January 19, 2025, 8:51 AM
23.5 C
Chennai

பசும்பாலுக்கு பணம் உயர்த்திக் கோரி ஆர்ப்பாட்டம்

#image_title

உசிலம்பட்டி: பொங்கலுக்கு போனஸ், பசும்பாலுக்கு 10 ரூபாய் உயர்த்த கோரி கறவை மாடுகளுடன் உசிலம்பட்டியில் பால் உற்பத்தியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

தமிழ்நாடு முழுவதும் பால் உற்பத்தியாளர்களின் நீண்ட நாள் கோரிக்கையாக ஒவ்வொரு ஆண்டு தோறும் பால் உற்பத்தி விலையை உயர்த்த கோரிக்கை, 50 சதவீத மானிய விலையில் தீவணங்கள், பொங்கலுக்கு போனஸ் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பில் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.

இதன் ஒரு பகுதியாக மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே கருமாத்தூர் பால் உற்பத்தியாளர்கள் மையத்தில் பால் உற்பத்தி விலையை 10 ரூபாய் உயர்த்த கோரியும், கால்நடை தீவணத்திற்கு 50% மாணியம் வழங்க கோரியும், பொங்கல் போனஸ் பெற வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கறவை மாடுகளுடன் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். தொடர்ந்து, பொதுமக்களுக்கு இலவசமாக பால் வழங்கி நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ALSO READ:  தீபாவளி ஸ்பெஷல்: சென்னையில் இருந்து குமரி, செங்கோட்டைக்கு ரயில்கள்!

மேலும் , ஒவ்வொரு ஆண்டும் போராடியே பால் விலையை உயர்த்தும் நிலை இல்லாது, ஒவ்வொரு ஆண்டின் உற்பத்தி மற்றும் தீவணங்களின் விலை உயர்வுக்கு ஏற்ப கனிமாக பால் விலையை அரசே உயர்த்தி வழங்க வேண்டும் என்றும் பால் உற்பத்தி விலையை உயர்த்த கோரி தொடர்ந்து பால் நிறுத்த போராட்டம், கறவை மாடுகளுடன் சாலை மறியல் உள்ளிட்ட போராட்டங்களை நடத்த திட்டமிட்டுள்ளதாக பால் உற்பத்தியாளர்கள் தெரிவித்தனர.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜன.19 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சபரிமலை படிபூஜை நிறைவு; ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு!

சபரிமலை ஐய்யப்பன் கோவிலில் தற்போது மண்டல, மகர விளக்கு பூஜை வழிபாடுகள் விழாக்கள் முடிந்து மகரம் மாதபூஜை வழிபாடுகள் ஐயப்பனுக்கு நடந்து வருகிறது

சபரிமலை பெருவழிப்பாதை மூடல்!

கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தையாய் நினைத்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தினமும் பயணித்து வந்த சபரிமலை பெருவழிப் பாதை நடை தற்போது மூடப்பட்டதால்

இன்று நெய் அபிஷேகம், நாளை தரிசனத்துடன் மகரவிளக்கு கால வழிபாடு நிறைவு!

பக்தர்கள் சுவாமி ஐயப்பனை தரிசனம் செய்யலாம் என்ற நிலையில், இன்று காலை நெய்யபிஷேகத்துக்காக பக்தர்கள் கூட்டம் மிக அதிகமாகவே இருந்தது

பஞ்சாங்கம் ஜன.18 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.