தற்போது… பாரதம் முழுமையாக முன்னேறிய தேசம்!

old and new parliament building - 2026
#image_title

தெலுங்கில் – பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா
தமிழில் – ராஜி ரகுநாதன்

எங்கு பார்த்தாலும் வகுப்புவாத போராட்டங்கள், வாக்குவாதங்கள், மோதல்கள், தமக்காக தனிப்பட்ட ஒதுக்கீடுகள்… போன்ற விஷயங்களே செய்தியாகவும், சர்ச்சையாகவும் பரவி வருகின்றன. ஆனால், நடந்துவரும் முன்னேற்றத்தையும் நல்லவற்றையும் அடையாளம் கண்டு பிரச்சாரம் செய்யும் உள்ளத் தூய்மை கொண்ட ஊடகத்துறையும், அரசியல் சாதுர்யமும் இன்று மிக முக்கியமான தேவை. இந்திய குடிமக்களும் வெளிநாட்டவரும் நம் தேசத்தில் நிகழும் மிக ஆச்சர்யமான முன்னேற்றங்களை அறிய வேண்டும். அறியச் செய்ய வேண்டும்.

அந்த வரிசையில் நம்முடையதேயான தேசியத்தை ஐயத்திற்கு இடமின்றி ஸ்தாபிக்க வேண்டியது முக்கியம். வந்தேறிகளின் ஆட்சி முடிந்துபோன பின்னும் அவர்களையே பின்பற்றி, அவர்களின் அடையாளத்தையே பெயர்களிலும் நடைமுறைகளிலும் காலச்சாரத்திலும் நிலைநாட்டி வருகிறோம்.

சுதந்திரம் கிடைத்து எழுபது ஆண்டுகள் தாண்டி எண்பதாவது தசாப்தத்தில் நுழைந்தாலும், தேசியம் என்ற எண்ணத்தை வலிமையாக நிலைநிறுத்துவதில் இத்தனை காலமாக சரியான முயற்சி நடைபெறவில்லை.

இத்தகு வெளிநாட்டு அடிமைத்தனமே தேசிய உணர்வை மேலெழ விடாமல் தடுத்து, யுக யுகங்களாக உள்ள நம் வரலாற்றையும் பாரம்பரியத்தையும் மறக்கச் செய்கிறது. வேறெந்த தேசத்திற்கும் இல்லத வரலாறு, விஞ்ஞானம், ராஜநீதி போன்றவை பண்டைய காலம் முதலே பெற்றுள்ள பாரதம், தனக்கு எதுவுமே இல்லாதது போல, மேலைநாட்டு ஆட்சியாளரின் முறைகளையே அமல்படுத்திவருவது சுயமரியாதை இன்மையைக் காட்டுகிறது.

ALSO READ:  வடகிழக்கில் ஹிந்து தேசியம் : அஸ்ஸாம்

சுமார் நூறாண்டு காலம் நடந்த சுதந்திர போராட்டங்களில் தேசிய உணர்வு,
சுயமரியாதை போன்றவையே முன்னிலை வகித்தன. பாரத தேசத்தை பாரதியர்களே ஆளுவது மட்டுமல்ல, பாரதியம் ஆள வேண்டும் என்ற உணர்வு கொண்டிருந்த போராட்ட வீரர்களும், மேதாவிகளும் அன்று அதிக எண்ணிக்கையில் இருந்தார்கள்.

ஆனால் சுதந்திம் கிடைத்தபின், மேலைநாட்டு அபிமானிகளும், மேலை நாட்டை வழிபடுபவர்களும் முக்கிய ஆட்சிப் பொறுப்பை ஏற்றார்கள். மேலைநாட்டு வழிமுறைகளையும், தேசத்தை துண்டாக்கிய ஆக்கிரமிப்பாளர்களையும் கௌரவித்து அவர்களின் வழிமுறையிலேயே ஆட்சி அமைப்பை ஏற்படுத்தினார்கள். ‘இந்த தேசம் என்றுமே சுதந்திர நாடாக முடியாது’ என்ற எண்ணத்தை குடிமக்களின் மனதில் விதைத்தார்கள்.

உலகனைத்தும் தொழில்நுட்ப விஞ்ஞான வளர்ச்சியில் முன்னேறிக்
கொண்டிருந்த காலம் வந்த பின்னும், நம் தேசத்தில் தகுந்த மாற்றங்களைச்
செய்யவில்லை. ஆனால் தற்போது நிலைமை மாறியுள்ளது. ஒரு பத்தாண்டு காலத்திற்கு முன்பிருந்து தேசிய உணர்வும், தேசிய சிந்தனையும் பாரத தேசத்தை உலகிலேயே பிரத்தியேக இடத்தில் நிறுத்தி வருகிறது. தேசிய ஞானத்தாலும் வளங்களாலும் உலகமே வியக்கும் வண்ணம் முன்னேற்றத்தை அனைத்துத் துறைகளிலும் சாதித்து வருகிறோம்.

ALSO READ:  ‘மகளிருக்கும் தமிழருக்கும்’ கொடுத்தார் மோடி; கெடுத்தார் ஸ்டாலின்! 

ரயில்வே, தொழிற்சாலை, சாலை வசதி, மலைகளிலும் நீர்நிலைகளிலும் கூட சிறந்த போக்குவரத்து வசதிகள், சுயசார்பு, மீள்தன்மை போன்றவை வெற்றி கரமாக விஸ்வரூபமாக கண்ணெதிரில் காட்சியளிக்கின்றன. பாதுகாப்புத் துறையிலும் அதிநவீனமான வலுவான பரிணாமங்கள் நடந்து வருகின்றன.

இந்தப் பின்னணியில் சட்டம், நியாயம் போன்ற அம்சங்களிலும் தேசியமான வழிமுறைகள், நவீன மாற்றங்கள் ஆகியவற்றை எடுத்து வரும் விதமாக முயற்சி மேற்கொள்ளப்படுகிறது.

பாரத நீதித்துறையில் நூதன அத்தியாயத்திற்கு வழி பிறந்தது என்று அனைவரும் புகழும் விதமாக புதிய செக்ஷன்களும் நல்ல திருத்தங்களும் எடுத்து வந்துள்ளார்கள்.

எந்த போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுத்தாலும் உடனே எடுத்துக் கொள்ளவேண்டும் என்ற நிபந்தனை, பெண்கள் மற்றும் சிறுமிகளின் மீது அதிகரிக்கும் குற்றங்களுக்கான விசாரணையை விரைவாக முடிக்க வேண்டும் என்ற சட்டம் போன்றவை நல்ல தீர்மானங்கள்.

‘இந்தியன் பீனல் கோட் 1860’ – என்பது “பாரதிய நியாய சம்ஹிதை 2023” ஆக
மாறியது. ‘கிரிமினல் ப்ரோசீஜர் கோட் 1973’ – “பாரதிய நாகரிக சுரக்ஷா சம்ஹிதா 2023 “ என்றும் ‘தி இந்தியன் எவிடென்ஸ் ஆக்ட் 1872’ – “பாரதிய சாக்ஷியா அதினியம் 2023” என்றும் மாறியது. இவ்விதமாக நம் தேசிய சொற்களால் மாற்றம் நிகழ்வது குறிப்பிடத்தக்கது.

ALSO READ:  வடகிழக்கில் ஹிந்து தேசியம் : மேகாலயா

அந்தமான் நிகோபார் தீவுகளின் தலைநகர் போர்ட்பிளேர், ஸ்ரீவிஜயபுரம் என்று
மாறியது. இப்படிப்பட்ட பெயர் மற்றங்களும் தேசிய உணர்வை பிரகாசிக்கச்
செய்யும். நல்ல உற்சாகத்தை ஏற்படுத்தும்.

பலப்பல சிறந்த பரிணாமங்களோடு அனைத்து துறைகளிலும் முன்னேறி வந்தாலும் இந்த தேசத்திலேயே இருந்து வாழ்ந்து தின்று வரும் தேச துரோகிகள் தலைவர்காளாக வலம் வந்து உலக அளவில் பொய்ப் பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகிறார்கள்.

இந்தப் பின்னணியில் தேசிய உணர்வுள்ளவர்கள் அனைவரும் உண்மையை அடையாளம் கண்டு தேசத்தின் உயர்வை பெருமையாக கர்வமத்தோடு பரப்ப வேண்டிய தேவை உள்ளது.


(ருஷிபீடம், மாத இதழ், தலையங்கம், அக்டோபர், 2024)


Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

பல ஆயிரக்கணக்கான பாடல்களால் ரசிகர்களைக் கவர்ந்து இழுத்த பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி தமது 88வது வயதில் மைசூரில் இன்று காலமானார்.

முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

பல ஆயிரக்கணக்கான பாடல்களால் ரசிகர்களைக் கவர்ந்து இழுத்த பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி தமது 88வது வயதில் மைசூரில் இன்று காலமானார்.

முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

ஆக்கிரமிப்பாளர்களுக்கே கோயில் சொத்துகளை பட்டா போடுவதா? தவெக., அரசுக்கு வலுக்கும் கண்டனங்கள்!

அரசு நிலத்தை ஆக்கிரமிப்பது சட்டவிரோதம் என்றால் கோவில் நிலத்தை ஆக்கிரமித்து அபகரிப்பதை தமிழக அரசு அனுமதிக்கலாமா?

அருந்தமிழ் 50: திறனாய்வு!

கவிஞர் ஜெயஸ்ரீ எம்.சாரி அவர்கள் அருந்தமிழ் என்னும் தலைப்பில் அருமையான புதுக்கவிதைகள் 50 வகையான தலைப்புகளில் கவிதைகளைத் தந்துள்ளார்.

பாகிஸ்தானுடன் கொல்லைப்புற வழியில் பேச்சுவார்த்தையா?

அதன் உண்மை நிறத்தை உள்ளபடியே தெரிந்ததால் 'பயங்கரவாதமும் பேச்சுவார்த்தையும் ஒன்றாக பயணிக்காது' என்ற கொள்கையில் இந்தியா உறுதியாக உள்ளது. இதைத்தான் கொழும்பு உட்பட எல்லா மேடைகளிலும் இந்தியா தொடர்ந்து சொல்லி வருகிறது.

Entertainment News

Popular Categories