பாவார்ப்பணம்: குரு மாங்குடி துரைராஜ ஐயருக்கு கலை வடிவில் அஞ்சலி!

Published:

bhavarppanam - 2026
#image_title

பாவார்ப்பணம்: குரு மாங்குடி துரைராஜ ஐயர் அவர்களுக்கு கலை வடிவில் அஞ்சலி

குரு மாங்குடி துரைராஜ ஐயர் சித்தயடைந்த தினத்தில், அவரது சிஷ்யை குரு ரேவதி ராமசந்திரன் கடந்த 25 வருட காலமாக கலை வடிவமாக பாவார்ப்பணம் என்ற பெயரில் அஞ்சலி செலுத்தி வருகிறார்.

இதில் இளம் கலைஞர்களுக்கு வாய்ப்பு அளித்தும் , மூத்த கலைஞர்களை கெளரவித்தும் வருகிறார்கள். அந்த வகையில் இந்த வருடம் ஆகஸ்ட் 28 மற்றும் 29 ஆம் தேதிகளில் சென்னை மயிலாப்பூர் ரசிக ரஞ்ஜனி சபாவில் இரண்டு நாள் விழாவாக இந்த பவார்ப்பணம் நிகழ்ச்சி கொண்டாடப்பட்டது.

முதல் நாளான 28 ஆம் தேதி குரு ரேவதி ராமசந்திரனின் மகள் மற்றும் சிஷ்யையான மனஸ்வினி நாட்டியக் கோர்வை செய்தார். லால்குடி கிருஷ்ணன் அவர்கள் இசையமைப்பில் ப்ளுதி என்ற தலைப்பில் அமைந்திருந்த மிக நேர்த்தியான நாட்டிய நாடகம் ரசிகர்களின் உள்ளத்தை கொள்ளை கொண்டது.

தொடர்நது கலா சாதனாலயா மாணவிகளின் ஆயர் குல திலகம் நாட்டிய நாடகம் கண்ணணின் பெருமையை வெளிகாட்டும் விதமாக அமைந்தது.

ALSO READ:  நூல் அறிமுகம்: The Significance of Sri Aurobindo Ashram in the Evolution of Humanity

நிகழ்ச்சியில் முன்னணிக் கலைஞர் திருமதி பத்மா சுப்பிரமணியன், நல்லி குப்புசாமி செட்டியார், பாரதி வித்யாபவன் இராமசாமி, க்ளீவ்லேன்ட் சுந்தரம், நாடக நடிகர் காத்தாடி ராமமூர்த்தி ஆகியோருடன் மேலும் பல நடனக் கலைஞர்களும் கலந்து கொண்டனர்.

விழா நிகழ்ச்சிகளை, கலா சாதனாலயா மாணவிகளும் பெற்றோர்களும் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.

Related articles

Recent articles

spot_img