செங்கோட்டை: காங்கிரஸ் சார்பில் மகாத்மா காந்தியின் 156வது பிறந்தநாள் விழா!

Published:

DSC 0072 scaled e1727879807712 - 2026

செங்கோட்டையில் நகர காங்கிரஸ் கட்சியின் சார்பில் மகாத்மாகாந்தியின் 156வது பிறந்தநாள் விழா.

செங்கோட்டை மேலபஜார் வாகைமரத்திடலில் அமைந்துள்ள காந்தி சிலை முன்பு வைத்து நகர காங்கிரஸ் கட்சியின் சார்பில் தேசபிதா மகாத்மா காந்தியின் 156வது பிறந்நாள் மற்றும் முன்னாள் தமிழக முதல்வா் கர்மவீரர் காமராஜரின் 49ஆம் ஆண்டு நினைவு தினம் நிகழ்ச்சி நடந்தது.

நிகழ்ச்சிக்கு நகரத்ததலைவா் இராமர் தலைமைதாங்கினார். மாவட்ட செயற்குழு உறுப்பினா் செண்பகம், நகர்மன்ற உறுப்பினா் முருகையா, நகரப்பொதுச்செயலாளா்கள் சுடலைமுத்து, இசக்கியப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனா். மாவட்ட தகவல் தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடகத்துறை பொதுச்செயலாளா் ராஜீவ்காந்தி அனைவரையும் வரவேற்று பேசினார்.

அதனை தொடா்ந்து மகாத்மா காந்தியின் முழுஉருவ சிலை மற்றும் காமராஜா் திருவுருவ படத்திற்கு நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செய்தனா். நிகழ்ச்சியில் நகரத் துணைத் தலைவா்கள் காதர்அலி, மாரியப்பன், முன்னாள் நகர்மன்ற துணைத் தலைவா் ஆதிமூலம் செயலாளா்கள் நடராஜன், சுடலையாண்டி, நகர எஸ்சிஎடி பிரிவு தலைவா்
சிவன், துணைத்தலைவா் ரவி, நகர சிறுபான்மை பிரிவு தலைவா் முகம்மது சித்திக், வார்டு நிர்வாகி முகம்மதுசர்புதின், ஷேக்மைதீன், வாவாகனி, திருமலைக்குமார், ஜேம்ஸ், ஆதினம் உள்பட பலா் கலந்து கொண்டனா். முடிவில் நகரப்பொருளாளா் சங்கரலிங்கம் நன்றி கூறினார்

ALSO READ:  முழுமையான நன்மைக்கு சனாதன தர்மம்!

Related articles

Recent articles

spot_img