்யாபவன் இராமசாமி, க்ளீவ்லேன்ட் சுந்தரம், நாடக நடிகர் காத்தாடி ராமமூர்த்தி ஆகியோருடன் மேலும் பல நடனக் கலைஞர்களும் கலந்து கொண்டனர்.

விழா நிகழ்ச்சிகளை, கலா சாதனாலயா மாணவிகளும் பெற்றோர்களும் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜன.25 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டங்க்ஸ்டன் திட்டத்தை வரவிடாமல் செய்ததில்… யாருக்கு வெற்றி?!

டங்க்ஸ்டன் திட்டத்தை வரவிடாமல் தடுத்ததில் யாருக்கு முழு வெற்றி போகவேண்டும் என்று பெரும் கூத்து நடந்துகொண்டிருக்கிறது.

திருப்பரங்குன்றத்தில் பாஜக., எம்.எல்.ஏ., இந்து முன்னணி தலைவர் ஆய்வு!

இந்துமுன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம், பாஜக சட்டமன்ற குழு தலைவர் திருநெல்வேலி சட்டமன்ற உறுப்பினர் நயினார்நாகேந்திரன் ஆகியோருடன்

தினசரி பெரியவா தியானம்: நூல் பெற..!

ரா. கணபதி அண்ணா, மகா பெரியவாளின் கருத்துகளைத் தொகுத்து அவற்றை தெய்வத்தின் குரல் என்று ஏழு பகுதிகள் அடங்கிய நூல் தொகுப்பாக வெளியிட்டுள்ளதை அனைவரும் அறிவோம்.

சிவபதம் – ‘சிதம்பரம் நடராஜ கீர்த்தனைகள்’ நூல் வெளியீடு!

ஆக, ஆக… இப்பணி, தில்லையம்பலத்தான் திருவடிக்கு, இந்த ஸ்ரீராமானுஜ தாஸன் செய்த சிறுதொண்டு!