June 14, 2025, 7:07 PM
35.7 C
Chennai

டங்ஸ்டன் கனிம சுரங்கம் அமைக்க எதிர்ப்பு: விவசாயிகள் பேரணி!

madurai farmers protest against tungsten
#image_title

மதுரை மாவட்டம் அரிட்டாப்பட்டி டங்ஸ்டன் கனிம சுரங்கதத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஐந்தாயித்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் நரசிங்கம்பட்டியில் இருந்து வாகன பேரணியாக புறப்பட்டு மதுரை தல்லாக்குளத்தில் உள்ள தலைமை தபால் நிலையத்தில் முற்றுகையிட்டு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் செய்வதாக அறிவித்து, இன்று நரசிங்கம்பட்டியில் இருந்து பேரணியாகச் சென்றனர். ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் நடைப்பயணம் ஆகவும் புறப்பட்டுச் சென்றனர்.

மதுரை மாவட்டம் மேலூர் பகுதியில் டங்ஸ்டன் கனிம சுரங்கம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து மேலூர் முல்லைப் பெரியாறு ஒருபோக பாசன விவசாயிகள் சங்கம் சார்பாக நேற்று கண்டன கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

நரசிங்கம்பட்டி பெருமாள் கோவிலில் இருந்து தேசிய நெடுஞ்சாலை வழியாக நடைப்பயண பேரணியாக மதுரை தல்லாகுளம் தலைமை தபால் நிலையம் முன்பாக ஆர்ப்பாட்டம் நடைபெறுவதாக விவசாயிகள் அறிவிப்பு செய்து இருந்தனர்.

இந்நிலையில் நடைபயண பேரணிக்கு அனுமதி மறுத்த போலீசார் தல்லாகுளம் தலைமை தபால் நிலையம் முன்பாக ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கு மட்டும் அனுமதி வழங்கினர்.

அனுமதியைத் தொடர்ந்து அரிட்டாபட்டி அ.வல்லாளப்பட்டி, கல்லம்பட்டி, மாங்குளம், கிடாரிப்பட்டி, வெள்ளலூர், உறங்கான்பட்டி, அம்பலகாரன்பட்டி உள்ளிட்ட மேலூர் பகுதியில் உள்ள பல்வேறு கிராமங்களில் இருந்து சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் நரசிங்கம்பட்டியில் ஒன்று கூடி அங்கிருந்து வாகன அணிவகுப்பு நடத்தி தல்லாகுளத்தில் உள்ள தலைமை தபால் நிலையம் முன்பாக கண்டன கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தச் சென்றனர்.

விவசாயிகளின் இந்தப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து மேலூர் நகர் பகுதி வெள்ளலூர்நாடு கொட்டாம்பட்டி, கருங்காலக்குடி, கீழவளவு உள்ளிட்ட மேலூர் தொகுதியின் அனைத்து பகுதிகளிலும் வணிகர் சங்கங்கள், தினசரி காய்கறி மார்க்கெட் சங்கம், நகை கடை வியாபாரிகள் சங்கம் உள்ளிட்ட அனைத்து சங்கத்தினரும் கடைகளை அடைத்து அவர்களும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர்.

அவர்கள் நான்கு வழிச்சாலை வழியாக வாகன பேரணியாக வந்து ஒத்தக்கடை மாட்டுத்தாவணி நீதிமன்றம் வழியாக தமுக்கம் மைதானம் வந்து தலைமை தபால் நிலையத்தை முற்றுகையிட்டு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். பிஎஸ்என்எல் அலுவலகம் எதிரே ஆர்ப்பாட்டத்துக்கு செல்லக்கூடாது என போலீஸார் தடுப்புகளை வைத்திருந்தனர். அதையும் மீறி போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தடுப்புகளை அகற்றிவிட்டுச் செல்ல முயன்றபோது, போலீசாருக்கும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பேரணி நிறைவடைந்ததை முன்னிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.

முன்னதாக, போராட்டத்தில் ஈடுபடுபவர்களிடம் கண்ணியக் குறைவாக நடந்து கொள்ளக்கூடாது என மாநகர வடக்கு துணை ஆணையர் அனிதா காவல்துறையினருக்கு வலியுறுத்தியிருந்தார்.

இந்த ஆர்ப்பாட்டத்தை முன்னிட்டு மதுரை மாவட்டம் மேலூர் ,நரசிங்கம்பட்டி கொட்டாம்பட்டி ,சிட்டம்பட்டி, டோல்கேட் ,ஒத்தக்கடை மாட்டுத்தாவணி ,அவுட் போஸ்ட் தல்லாகுளம் ,காந்தி அருங்காட்சியகம் , மாவட்ட ஆட்சியர் அலுவலகம் உள்ளிட்ட பகுதிகளில் காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர். 500க்கும் மேற்பட்ட காவல்துறையினர் தடுப்புகள் அமைத்து பாதுகாப்பு முன்னேற்பாடுகளை செய்தனர்.

விவசாயிகளின் பேரணி காரணமாக, தேசிய நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. வெகுநேரம் காத்திருந்து பயணிகள் செல்ல வேண்டியிருந்தது. இதனால் மதுரை திருச்சி சாலையில் பயணிகள் பெரும் சிரமத்துக்கு உள்ளாகினர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

புட்டின் நீங்களுமா?

ஈரானில் உண்மையில் அணு ஆயுதம் இருந்ததா என்பது கேள்விக்குறி. இதே போலத் தான் சதாம் ஹுசைனையும்

திருக்கூடல் மலையும் தென்பழனியும்

மீனாட்சி அம்மன் கோவிலில் உள்ள சிவனும் இவரும் ஒரே நேர் கோட்டில் இணையும் படி அமைக்கப்பட்டுள்ளது

விமான விபத்தில் உயிரிழந்தோருக்கு மதுரையில் அஞ்சலி!

அகமதாபாத் விமான விபத்தில் உயிர் இழந்தவர்களுக்கு மதுரையில் சிறப்பு பிரார்த்தனை -தீப அஞ்சலி செலுத்தப்பட்டது.

சம்பளம் வழங்கக் கோரி மதுரை பல்கலை., பணியாளர்கள் போராட்டம்!

ஆண்டுகளாகவே காமராஜர் பல்கலைக்கழக பேராசிரியர்கள் ஊழியர்கள், அலுவலர்கள் சம்பளம் ஓய்வூதியம் வழங்கப்படாத கண்டித்து தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு

போயிங் போய்விட்டது! 11A மட்டும் தப்பியது!

விமானம் மேலேற முடியாமல் திணறி தரை இறங்கியுள்ளது.அதாவது பறக்க போதிய உந்துவிசை கிடைக்காமல் தரையில் விழுந்துள்ளது.

Topics

புட்டின் நீங்களுமா?

ஈரானில் உண்மையில் அணு ஆயுதம் இருந்ததா என்பது கேள்விக்குறி. இதே போலத் தான் சதாம் ஹுசைனையும்

திருக்கூடல் மலையும் தென்பழனியும்

மீனாட்சி அம்மன் கோவிலில் உள்ள சிவனும் இவரும் ஒரே நேர் கோட்டில் இணையும் படி அமைக்கப்பட்டுள்ளது

விமான விபத்தில் உயிரிழந்தோருக்கு மதுரையில் அஞ்சலி!

அகமதாபாத் விமான விபத்தில் உயிர் இழந்தவர்களுக்கு மதுரையில் சிறப்பு பிரார்த்தனை -தீப அஞ்சலி செலுத்தப்பட்டது.

சம்பளம் வழங்கக் கோரி மதுரை பல்கலை., பணியாளர்கள் போராட்டம்!

ஆண்டுகளாகவே காமராஜர் பல்கலைக்கழக பேராசிரியர்கள் ஊழியர்கள், அலுவலர்கள் சம்பளம் ஓய்வூதியம் வழங்கப்படாத கண்டித்து தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு

போயிங் போய்விட்டது! 11A மட்டும் தப்பியது!

விமானம் மேலேற முடியாமல் திணறி தரை இறங்கியுள்ளது.அதாவது பறக்க போதிய உந்துவிசை கிடைக்காமல் தரையில் விழுந்துள்ளது.

பஞ்சாங்கம் ஜூன் 13 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

அகமதபாதில் விமானம் விழுந்து பயங்கர விபத்து!

அமித் ஷா மற்றும் விமான போக்குவரத்து அமைச்சர் ராம் மோகன் நாயுடு ஆகியோரை அகமதாபாத் செல்ல உத்தரவிட்டார்.

பெண்களை ‘ஓஸி’ என கேலி பேசும் திமுக.,வினர் இனி வெட்டியாக வீட்டில் அமர்வார்கள்!

வரும் 2026 தேர்தலில், ஒவ்வொரு திமுக சட்டமன்ற உறுப்பினரையும் தோற்கடித்து, வீட்டில் உட்கார வைத்து, உங்கள் ஆணவத்துக்கு பொதுமக்கள் பதிலடி கொடுப்பார்கள்.

Entertainment News

Popular Categories