December 5, 2025, 1:46 PM
26.9 C
Chennai

செங்கோட்டை பகுதியில் கிருஷ்ண ஜயந்தி விழா!

DSC 0200 - 2025

செங்கோட்டை பகுதியில் கிருஷ்ண ஜயந்தி விழா கோலாகலம்

செங்கோட்டை ஆரியநல்லுார் தெரு யாதவர் சமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட முப்புடாதி அம்மன் கோவில் வளாகத்தில் வைத்து ஆண்டுதோறும் கிருஷ்ணஜெயந்தி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருவது வழக்கம்

இந்தாண்டு கிருஷ்ணஜெயந்தி விழாவில் ஆக-25ஆம் தேதி மாலை 6மணிக்கு இளைஞர்களுக்கான வழுக்குமரம் ஏறும் போட்டி நடந்தது. போட்டியில் திரளான இளைஞர்கள் கலந்து கொண்டனா். பின்னா் முப்புடாதி அம்மன் மற்றும் பரிவார தேவதைகளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் தீபாராதனை நடத்தப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

திங்கட்கிழமை மாலை 3மணிக்கு சமுதாய நிர்வாகிகள் பெரியோர்கள் கலந்து கொண்டு சமுதாய கொடியேற்று நிகழ்ச்சியும் அதனைதொடா்ந்து சிறுவர்-சிறுமியர்களுக்கான பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு கலந்து கொண்ட வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

மாலை 5மணிக்கு சிவகாசி-நாராணபுரம் ஸ்ரீ-சக்கரத்தாழ்வார் கோவில் கோலாட்ட குழுவினா் பஜனையுடன் பகவான் ஸ்ரீகிருஷ்ணா் அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் எழுந்தருளி செண்டை மேளம் வாணவேடிக்கையுடன் நகரின் முக்கிய வீதிகள் வழியாக வீதிஉலா நடந்தது.

இரவு 9மணிக்கு மணிக்கு சிறப்பு பூஜை நடத்தப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. விழாவை விழா கமிட்டியார், சமுதாய நிர்வாகிகள், நிர்வாகக்குழு உறுப்பினா்கள், செயற்குழு உறுப்பினா்கள், இளைஞரணி நிர்வாகிகள் உள்பட பலா் சிறப்பாக செய்திருந்தனா்.

DSC 0156 - 2025

செங்கோட்டை மேலுார் பகுதியில் கிருஷ்ண ஜயந்தி விழா

சிறுவா்-சிறுமியா் ராதை,கிருஷ்ணர் வேடமணிந்து ஊர்வலம்.
செங்கோட்டை மேலுார் சேனைத்தலைவா் சமுதாயம் சார்பில் ஆண்டுதோறும் கிருஷ்ணஜெயந்தி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருவது வழக்கம்

இந்தாண்டு விழாவில் அருள்மிகு சேனைகுலவிநாயகா் கோவிலில் சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடந்தது. பின்னா் கோவில் முன்பிலிருந்து கிருஷ்ணர்-ராதை வேடமணிந்த சிறுவர்-சிறுமியா்கள் நகரின் முக்கிய வீதிகள் வழியாக கோவிந்தா கோஷத்துடன் ஊர்வலமாக அழைத்துவரப்பட்டு சமுதாய நலக்கூடத்தில் நிறைவு பெற்றது.

அதனை தொடா்ந்து கிருஷ்ணா்-ராதை வேடமணிந்த சிறுவா், சிறுமியா்களுக்கு சிறப்பு பரிசுகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு சமுதாய நாட்டாமை கணபதி தலைமைதாங்கினார் செயலாளார் பிச்சுமணி(எ)சாமி, நகர்மன்ற உறுப்பினா் இந்துமதிசக்திவேல் ஆகியோர் முன்னிலைவகித்தனா். பொருளாளா் சக்திவேல் அனைவரையும் வரவேற்று பேசினார்.

அதனை தொடர்ந்து தமிழாசிரியா் பிச்சம்மாள்இசக்கிமுத்து ஆன்மீக சொற்பொழிவு ஆற்றினார். பின்னா் சிறுவர்-சிறுமியா்களுக்கு சமுதாய பெரியோர்கள், நிர்வாகிகள் பரிசுகளை வழங்கி வாழ்த்தினா். நிகழ்ச்சியில் செயற்குழு உறுப்பினா்கள் குருசாமி(எ)செல்வம், இரணியவேல், ஐயப்பன், ஆதிமூலம், சி.ஆதிமூலம் உள்பட பலா் கலந்து கொண்டனா். முடிவில் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது

IMG 20240826 210421 - 2025

செங்கோட்டை வடக்கத்தி அம்மன் கோவில் தெருவில் கிருஷ்ண ஜயந்தி விழா

செங்கோட்டை கோனார் தெருவில் யாதவா் சமுதாயம் சார்பில் வடக்கத்தி அம்மன் கோவில் முன்பு வைத்து ஆண்டுதோறும் கிருஷ்ணஜெயந்தி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருவது வழக்கம் இந்தாண்டு விழாவில் வடக்கத்தி அம்மன் மற்றும் பரிவார தேவதைகளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடந்தது. விழாவிற்கு சமுதாய நாட்டாமை தலைமைதாங்கினார். செயலாளா், பொருளாளா் மற்றும் நிர்வாகிகள் ஆகியோர் முன்னிலைவகித்தனா். .

அதனைதொடா்ந்து சிறுவா்-சிறுமியா்களுக்கான பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு கலந்து கொண்ட மற்றும் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. பின்னா் சிறுவர்-சிறுமியாகள் கிருஷ்ணர்-ராதை வேடமணிந்து நகரின் முக்கிய வீதிகள் வழியாக கோவிந்தா கோஷத்துடன் ஊர்வலமாக அழைத்து வரப்பட்டு கோவிலை வந்தடைந்தது.

பின்னா் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை விழாக்கமிட்டியா், சமுதாய பெரியோர், நிர்வாகிகள், இளைஞரணி நிர்வாகிகள் உள்பட பலா் சிறப்பாக செய்திருந்தனா்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories