செங்கோட்டை கிருஷ்ணன் கோயிலில் கோகுலாஷ்டமி விழா கோலாகலம்!

srikrishnan alankaram sengottai - 2026
#image_title

தென்காசி மாவட்டம் செங்கோட்டை ஆற்றங்கரைத் தெருவில் வீற்றிருக்கும் ஸ்ரீநவநீதகிருஷ்ண ஸ்வாமி திருக்கோயிலில் நடைபெற்று வரும் கோகுலாஷ்டமி விழாவில் நேற்றூ ஸ்ரீ கிருஷ்ண ஜனனம் சிறப்பு பூஜைகள் பக்தர்கள் பெருமளவில் கலந்து கொள்ள கோலாகலமாக நடைபெற்றது.

தென்காசி மாவட்டம் செங்கோட்டையில் உள்ள ஆற்றங்கரைத் தெரு நவநீத கிருஷ்ண ஸ்வாமி கோயிலில் கோகுலாஷ்டமி விழா வருடந்தோறும் சிறப்பாக நடைபெறுவது வழக்கம்.

அதன்படி இந்த ஆண்டும் ஆக.18ம் தேதி தொடங்கி ஆக.28 வரை கோகுலாஷ்டமி விழா சிறப்பாக திட்டமிடப்பட்டிருந்தது. இந்த நாட்களில் தினமும் காலை 8 மணிக்கு கும்ப பூஜை, புருஷ சூக்த ஜபம், ஹோமம், வேதபாராயணம் ஆகியவற்றுடன் ஸ்ரீகிருஷ்ணனுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை ஆகியவை நடந்தன.

srikrishna sengottai 1 - 2026
#image_title

மாலை நேரங்களில் விஷ்ணு சஹஸ்ரநாம பாராயணம், நாம சங்கீர்த்தனங்கள் நடைபெற்றன. செங்கோட்டையைச் சேர்ந்த ஸ்ரீராமகிருஷ்ணா பஜனை மண்டலி, ஸ்ரீ ஆண்டாள் இசைக்குழு, ஸ்ரீ தர்மஸம்வர்த்தினி பஜனை மண்டலி, ஸ்ரீ நவநீதகிருஷ்ணன் பஜனை மண்டலி, உதிரிப்பூக்கள் குழுவினர்களின் நாம சங்கீர்த்தனங்கள், கங்கா நாராயணன் குழுவினரின் ஸ்ரீவேங்கடேஸ்வர அந்தாதி, நவநீதகிருஷ்ணன் பக்திப் பாடல்கள் ஆகியவை பாடப்பெற்றன.

krishnan alankara - 2026
#image_title

மேலும் செங்கோட்டை உபயபாரதீ கன்யாகுருகுல சிறுமியர் சுலோகங்கள், பாடல்கள் பாடி நிகழ்ச்சியை சிறப்பு செய்தார்கள்.

ஆக.25 ஞாயிறு அன்று, சென்னையில் இருந்து வந்திருந்த செங்கோட்டை சகோதரிகள் குமாரி கல்யாணி, குமாரி கோகிலா ஆகியோரின் கர்நாடக இசை நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.

gokulashtami in sengottai - 2026
#image_title

கோகுலாஷ்டமி தினமான திங்கள் அன்று சிறுவர் சிறுமியரின் கலை நிகழ்ச்சிகள், விளையாட்டுப் போட்டிகள், வழுக்கு மரம் ஏறுதல், உறியடி என நிகழ்ச்சிகள் களை கட்டின. வெற்றி பெற்ற சிறுவர்களுக்கும், பங்கேற்றவர்களுக்கும் பரிசுகள் கோவில் விழா கமிட்டியாரால் வழங்கப்பட்டன.

மாலை 7 மணிக்கு விசாலம் ராமசுப்பிரமணியன் குழுவினரின் பரத நாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது.

கோகுலாஷ்டமி உத்ஸவத்தை முன்னிட்டு தினமும் மாலை 7 மணிக்கு பிரம்மஸ்ரீ யக்ஞராம சோமயாஜியின் ஸ்ரீமத் பாகவத உபந்யாஸம் நடைபெற்றது. கோகுலாஷ்டமி அன்று ஸ்ரீகிருஷ்ண ஜனனம் உபந்யாசத்தைத் தொடர்ந்து கண்ணன் பிறப்பு சிறப்பு தீபாராதனையும் அன்பர்களுக்கு அப்பம், அவல், சுண்டல் பிரசாதம் வழங்கலும் நடைபெற்றன.

sengottai upanyasam sri krishnan temple - 2026
#image_title

உத்ஸவ தினங்களில் ஸ்ரீ நவநீத கிருஷ்ணர் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அலங்காரத்தில் காட்சியளித்தார். கோகுலாஷ்டமி தினத்தன்று ஸ்ரீகிருஷ்ணருக்கு காலை சிறப்பு அபிஷேகத்தைத் தொடர்ந்து முழு வெண்ணெய்க் காப்பு அலங்காரம் செய்விக்கப்பட்டது. மாலை ஸ்ரீ கிருஷ்ண ஜனனத்தை அடுத்து முழு சந்தனக்காப்பு அலங்காரத்தில் கிருஷ்ணர் காட்சி அளித்தார்.

இன்று மாலை ஸ்ரீகிருஷ்ணர் திருவீதியுலா வர, நாளை புஷ்பாஞ்சலியுடன் இந்த கோகுலாஷ்டமி நிகழ்ச்சிகள் நிறைவு பெறுகின்றன. நிறைவு நாளில் நெல்லை பிரம்மஸ்ரீ பாலகுருநாத பாகவதரின் ஹரிநாம சங்கீர்த்தன நிகழ்ச்சி நடைபெறுகிறது.

கோகுலாஷ்டமி உத்ஸவத்துக்கான ஏற்பாடுகளை விழா கமிட்டியின் சார்பில் மோகன் என்ற எஸ்.முத்துகிருஷ்ணன், என். அனந்தபத்மநாபன் ஆகியோர் சிறப்பாக செய்திருந்தார்கள்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories