January 18, 2025, 6:52 AM
23.7 C
Chennai

ஜனகை மாரியம்மன் கோயிலில் விஜயதசமி அம்பு எய்தல்!

#image_title

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவிலில் விஜயதசமியை முன்னிட்டு அம்பு எய்தல் நடைபெற்றது

சோழவந்தான் ஜெனகைமாரியம்மன் கோவிலில் விஜயதசமி விழாவை முன்னிட்டு அம்மன் கோவிலில் இருந்து புறப்பட்டு வைகை ஆற்றுக்கு சென்று அம்பு எய்தல் நடந்தது. அர்ச்சகர் சண்முகவேல் பூஜைகள் செய்து பிரசாதம் வழங்கினார்.

இதில் கோவில் செயல் அலுவலர் இளமதி, கோவில் பணியாளர்கள் பூபதி, கவிதா, வசந்த் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

இதே போல் திரௌபதி அம்மன் கோவிலில் அம்மன் புறப்பட்டு வைகை ஆற்றுக்கு சென்று அம்பு எய்தல் நிகழ்ச்சி நடந்தது. இதில் பரம்பரை அறங்காவலர்கள் அர்ஜுனன், திருப்பதி, ஜவஹர்லால்,குப்புசாமி உட்பட ஏராளமானோர்  கலந்து கொண்டனர். ஜெனகநாராயண பெருமாள் கோவிலில் சுவாமி வைகை ஆற்றுக்கு சென்று அம்பு எய்தல் நடந்தது.

இதில் செயல் அலுவலர் சுதா, பார்த்தசாரதி பட்டர், கோவில் பணியாளர் முரளிதரன் உள்பட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

ALSO READ:  லகு ரக வாகன உரிமம் வைத்துள்ளவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி!

தென்கரை அகிலாண்டேஸ்வரி அம்மன் கோவிலில், நடந்தஅம்பு எய்தல் விழாவில் செயல் அலுவலர் கார்த்தியைசெல்வி, ஆலய பணியாளர்கள் நாகராஜன், மணி , திவ்யா,ஜெகநாதன் உள்படஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். திருவேடகம் ஏடகநாதர் சுவாமி கோவிலில் நடந்த விஜயதசமி விழாவில் சுவாமி கேடயத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து வழி நெடுக தெருக்கள் உள்ள இடங்களில் சுவாமி எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.  இதனை தொடர்ந்து அருகில் உள்ளதச்சம்பத்தில் உள்ள மண்டகப்படிக்கு பகலில் வந்து சேர்ந்தது.

இங்கே சுவாமி குதிரை வாகனத்தில்  அலங்காரமாகி பூஜைகள் நடந்தது. பரசுராமபட்டர் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கினார்.இதைத் தொடர்ந்து இங்கு உள்ள நந்தவனத்தில் அம்பு எய்தல் நிகழ்ச்சி நடந்தது.

பரம்பரை அறங்காவலர்சேவுகன் செட்டியார், செயல் அலுவலர் சரவணன் கோவில் பணியாளர் பழனிகுமார் உள்பட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

மேலக்கால் வெங்கடேச பெருமாள் கோவிலில் விஜயதசமியை முன்னிட்டு பெருமாள் திருவீதி உலா வந்தார் இதில் ஆங்காங்கே பக்தர்கள் பொதுமக்கள் தேங்காய் உடைத்து பெருமாளை தரிசித்து  வழிபட்டனர் அன்னதானம் வழங்கப்பட்டது. சோழவந்தான், காடுபட்டி  காவல் நிலைய போலீசார் பாதுகாப்பு செய்திருந்தனர்

ALSO READ:  திருப்பரங்குன்றத்தை சிக்கந்தர் மலை ஆக்கும் சதியை முறியடிப்போம்: இந்து முன்னணி!

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜன.18 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

செகந்திராபாத் – கொல்லம் ரயில் மேலும் ஒரு சேவை நீட்டிப்பு!

முன்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. விரைவில் உங்கள் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யவும். தென்காசி, விருதுநகர் மாவட்ட பயணிகளுக்கு இந்த சேவை மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

ஹிந்துத்துவமே ஒரே தீர்வு!

ரஷ்யாவில் 15 தனி அடையாளங்கள், 15 தனி நாடுகளாக உருவாகின. ஆனால் இங்கோ வாய்ப்பு கிடைத்த போதிலும் 565 சமஸ்தானங்களும் ஒரே நாடாக ஆகின.

ஆன்மீகம் – வாழ்வின் நோக்கம்

வாழ்க்கையின் நோக்கம் என்ன ? இது மகத்தான கேள்வி. நீங்கள் விழிப்புணர்வுடனோ அல்லது தெரியாமலோ இதை கேட்டிருக்கலாம். நம் அனுபவத்தின் அடித்தளமாக இந்த கேள்வி உள்ளது.

பஞ்சாங்கம் ஜன.17 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை